மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
சிறுது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
உங்கள் இளமைக்கு ஒரு சவால்!?
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

'ஒரு வரிக்குள் கதை எழுத முடியுமா?' என்று கேட்டு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 'நிச்சயம் முடியும். ஆனால், எதற்காக ஒரு வரியில் கதை எழுத நினைக்கிறீர்கள்?' என்று பதில் அனுப்பினேன். உடனே மறுமுனையில் இருந்து, 'எதையும் ஒரு வரிக்குள் சொல்லுங்கள். உலகம் வேகமாகிவிட்டது' என்ற பதில் வந்தது.

நிச்சயம் இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவர் 1980-களுக்குப் பிறகு பிறந்தவர் என்பது அந்தப் பதிலிலேயே தெரிந்தது. இது என்ன கணக்கு என்று கேட்கக்கூடும். என்னிடம் 10 கேள்விகள் இருக்கின்றன. அதற்கு நீங்கள் பதில் சொன்னால், உடனே வயதைச் சொல்லிவிடலாம்.

1.நீங்கள் கையில் கடிகாரம் கட்டுவது இல்லையா? 2.சட்டைப் பையில் பேனா வைத்துக்கொள்ள மாட்டீர் களா? 3. டெய்லரிடம் உடைகள் தைத்துப் போடும் பழக்கம் அற்றவரா? 4. பண அட்டைகளை மட்டுமே பயன்படுத் துபவரா? 5. சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றை இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்பவரா? 6.மொபைல் போனை கண்ணில் பார்த்த மாத்திரம், அது என்ன வகை போன், மாடல் எண் என்று உங்களால் சொல்ல முடியுமா? 7. சினிமா தியேட்டரில் கட்டாயம் பாப்கார்ன் சாப்பிடுவீர்களா? 8. கேர்ள் ஃப்ரெண்ட் அல்லது பாய் ஃப்ரெண்டை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவீர்களா? 9. பாக்கெட்டில் கர்ச்சீப், சீப்பு வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லையா? 10. கம்ப்யூட்டர் கேம் அல்லது வீடியோ கேம் விளையாடுவதில் ஈடுபாடுகொண்டவரா?

இந்த 10 கேள்விகளுக்கும் 'ஆம்' என்று சொன்னால், நீங்கள் 1980-களுக்குப் பிறகு பிறந்தவர்கள். 'இல்லை' என்று சொன்னால், அதற்கு முன்பாகப் பிறந்தவர்கள். நான் அறிந்தவரை தமிழ்ச் சமூகம் இந்த இரண்டாகத்தான் பிரிந்து இருக்கிறது. இரண்டும் கலந்த விதிவிலக்குகளும் இருக்கின்றார்கள். இதைத் தாண்டி 1940-களில் இருந்து 1960 வரை பிறந்தவர்கள் இரண்டின் மோதல்களையும் செய்வதுஅறியாமல் அவதானித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் ஒழுங்காகக் குறுஞ்செய்திகள்கூட அனுப்பத் தெரியாத முந்திய தலைமுறைக்காரன். என் சகாக்கள் இன் றைக்கும் கையில் கடிகாரம் கட்டுகிறார்கள். (அதுதான் செல்போனில் கடிகாரம் இருக்கிறதே... இது வேறு எதற்கு என்ற கேலி காதில் கேட்கிறது.) பையில் பேனா வைத்து இருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தடுமாறுகிறார்கள். செல்போனைச் சுற்றி பிளாஸ்டிக் லேமினேஷன் செய்துகொள்கிறார்கள். முடி வெட்டிக்கொள்ள பியூட்டி பார்லருக்குள் செல்லத் தயக்கமும் கூச்சமும்கொள்கிறார்கள். அடிக்கடி கோயிலுக்குப் போகிறார்கள். காலையில் எழுந்தவுடன் நியூஸ் பேப்பர் படிக்கிறார்கள். விமானம் தலைக்கு மேலாகப் போவதை வியப்போடு நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

வாழ்க்கையிடம் இருந்து எதைக் கற்றுக்கொண்டு இருக்கிறோம். எதைக் கைவிட்டு இருக்கிறோம், கடந்து வந்திருக்கிறோம் என்பதுதான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்னையும். இதைப் பற்றியதுதான் 'what is it?' என்ற குறும்படம். ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம். கிரேக்க தேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியோஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

ஏதாவது தர வேண்டும் என்று நினைத்தால், இந்தப் படத்தை இணை யத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து அளியுங்கள்.

படம் ஒரு வீட்டுத் தோட்டத்தில் துவங்குகிறது. புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்ச்சில் வயதான அப்பாவும் அவரது மகனும் உட்கார்ந்துஇருக்கிறார்கள். மகன் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறான். அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம். புல்வெளியைப் பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக் கிளையில் உட்காருகிறது. அதை அப்பா கவனமாகப் பார்க்கிறார். குருவி தாவிப் பறக்கிறது. அது என்னவென்று மகனிடம் கேட்கிறார். அவன் குருவி என்று சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறான். அவர் மறுபடியும் அதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாகச் சொல்கிறான். இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது. அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார். மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவிப்பா. கு... ரு... வி...' என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான். குருவி ஒரு கிளை நோக்கிப் பறக்கிறது. அப்பா மறுபடி கேட்கிறார்... அது என்ன? மகன், ''குருவி... குருவி என்று எத்தனை தடவை சொல்வது? உங்களுக்கு அறிவு இல்லையா?'' என்று கோபத்தில் வெடிக்கிறான். அப்பா மௌனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ''உரக்கப் படி'' என்கிறார். அவன் சத்தமாகப் படிக்கிறான்.

'என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்துப் போனேன். அங்கே ஒரு குருவி வந்தது. அது என்னவென்று பையன் கேட்டான். குருவி என்று பதில் சொன்னேன். அவன் அதை உற்றுப் பார்த்துவிட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான். நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன். திருப்திஅடை யாத என் மகன் 21 முறை அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தான். நான் எரிச்சல் அடையாமல், கோபம்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் சந்தோஷமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டேன்!' என்று அந்த டைரியில் உள்ளது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

டைரியைப் படித்து முடித்த மகன், அப்பா போல ஏன் பொறுமையாகத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல, அப்பாவின் தலையைக் கோதி அவரைக் கட்டிக் கொள்கிறான். அத்துடன் படம் முடி கிறது.

முதியவர்களின் கேள்விகள் அறியா மையில் இருந்து எழுவது இல்லை. மாறாக ஆதங்கத்தில், இயலாமையில், பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்துபோனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது. டொனால்டு மில்ஸ் என்ற 70 வயதுக்காரர் இணையத்தில் தனக்கு ஏன் இளைஞர்களைப் பிடிப்பது இல்லை என்று வாரம் ஒரு காரணம் சொல்கிறார். அவரது ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகள் இவை...

இன்றைய இளைஞர்கள் அதிக நேரம் பாத்ரூமில் செலவிடுகிறார்கள். பாத் ரூமுக்குள்ளாகவே படிக்கிறார்கள். பாட்டு கேட்கிறார்கள். சிந்தனை செய்கிறார்கள். விதவிதமான அலங்காரப் பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். மணிக்கணக்கில் பாத்ரூமுக்குள் இளைஞனோ, இளம் பெண்ணோ எப்படி இருக்கிறார்கள் என்று புரிய வில்லை.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

இரண்டாவது, கண்டதைச் சாப்பிட்டு உடம்பை மிக அதிகமாகப் பெருக்க வைத்திருக்கிறார்கள். அல்லது சாப்பிடா மலே கிடந்து உடம்பை மிக ஒல்லியாக்கி வைத்திருக்கிறார்கள். சாப்பாட்டுக்காக எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கிறார்கள். அல்லது வெறும் சாக்லேட், பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு நாளை ஓட்டிவிடுகிறார்கள்.

மூன்றாவது, ஆண்-பெண் என்று பேதம் இல்லாமல் ஒருவருக்கும் மத நம்பிக்கை இருப்பது இல்லை. கோயி லுக்கோ, தேவாலயத்துக்கோ போவதை வீண் விரயம் என்று நினைக்கிறார்கள். கட்டாயத்துக்காகவே கடவுளை வணங்குகிறார்கள். பண்டிகை, திருவிழா போன்ற வற்றைக் கொண்டாட்டம் என்பதால் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அதன் வழிபாடுகளில் நாட்டம் இல்லை. கடவுள் நம்பிக்கை, மத நூல்கள், மதச் சம்பிரதாயங்களைக் கேலி செய்கிறார்கள். அதே நேரம், சிறிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனே பயந்துபோய் அவசர அவசரமாக கடவுள் வழிபாட்டுக்குள் தன்னை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

நான்காவது குற்றசாட்டு, இளைஞர்கள் அத்தனை பேருக்கும் அரசியல் குறித்த ஆர்வம் இருக்கிறது. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள். பொது விஷயங்களுக்காக இறங்கிப் போராட மாட்டார்கள். கிரிக்கெட் மேட்ச் போல அரசியல் இவர்களுக்கு சுவாரஸ்யமான விவாதப் பொருள்... அவ்வளவே.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11

ஐந்தாவது குற்றசாட்டு, இளைஞர்களின் பொது நடத்தை பற்றியது. பெரும்பான்மை இளைஞர்கள் அளவுக்கு அதிகம் குடிக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பயன்படுத்தித் திட்டுகிறார்கள். ஒரே உடையைப் பல நாட்கள் அணிகிறார்கள். சிறிய விஷயங்களுக்குப் பெரிய சண்டைகள் இடுகிறார்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் தனியே அழுகிறார்கள்.

எனது கவலை இந்தக் குற்றச்சாட்டுகளில் இல்லை. மாறாக, படித்த, அலுவலகங்களில் வேலை செய்கின்ற, கல்விபுலம் சார்ந்து இயங்குகின்ற பலருக்கும்கூட ஏன் சுயமாக ஒரு பக்கம் எழுத முடிவது இல்லை.

ஒருவரை வாழ்த்த வேண்டும் என்றாலோ, பாராட்ட வேண்டும் என்றாலோ, சொந்தமாக இரண்டு வரி எழுத முடியாமல் உடனடியாக கணிப்பொறியில் தேடி ஏதாவது வார்த்தைகளை, வாழ்த்துச் செய்திகளைக் கண்டுபிடித்து கட் அண்ட் பேஸ்ட் செய்து அனுப்பும் பழக்கம் அதிகமாகி வருகிறது. தமிழில் ஒரு பக்கம் எழுதுங்கள் என்றால் சகிக்க முடியாத எழுத்துப் பிழைகள். எப்படி எளிய சொற்களுக்குக்கூட எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன என்று புரியவில்லை.

பல நேரம் சொற்களே இல்லாமல் ஆச்சர்யக்குறிகள், கேள்விக்குறிகள், சங்கேதக்குறிகள்கொண்ட குறுஞ்செய்திகளும் வருகின்றன.

குறுஞ்செய்திகள் மற்றும் ஒற்றை வரிக்குள் மட்டுமே மொழிப் பரிமாற்றம் முடிந்துவிடுவது, நமது உயரிய கற்பனா சக்தியையும், மொழி வளத்தையும், கவித்துவ மனதையும், சமூக அக்கறைகளையும் ஒடுக்கிவிடுகிறது என்பதே நிஜம்!

பார்வை வெளிச்சம்!

மிழக மேடை நாடகப் பராம்பரியம் மிகவும் புகழ்பெற்றது. ஆண்கள் பெண் வேஷமிட்டு நடிப்பதை ஸ்திரீபார்ட் என்பார்கள். புகழ்பெற்ற ஸ்திரீபார்ட் நடிகர்கள் பலர் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இது போலவே ஒரு பெண் ஆண் வேஷமிட்டு நடிப்பதும் நாடக மேடையில் வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி ராஜபார்ட் வேஷம் கட்டி நடிப் பதில் புகழ்பெற்ற ஆண் வேஷக்கார நடிகை கே.ஆர்.அம்பிகா. அவர் மேடை நாடகங்களில் கிருஷ்ணன், முருகன் என்று ஆண் வேஷம் கட்டி நடிப்பதில் பிரபலமானவர். திண்டுக்கல் அருகில் உள்ள லட்சுமணபட்டியைச் சேர்ந்த இவர் பிரபல நாடகக் கலைஞரான தாடிக்கொம்பு பொன்னையாவின் மகள். ஆண் போல வேஷம் புனைந்துகொண்டு இவர் நடிப்பதும், பேசுவதும், பாடுவதும் கம்பீரமானது. இவரைப் போன்ற ஆண் வேஷமிட்ட கலைஞர்களைப் பற்றிய தகவல்களும் அவர்களது அனுபவங்களும் முறையாகப் பதிவு செய்யப்படாமலே உள்ளன.

இது போலவே 30 வருஷங்களுக்கு முன்பு வரை வள்ளித் திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திரா என்று மேடை நாடகங்கள் நடத்த விரும்புகின்ற குழுக்கள் நாடகப் பிரதிகளை வாங்கி நகல் எடுத்துக்கொள்வார்கள். மதுரையில் பல நாடகங்கள் அச்சிடப்பட்டு புத்தகங்களாகவே விற்கப்பட்டன. அதில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பிரதிகள் பிரபலமானவை. ஆனால், அவையன்றி பல்வேறு குழுக்களால் மேடை ஏற்றப்பட்ட புகழ்பெற்ற நாடகங்களின் பிரதிகள் இன்றுவரை அச்சேற்றப்படவே இல்லை. அச்சில் வந்த பல நாடகப் பிரதிகள் வாசிப்பதற்குக்கூட கிடைப்பது இல்லை. நூற்றுக்கணக்கான மேடை நாடகப் பிரதிகள் கண் முன்னே கவனிப்பார் அற்று, மறைந்து போய் வருகின்றன. கிராமங்களில் நாடகங்கள் நடப்பது அரிதாகிப் போன சூழலில், நாடகப் பிரதிகள்கூட சேகரித்து பாதுகாக்கப்படாவிட்டால் அடிப்படைத் தரவுகள்கூட நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதே உண்மை!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 11