மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன் - 39

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன் - 39

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39
சிறிது வெளிச்சம்!
உடைகள் பேசும் உண்மை!
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

டைகள் நமது ரசனையின் முதல் அடையாளங்கள். என்ன நிறம் நமக்குப் பிடிக்கிறது, ஏன் அதுபோன்ற ஆடையைத் தேர்வுசெய்கிறோம் என்பது பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படாத ரகசியம். புத்தாடைகள் எப்போதுமே நம்மை உற்சாகம்கொள்ளவைக்கின்றன. மற்றவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்று உள்ளூர மனது சந்தோஷம்கொள்கிறது. சரியாக உடை அணியாத நாளில் மனம் சோர்ந்துவிடுகிறது; அல்லது, கோபம்கொள்கிறது.

சிறுவயதில் விதவிதமான ஆடைகளுக்கு ஆசைப்பட்டுக் கிடைக்காமல்போன ஆதங் கம் யாவர் மனதிலும் ஓரமாக இருக்கவே செய்கிறது. புத்தாடை கிடைக்கும் என்பதற் காகவே வருடத்தில் இரண்டு, மூன்று முறை பிறந்த நாள் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். பால்ய வயதின் நிராசைகளை, வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்கத் துவங்கியதும் தீர்த்துக்கொள்ளத் துவங்குகிறோம்.

தன்னுடைய முதல் சம்பளத்தில் புத்தாடை வாங்குவதில் ஒரு பெருமை இருக்கிறது. அப்படி வாங்கி அணியும் உடை மற்ற உடைகளைவிட மிக அழகாகவும், பெருமையாகவும் இருப்பதுபோலத் தோன்றக்கூடும். அவை வெறும் மன மயக்கங்கள்தான்; என்றாலும், அந்த மயக்கம் தேவையாக இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

உடைகள் ஏற்படுத்தும் கனவுகள் வாழ்வில் மறக்க முடியாதவை. ஒவ்வொரு வயதி லும் ஒருவித உடை ஆதங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. எனது பள்ளி வயதில் என்னோடு படித்த ஒரு சிறுவன் சிவப்பு நிறத்தில் இளமஞ்சள் வட்டமிட்ட ஒரு புதுச் சட்டையை அணிந்து வந்திருந்தான். அதுபோன்ற ஒரு சட்டை தனக்குக் கிடைக்காதா என்று வகுப்பில் இருந்த ஒவ்வொரு பையனும் ஆசைப்பட்டார் கள்.

அந்த சட்டைத் துணி எங்கே கிடைக்கிறது, எந்த டெய்லரிடம் அதைத் தைத்தான் என்று மாறிமாறி விசாரித்தார்கள். பையனோ பெருமிதத்துடன், தனது அப்பா மிலிட்டரியில் இருந்து திரும்பி வரும்போது, நாக்பூரில் வாங்கி வந்தது என்றான். ஏன் நமது அப்பாக்கள் மிலிட்டரியில் வேலை செய்யவில்லை என்று என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் பெருமூச்சுவிட்டான்.

இவனுக்காகவே அதுபோன்ற ஒரு சட்டையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடித்தேன். அடுத்த பிறந்த நாளுக்குச் சட்டை வாங்கச் சென்றபோது அதே நிறம், அதுபோன்ற வட்டம் உள்ள சட்டை கிடைத்துவிடாதா என்று கடை கடையாகத் தேடினேன். ஆனால், அது போன்ற சட்டை கிடைக்கவே இல்லை.

வேறு நிறத்தில் புதுச் சட்டை வாங்கியபோதும் மனதின் ஆதங்கம் தீரவில்லை. அந்தச் சிறுவன் பள்ளி மாறி வேறு ஊருக்குச் சென்றுவிட்டான். அவன் பெயர்கூட இன்று மறந்துவிட்டது. ஆனால், அந்தச் சிவப்பு நிற வட்டம்போட்ட சட்டை மனதில் அப்படியே இருக்கிறது. இப்படி உடைகள் நமக்குள் மறக்க முடியாத சில ஏக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. அவை ஒருபோதும் தீராதவை.
கல்லூரி வயதில் நட்பே பிரதானம். அப்போது ஒன்றுபோல ஒரே நிறத்தில் உடை அணிந்துகொள்வது நட்பின் அடையாளம். ஒருவர் சட்டையை மற்றவர் போட்டுக்கொள்வார்கள். நண்பர்களை இப்படிப் போட்டுக்கொள்ள அனுமதிக்கும் மனது, வீட்டில் உள்ள அண்ணனோ, தம்பியோ அதே சட்டையைக் கேட்காமல் எடுத்துப் போட்டுவிட்டால் கோபம்கொள்ளும்; சண்டை போடத் தூண்டும். உடைகள் குறித்த விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

உடைகள் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அதன் பயன்பாடு வியப்பானது. அம்மாவின் சேலை குழந்தைக்குத் தொட்டில் ஆவதும், தங்கையின் தாவணியாவதும், தலையணை உறையாவதும், பின்பு அங்கிருந்தும் இடம்பெயர்ந்து சமையலறையின் கைப்பிடித் துணியாவதுமாக ஒரு பெரிய காலமாற்றத்துக்கு உள்ளாகிறது. ஆண்களின் வேட்டியோ, இட்லித் துணியாகவோ, தரை துடைக்கும் கிழிந்த துணியாகவே மாறுவதோடு தன் பணியை முடித்துக்கொள்கிறது. பேன்ட் - சட்டைகள் அதற்கும் பயன்படுவது இல்லை. அவை பயன்பாடு கடந்தவுடன் யாருக்காவது கொடுக்கப்படுகின் றன. நமது உடைகளில் நமது ஆசைகள் ஒட்டி இருக்காதா?

தனக்கு விருப்பமான சேலை கறைபட்டதற்கு, கிழிந்ததற்கு அழும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். நிஜமான வலி அது. நினைத்து நினைத்துப் பலவருடங் கள் அழுபவர்கள் இருக்கிறார்கள். உடை விஷயத்தில் ஆண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதுஇல்லை. அரிதாகவே சிலர் அப்படி இருக்கிறார்கள்.

ஆண்களில் பலர் நாற்பது வயதைக் கடந்தவுடன் உடைகள் மீதான ரசனை உணர்வை இழக்கத் துவங்குகிறார்கள். பெண்களுக்கோ வயது அதிகமாகும்போதுதான் உடைகளின் மீதான ரசனையும் அக்கறையும் அதிகமாகிறது. பார்த்துப் பார்த்து தேர்வுசெய்கிறார்கள். புதுவித உடையை அணிந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். மயில்கழுத்து நிறம், கத்திரிப் பூ நிறம், துத்தநாக கலர் என்று துல்லியமாக நிறத்தைச் சொல்லி கடைகளில் தேடுகிறார்கள். உடைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தேர்வுசெய்வதிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிக ஆர்வமுடையவர்கள். உடைகள் குறித்துப் புரிந்துகொள்ள முடியாத அதீத பற்றும், காரணமற்ற கோபமும் பெண்களின் இயல் பாக இருக்கிறது.

ஹிந்தி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான பிரேம்சந்த், 'பட்டுச் சட்டை' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஒருவன் பணக்கார வீட்டைச் சேர்ந்தவன். மற்றவன் ஏழை. சலவைத் தொழிலாளியின் வீட்டுப்பிள்ளை.

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

பணக்காரச் சிறுவனுக்குத் தினம் ஒரு புது உடை கிடைக்கிறது. ஏழைச் சிறுவன் எப்போ துமே கிழிந்த டவுசர் - சட்டை களை அணிந்து வருகிறான். அதற்காக தபால்பெட்டி என்று கேலி செய்யப்படுகிறான். என்றாவது ஒரு நாள் தானும் பணக்காரச் சிறுவனைப்போல உடை அணிய வேண்டும் என்று கனவு காண் கிறான்

ஒரு நாள், பணக்காரச் சிறுவனின் சில்க் சட்டை சலவைக்காகத் தனது வீட்டில் கிடப்பதை ஏழைச் சிறுவன் பார்க்கிறான். அதை ஒரு முறை அணிந்துபார்க்க விரும்பி, யாரும் அறியாமல் எடுத் துப் போட்டுக்கொள்கிறான். அந்த உடை அவனை மிகவும் சந்தோஷம்கொள்ளவைக்கிறது. உற்சாகத்தோடு அவன் ஆற்றின் பக்கம் ஓடுகிறான். அங்கே பணக்காரப் பையனின் வீட்டு வேலையாள் அதைக் கண்டுபிடித்துவிடு கிறான்.

பொது இடத்தில் நிறுத்திவைத்து, அந்தச் சிறுவனின் சட்டை - டிராயரை உருவிஎடுக்கி றார்கள். சிறுவன் அவமானம் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்து நிற்கிறான். 'உனக்குப் பட்டுச் சட்டை கேட்குதா?' என்று பிரம்பால் அடி அடியென அடிக்கிறார்கள். அதைப் பணக்காரச் சிறுவன் பார்த் துக் கை தட்டிச் சிரிக்கி றான். ஏழைச் சிறுவன் அணிந்த பட்டுச் சட்டையை அவன் கண் முன்னாலே தீ வைத்து எரித்துவிடுகிறார்பணக் கார அப்பா. அவமானப்பட்ட சிறுவனை அவனது தந்தை பள்ளியைவிட்டே நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு அவனும் சலவைத் தொழிலாளியாகவே வளர்கிறான். காலம் மாறுகிறது.

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

அந்தச் சிறுவன் கொல்கத்தாவுக்குப் போகிறான். வளர்ந்து அங்கேயே வாழத் துவங்குகிறான். ஒருநாள் சாலையோரம் ஒரு பிச் சைக்காரன் செத்துக்கிடக்கிறான். அவனது இறுதிக் காரியத்துக்காக போகிற வருகிறவர்களிடம் வசூல் செய்கிறான் இன்னொரு பிச்சைக் காரன். அதைக் கண்ட சலவைத் தொழிலாளி, கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்க்கிறான். சிக்குப் பிடித்த தாடியும் மெலிந்த தோற்றமுமாக பிச்சைக்காரன் நிர்வாணமாகச் செத்துக்கிடக்கிறான். அவன் உடலை ஈக்கள் மொய்க்கின்றன.

இறந்துபோனவனின் கண்களைக் கண்டபோது அது தன்னோடு படித்த பணக்காரச் சிறுவன் என்று நினைவுக்கு வருகிறது. வாழ்ந்து கெட்டு இப்படி அநாதைப் பிணமாகக் கிடக்கிறானே என்று மனம் வேதனைகொள்கிறது.

பிறகு, விடுவிடுவென வேக மாகச் சென்று தனது மனைவியின் நகையை அடமானம்வைத்து ஜவுளிக் கடையில் ஒரு பட்டு வேட்டி ஒன்றை விலைக்கு வாங் கிக்கொண்டுபோய் பிணத்தின் மீது போர்த்திவிடுகிறான். அதைக் கண்ட இன்னொரு பிச்சைக்காரன் வியப்போடு, 'எதற்காக ஒரு பிச்சைக்காரனுக்கு நீ பட்டு வேட்டி போர்த்துகிறாய்?' என்று கேட்கிறான்.

'அது ஒரு கடன். மிகவும் நாள்பட்ட கடன். அதை இப்போதுதான் திருப்பிச் செலுத்த முடிந்தது' என்று சலவைத் தொழிலாளி இறந்துபோன நண்பனுக்காகக் கண்ணீர்விட்டபடியே வீடு திரும்பிச் சென்றான் என்று கதை முடிகிறது

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

உடைக்காகச் சிறுவயதில் பட்ட அவமானங்கள் எளிதில் மறையக்கூடியது இல்லை. அதே நேரம், பால்ய வயதின் நட்பு எவ்வளவு வயதானபோதும் அதன் கசப்புகளை மீறி மீண்டும் துளிர்விடவே செய்கிறது. உடை களின் பயணம் மிக வியப்பா னது.

1996-ம் ஆண்டு வெளியான டச்சு திரைப்படம் ஜிலீமீ ஞிக்ஷீமீss. அலெக்ஸ் வான் வார்மர்டெம் இயக்கிய இப்படம், நீல நிற உடை ஒன்று எப்படி ஒவ்வொரு பெண்ணிடம் மாறி மாறிப் பயணம் செல்கிறது என்பதை மிக இயல்பான வேடிக்கையுடன் விவரிக்கிறது. ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பெண்கள் அணியும் தனித்துவமான கவுன் ஒன்றினை வடிவமைக்கும்படியாக ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம் சொல்கிறது. அவர் நீல நிறத்தில் ஒற்றை இலை வேலைப்பாடுகொண்டதாக ஓர் உடையை உருவாக்குகிறார். இதற்கான உந்துதல் ஒரு சிவப்பிந்தியப் பெண்மணி அணிந்த உடையில் இருந்து அவருக்குக் கிடைக்கிறது.

அந்தப் புதிய ரக உடைபோல பல ஆயிரம் தயாரிக்கப்பட இருக்கின்றன. அதை யார் முதலில் அணிந்துகொள்ளப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் படம் துவங்குகிறது. ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு இந்த உடை எப்படிப் போகிறது என்பதே படத்தின் சுவாரஸ்யம். அதுபோலவே இந்த உடையை அணியும் பெண்கள் வாழ்க்கை என்னவாகிறது என்றும் படம் விவரிக்கிறது.

61 வயதான பெண் இந்த உடையை முதன்முறையாக வாங்கி அணிகிறாள். அது அவளுக்குப் பொருத்தமான உடை இல்லை என்று கணவன் எரிச்சல்படுகிறான். அது அவர்களுக்குள் மனவேற்றுமையை உருவாக்குகிறது. அந்த உடை அவளது வேலைக்காரப் பெண்ணுக்குக் கிடைக்கிறது. அவள் அதை அணிந்து கொள்ளும்போது தனது உடல்வாளிப்பு காம உணர்வைத் தூண்டுவதாக உணர்கிறாள். அவள் ஒரு புறக்கணிக்கப்பட்ட ஓவியரோடு சேர்ந்து வாழ்கிறாள்.

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

ஒருநாள் அவள் இந்த நீல உடை அணிந்து ரயிலில் பயணம் செய்யும்போது, அந்த உடையில் மயங்கி ஒருவன் அவளைப் பின்தொடர்கிறான். அவர்களுக்குள் ரகசிய உறவு ஏற்படுகிறது. அதில் ஏற்பட்ட குழப்பத்தில் அந்த உடை அங்கே இருந்து பழைய துணிக் கடைக்குப் போடப்படுகிறது. அதைச் சற்று உருமாற்றி மீண்டும் விற்பனை செய்கிறார்கள். இப்போது அதை 16 வயதுப் பெண் ஒருத்தி விலைக்கு வாங்கி அணிகிறாள். அது அவளிடம் இருந்து திருடுபோகிறது. அதை வேறு பெண் அணியத் துவங்குகிறாள். இப்படியாக ஒரு உடை மேற்கொள்ளும் பயணத்தோடு ஒரே ஆடை வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு கனவுகளையும் வெவ்வேறு குழப்பங்களையும் எப்படி உருவாக்குகிறது என்பதை யும் விவரிக்கிறது.

உடைகள் நமது மனதையே பிரதிபலிக்கின்றன. நாம் மாறத் துவங்கியதும் நமது உடைகளும் மாறிவிடுகின்றன. அழகான உடை என்று தனியாக எதுவும் இல்லை. அது அணிந்துகொள்பவரின் சந்தோஷம் மற்றும் மனவிருப்பத்தால் அழகுகொள்கிறது என்பதையே படம் சுட்டிக்காட்டுகிறது. அதுதான் உடைகள் சொல்லும் உண்மையும்கூட!

-இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39

அஸ்வின் கார்த்திக், பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர். சிறுவயதில் இருந்து 'செரிபிரல் பால்சி' என்னும் தீவிரமான உடல்குறைபாடுகளுடன் போராடி, இன்று இன்ஜினீயராக வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம், அவரது நண்பர் பரத். ஆரம்ப வகுப்பில் ஒன்றாகப் படிக்கத் துவங்கியபோது, இருவருக்கும் நட்பு உருவானது. தனது நண்பர் அஸ்வினால் பேனா பிடித்து எழுத முடியாது, தனியே எதையும் செய்ய முடியாது என்று உணர்ந்த பரத், அவருக்காகப் பள்ளியில் பரீட்சை எழுதத் துவங்கி இருக்கிறார். அந்த வயதில் இருந்து இன்று வரை நாள் முழுவதையும் அஸ்வினுக்காகச் செலவிடும் பரத், அதற்காகத் தானும் பொறியியல் படித்திருக்கிறார். உடல் குறைபாடு கொண்டவர் என்று நண்பரை ஒதுக்கிவிடாமல், அவரது முன்னேற்றமே தனது முன்னேற்றம் என்று விடாப்பிடியான நம்பிக்கைத் துணையாக இருந்திருக்கிறார் பரத். இந்த இருவரும் 2009-ம் ஆண்டின் சிறந்த இளைஞர்கள் என்ற பிரிகேட் விருதைப் பெற்றிருக்கிறார்கள்!

 
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39
சிறிது வெளிச்சம்! - உடைகள் பேசும் உண்மை! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 39