மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03

சிறிது வெளிச்சம்!
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03


10-06-09
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03
 
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03
.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03

ரங்கள் பூமியின் வெகு ஆழத்தினுள் வேர் விட்டு இருப்பவை. சலனம் இல்லாமல் தோன்றும் மரத்தின் தோற்றத்தைத் தாண்டி, அது பூமியைத் தன் அடர்ந்த வேர்களால் இறுகப் பற்றிக்கொண்டு, வேட்டையில் ஓடும் மிருகம் போலத் தன் வேர்களைப் பூமி எங்கும் பரவவிட்டு, பாறைகளை உடைத்துத் தன் இருப்புக்கான தண்ணீரைத் தேடிக்கொள்கிறது. மரமாக வாழ்வதும் ஒரு போராட்டமே!

மரங்கள் மட்டும் இல்லை; கதைகளும் வேர் கொண்டவையே. சிறு வயதில் கேட்ட கதைகள் இன்றும் மனதின் அடி ஆழத்தில் வேர் ஊன்றித் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன. யோசிக்கையில், கதைகள் அசைகின்றன; எழுந்து வருகின்றன.

கதை, பாதரசத்தைப் போல கையால் தொட முடி-யாத வசீகரமான இயக்கம். வாழ்வின் காயங்களும் சந்-தோ ஷங்களுமே கதைகள் ஆகின்றன. கதைகள் நம் உடலில் உள்ள வடுவைப் போல நம் கூடவே இருக்கக் கூடியது. தேவைப்படும்போது மட்டுமே வெளிக்காட்டப் படுகிறது.

என் பள்ளி நாட்களில் நீதிபோதனை வகுப்பில் ஒரு கதையைக் கேட்டேன். ஒரு கப்பல் மாலு-மி யைப்பற்றியது அது. அவன் வருடத்தில் பாதி நாட் களைக் கடலில் கழிக்கிறான். அவன் மனைவியும் குழந்-தைகளும் தொலைதூர நகரம் ஒன்றில் வசிக் கிறார்கள். அவன் கடலில் மிதந்தபோதும் அவர்களைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பான். நகரில் வசித்த அவர்களோ, அவன் வீடு திரும்பும் நாளில் மட்டுமே அவனை நினைப்பார்கள். அதுவும் அவன் கொண்டு வரும் பரிசுப் பொருட்களுக்காக.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03

ஒவ்வொரு தேசமாக அவனது கப்பல் செல்லும் போதெல்லாம், தன் மனைவிக்காக ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி அனுப்பிவைப்பான். அப்படி ஒரு முறை ஆப்பிரிக்காவுக்குச் செல்லும்போது தனிமையில் இருக்கும் தன் மனைவிக்குத் துணையாக, அழகான நீல நிறக் கிளி ஒன்றை வாங்கி அனுப்பிவைத்தான். அது பேசும் கிளி. இனிமையாகப் பாடவும் கூடியது. பலமுறை தனக்கு ஆப்பிரிக்கக் கிளி பிடிக்கும் என்று அவன் மனைவி சொல்லி-இருப்ப-தால், தன் பரிசைக் கண்டு அவள் மிகவும் சந்தோஷம் கொள்வாள் என்று நினைத்-தான்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஊர் திரும்பினான். வீடு அவனை வரவேற்றது. தான் வாங்கி வந்த கிளி எங்கே என்று தேடினான். கிளியைக் காணவில்லை. மனைவியிடம் மிகுந்த ஆசையாக தான் வாங்கித் தந்த பேசும் கிளி எப்படி இருந்தது என்று கேட்டான். அவள் புன்சிரிப்புடன் மிகச் சுவையாக இருந்தது என்று பதில் சொன்னாள். ஆம் நண்பர்களே... அவள் அதைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டாள்.

இந்தக் கதை எனக்குள் ஆழமாகப் பதிந்துபோயிருக் கிறது. மனிதர்கள் ஒன்றை விரும்புவது, நேசிப்பதற்காக மட்டும் இல்லை. உணவாக்கிக்கொள்வதற்காகவும் இருக்கக்கூடும் என்பது அதிர்ச்சியான உண்மை. வீட்டில் முயல் வளர்ப்பது, முயல் மேல் உள்ள அக்கறையால் மட்டுமே இல்லை; அது சுவையான உணவு என்பதாலும்!

அழகான வெண்புறா சமாதானச் சின்னம் என்று மனது உவகைகொள்ளும்போது, அதன் இறைச்சி எவ்-வளவு சுவையாக இருக்கும் என்று அருகில் உள்ள மனிதன் நாவைச் சுழற்றுகிறான். இயற்கை எவ்வளவு வலியதோ, அதே அளவு மனிதனும் வலியவன்.

மனிதன் கையில் கல் ஆயுதம் இல்லை. இன்றைக்கு வேட்டைக்குச் செல்லவில்லை. மாறாக, கொல்லப்பட வேண்டியதைத் தானே வளர்த்துக் கொல்வது என்ற அன்புடன் இருக்கிறான்.

நாகரிகம் மனிதனின் நாக்கைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஓநாயின் நாக்கைப் போல சதா துடிக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. தேவைப்பட்டால் எதையும் மனி-தனால் சாப்பிட முடியும் என்பதே நிஜம். சாப்-ளின் படம் ஒன்றில், பசியோடு உள்ளவனுக்கு சக மனி-தன் கோழி போலத் தோன்றுவான். அடுத்த மனி-தனை அடித்துச் சாப்பிடத் துரத்துவான். அது வெறும் கற்பனையோ, வேடிக்கையோ இல்லை. எதிர்கால உண்மை.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03

மனிதன் கண்களில் பசி தென்படுவதை உற்றுப் பார்த்-திருக்கிறீர்களா? அந்தக் கண்கள் நெருப்பின் தழல் போல அசைந்துகொண்டே இருக்கின்றன. அதன் உக்கிரம் கொப்பளிக்கக்கூடியது. மாறாக, உணவு-க்குப் பின்பான மனிதனின் கண்கள் கண்ணாடித் தொட்டிக்-குள் நீந்தும் மீன்களைப் போல எத்தனை சாவகாசம், சாந்தம்கொள்கின்றன. பசி வயிற்றில் தோன்றக்கூடும். ஆனால், முகத்தில்தான் அது பிரதி பலிக்கிறது. பசி, மனி-தனின் தீராத போராட்டம். ஒவ்வொரு வேளையும் பசியைக் கடந்து செல்ல மனிதன் கொள்ளும் எத்-தனிப்பு கடு-மையானது. அதிநவீன உலகினை நோக்கி மனிதனின் கால்கள் முன் செல்லும் போது, பசித்த வயிறு அவனைப் பல நூற்-றாண்டுக் காலம் பின்நோக்கி இழுத்துக்கொண்டு போகிறது. உணவு மேஜையில் மனிதன் பெரிதும் மிருக இச்சையே கொண்டு இருக்கிறான்.

பசித்த புலிகூட இரவில் வேட்டையாடுவது இல்லை. ஆனால், மனிதர்கள் உறங்கும் நேரம் தவிர, வேறு எப்போதும் சாப்பிடத் தயாராகவே இருக்கிறார்கள். நாய் கவ்விச் செல்லும் எலும்புத் துண்டைக் கண்டுகூட பொறாமைப்படக்கூடியவர்கள் மனிதர்கள் என்று ஆன்டன் செகாவ் தன் கதை ஒன்றில் குறிப்பிடு-கிறார். மறுக்க முடியாத நிஜம்.

ஐ.ஆர்.த்ராப். பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாகத் தன் சாவை நோக்கிச் செல்லத் துவங்கி-ய-வருக்கு மீதம் இருக்கும் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கதைகள், கவிதை-கள் என்று தேடி வாசிக்க ஆரம்பித்தார். தன் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தத் துவங்கினார். தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக நோயிலிருந்து தப்பியபோது, அவர் மனதில் தன்னை இலக்கியம், எழுத்து தந்த நம்பிக்கையே காப்பாற்றியது என்ற எண்ணம் உருவானது.

அவர் 'சைவக் காலணிகள்' என்ற ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதிவேகமான வாழ்க்கைகொண்ட ஒரு நகரில், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் மற்றவர்களைப் போல தோலில் காலணிகள் செய்யாமல், இயற்கை- யாகக் கிடைக்கும் வைக்கோல், மரக் -கட்-டைகளில் இருந்து காலணிகள் செய்-பவன். நகரமே விதவிதமான தோல் காலணி-களை அணிந்து அழகு பார்க்கும் நாளில், அவன் மட்டும் சைவக் காலணிகள் செய்பவனாகக் கருதப்பட்டான்.

மிருகங்களைக் கொன்று அதன் தோ-லில் இருந்து காலணி தைப்பது தவறானது என்ற எண்ணம் அவனுக்குள் ஆழப் பதி-வாகி-யிருந்-தது. ஆகவே, ஒருபோதும் தோலில் காலணிகள் செய்ய மாட்-டேன் என்று அவன் உறுதியாக இருந்தான்.

அவன் மிகுந்த கற்பனையும் நுட்பமும்கொண்ட தொழிலாளி. ஆகவே, அவனால் வைக்--கோலில் இருந்தும், பனை ஓலைகளைக் கொண்டும் விதவிதமான காலணிகள் செய்ய முடிந்தது. அவன் தாமரை இலை-களைக்கொண்டு சிறுவர்களுக்காகக் காலணி தயாரித்தான். அதை ஒரு நாள் அணிந்துவிட்டு தூக்-கிப் போட்டுவிட-லாம் என்று உற்சாகத்துடன் சொன்னான். ஆனாலும் அவனைத் தேடி யாரும் வரவே இல்லை. அவன் செய்த செருப்புகளில் ஒன்றுகூட விற்க-வில்லை.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03

சோர்வடையாமல், தன்னைத் தேடி யாரா-வது நிச்சயம் வருவார்கள் என்று தொடர்ந்து சைவக் கால-ணிகள் செய்து வந்தான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவள் மற்ற பெண்-களைப் போல அழகான தோல் காலணிகள் அணி-ய விரும்பினாள். அத்துடன் வருமானம் இல்லாதவனோடு எப்படி வாழ்வது என்று எரிச்சல்பட்டாள். செருப்பு தைக்கிற வனோ தன் கொள்கையில் உறுதியாக இருந்தான்.

ஒருநாள் அவன் மனைவி, அவனை விட்டு விலகி, அருகில் உள்ள இறைச்சிக் கடைக்காரனுடன் சேர்ந்து வாழப்போவதாகச் சொல்லி, அவன் தந்த அழ-கான தோல் செருப்பைக் காட்டுகிறாள். 'நிச்ச-யம் எனக்கு ஓர் எதிர்காலம் இருக்கிறது, நம்பு' என்று தன் மனைவியைக் கெஞ்சுகிறான். அவள் கண்டுகொள்ளாமல் அவனைப் புறந்தள்ளிச் செல்கிறாள்.

யாரும் இல்லாமல் தனிமையில் தினமும் அவன் சைவக் காலணிகள் செய்து வந்-தான். ஓர் இரவு அவன் செருப்புக் கடைக்கு ஒரு கார் வந்து நின்றது. பணக்காரப் பெண் இறங்கி, கடையில் உள்ள செருப்புகளை வேடிக்கை பார்க்கத் துவங்-கினாள். தன்னிடம் தோல் செருப்பு எதுவும் இல்லை என்று அவன் தயக்கத்துடன் சொன்-னான். அவள் தனக்கு தோல் செருப்பு அவசியம்-இல்லை என்றபடியே தன் காலைக் காட்-டி-னாள். அவள் மரத்தால் ஆன செயற்கைக் கால் அணிந்-திருந்தாள்.

பிறகு, பெருமூச்சுடன் 'இவ்-வளவு பெரிய நகரத்-தில் நீ ஒரு-வன் மட்டுமே மரத்-தில் காலணி செய்யத் தெரிந்தவன். என் செயற்கைக் கால் பழுதாகிவிட்டது. சரிசெய்து தரமுடியுமா' என்று கேட்டாள்.

அவன் உற்சாகத்துடன் மரக் காலைச் சீர் செய்து கொடுத்தான். அவன் திறமையைக் கண்டு மகிழ்ந்து போன அவள், 'என்னைப் போல கால்கள் இழந்து போன எத்தனையோ ஆயிரமாயிரம் பேர் உன் போல மரத்தில் காலணி செய்யத் தெரிந்தவன் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். நீ மிகத் திறமையானவன். என் னிடம் உள்ள பணம் முழுவதையும் செலவழித்து செயற்கைக் கால்களைத் தயாரிப்போம். தேவைப்-படுபவர்களுக்கு உதவி செய்வோம்' என்று அவனை அழைத்துச் சென்றாள் என்று முடிகிறது கதை.

இது படித்துக் கடந்து செல்ல வேண்டிய ஒரு கதை இல்லை. நம் கவனம்கொள்ள மறந்ததை நினைவூட்டும் கதை. ஒரு நிமிடம் யோசனை செய்துபாருங்கள்... சென்னை போன்ற பெருநகரில் எவ்வளவு செருப்புக் கடைகள்! எத்தனை விதமான செருப்பு வகைகள். எவ்வளவு ஆயிரம் விலை. ஆனால், உடற்குறைபாடு உள்ளவர்களுக்கான செருப்புக் கடைகள், செயற்கை உறுப்புகள் விற்பனை செய்பவர்கள் நம் கண்ணில் படவே இல்லை. சேவையாகச் செய்து வருபவர்கள்கூட மக்கள் கவனத்தில் கொள்ளவே இல்லை. கால் ஊனம் கொண்ட ஒருவர் தனக்கான காலணியை வாங்குவதற்கு நேரிடும் அவலம் சொல்லில் விளக்க முடியாதது.

சாப்பிடவும், சுகிக்கவும் என சுயலாபங்களுக்கு மட்டுமானதில்லை வாழ்க்கை. அதை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக ஹாலிவுட்டில் வெளியான 'The Fall' என்ற படத்தைப் பார்த்தேன். அதை இயக்கியவர் நர்ஸிம் சிங் என்ற இந்தியர். மேஜிக்கல் ரியலிசம் எனப்படும் மாயக்கதை சொல்லல் முறையில் உருவாக்கப்பட்ட படம். படத்தின் ஒளிப் பதிவும் இசையும் மிக அற்புதமானது.

ராய் வாக்கர் என்ற சண்டைப் பயிற்சிக் கலைஞன் தன் காதலியை வசீகரப்படுத்த ஒரு சண்டைப் பயிற்-சியில் ஈடுபடும்-போது காய-ம-டைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்படு கிறான். அதே மருத்துவ-மனையில் கைமுறிவு சிகிச்-சைக்-காக வந்து சேர்கிறாள் அலெக்-ஸாண்ட்ரியா என்ற சிறுமி. அவள் கதை கேட்ப-தில் ஆர்வம் கொண்டவள். மருத்துவ-மனை-யைச் சுற்றி அலையும் அவ-ளுக்கு ராய்-- வாக்-கரு-டன் நட்பு உருவாகிறது. ராய் வாக்கர் தன் வாழ்க்-கையை ஒரு சாகசக் கதை போலச் சொல் கிறான். அவன் சொல்லும் கதையும் மருத்துவமனை நாட் களும் மாறி மாறி வருகின்றன. இரண்டு தளங்களில் ஒரே நேரத்தில் படம் செல்கிறது.

கதை கேட்கும் சிறுமி தானே ஒரு பாத்திரமாகி விடுகிறாள். தற்கொலை செய்துகொள்ள முயலும் ராய் வாக்கருக்குக் கதை சொல்வது மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. முடிவில்லாத அந்தக் கதையின் வழியே சிறுமி சிகிச்சை முடிந்து வெளியே செல்கிறாள். கதைகளில் வரும் சாகசக்காரனைப் போலவே அவள் மனதில் பதிந்துபோகிறான் ராய் வாக்கர். அவனைப் பற்றிய கதைகளை அவள் சொல்லவும் நம்பவும் துவங்குவதோடு, படம் நிறைவுபெறுகிறது.

படத்தில், டார்வின் என்ற சிந்திக்கத் தெரிந்த குரங்கு இடம் பெறுகிறது. இது மனிதர்களின் செயல் களைத் தொடர்ந்து கேலி செய்கிறது. நம் வாழ்க்கை நம் கதைகளின் வழியேதான் நம்பிக்கைகளைப் பெறுகிறது எனும் நர்ஸிம் சிங், மகாபாரதம் போன்ற இந்தியக் கதை சொல்லும் முறையை ஹாலிவுட்டுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். காட்சிப்படுத்துதல் மற்றும் கதை சொல்லும் விதத்தில் இப்படம் ஒரு முன்னோடி.

நர்ஸிம் சிங் அமெரிக்க விளம்பரப் பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியர். கோக், நைக் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களைத் தயாரிப்பவர். இப்படத்தில் டாலி, எஷர் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் பாதிப்பு உள்ளது. கதை கேட்பதும் சொல்வதும் வயது வேறுபாடற்ற செயல் என்பதை இப்படம் நிரூபணம் செய்கிறது.

பால்ய வயதிலிருந்து நம் மனதில் புதையுண்டு போயுள்ள கதைகளை மீட்டு எடுக்கவும், மறுபடியும் கதை சொல்லவும் வேண்டிய அவசியம் இன்று அதிகம் உள்ளது. கதை தெரியாதவர்களே உலகில் இல்லை. கதைகளுக்கு கால் கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதயம் இருக்கிறது. அது துடித்துக்கொண்டு இருக்கிறது. விருப்பமிருந்தால், நீங்களும் அதைக் கேட்கலாம்... உணரலாம்!

- - இன்னும் பரவும்...

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03
-
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 03