மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன் - 23

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன் - 23

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள் : அன்ந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
எதற்காக இந்த முள்வேலி?
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையின் நடுவே அடிபட்டு தவளை செத்துக்கிடப்பதைப் பார்த்தேன். வாகனங்களின் வேகம் தெரியாமல் சாலையைக் கடந்த தவளையாக இருக்கக்கூடும். நசுங்கிக் கால்கள் பிய்ந்து விழி பிதுங்கிச் செத்துக்கிடந்தது. அதன் உறைந்த கண்கள் பரபரப்பாகச் செல்லும் வாகனங்களை வெறித்துக்கொண்டு இருந்தது.

தவளையின் சாவு நிச்சயம் விபத்துச் செய்தியாக இடம் பெறாது. அதை நின்று கவனிப்பதுகூட வெட்டி வேலை என்றே நினைக்கப்படும். நான் அந்தத் தவளையைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். இங்கே எப்படி அந்தத் தவளை வந்தது? எங்கிருந்து எங்கே போய்க்கொண்டு இருந்தது? எந்த வாகனம் அதை அடித்துச் சென்றது? அந்த காரோட்டி தவளையைக் கவனித்திருப்பானா? சாலை விபத்துக்களில் மனிதர்களின் சாவே வெறும் செய்தியாகிவிட்ட சூழலில், தவளைகளின் சாவை எதற்காக முக்கியத்துவம்கொள்ள வேண்டும். கேவலம், அது தவளைதானே என்ற பெரும்பான்மையினர் குரல் எனக்குள்ளும் எழுகிறது.

உலகில் இருந்து ஈக்கள் முழுமையாக மறைந்து போய்விட்டால் ஏற்படும் நிசப்தமும், சமன்குலைவும் விவரிக்க முடியாத ஓர் அபாயம் என்று இயற்கையியலாளர் தோரூவின் வரி ஒன்று நினைவில் வந்தது. உலகம் மனிதர்களுக்கானது மட்டும் இல்லை. புழு முதல் சிங்கம் வரை ஒவ்வொன்றின் இருப்புக்கும் ஒரு அவசியமும் காரணமும் இருக்கிறது. அது சமன் குலையும்போது இயற்கை சீற்றம்கொள்ளத் துவங்குகிறது

சாலையில் செத்துக்கிடந்த தவளை நம் அவசர யுகத்தின் அடையாளம். இன்னொரு பக்கம் இத்தனை நெருக்கடிக்குள்ளும் தவளைகள் மாநகரில் இருக்கின்றன என்ற ஆறுதலும் ஏற்படுகிறது. விபத்து, பலி, அழிவு இவை நடந்த பிறகுதான் அது குறித்த பல்வேறுயோசனை கள், மாற்று வழிகள்பற்றிப் பேசுகிறோம்... விவாதிக்கிறோம். இயல்பாக நமக்குள் சக உயிர்கள் மீதான அக்கறை அருகிப்போய்விட்டது.

பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தன்னை எது எழுத்தாளன் ஆக்கியது என்பதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒருநாள் இரவு அம்மா, உறங்கிக்கொண்டு இருந்த கார்க்கியை எழுப்பி, 'அப்பாவைக் கடைசியா ஒரு தடவை பார்த்துக்கோ' என்கிறாள். அப்போது கார்க்கிக்கு ஏழு வயது. அவரது அப்பா பல மாதங்களாக நோயாளியாகப் படுக்கையில்கிடக்கிறார். எதற்காகத் தன்னிடம் கடைசியாகப் பார்த்துக்கொள் என்கிறாள் என்று புரியாமல் பாதி தூக்கத்துடன் அப்பாவின் அறைக்குள் செல்கிறார்.

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

அங்கே ஒரே ஒரு மெழுகுவத்தி எரிந்துகொண்டு இருக்கிறது. அம்மா அருகில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறாள். அப்பாவின் சுவாசம் ஏறி இறங்கித் துடித்துக்கொண்டு இருக்கிறது. கார்க்கி அப்பாவின் கட்டில் அருகே போய் நிற்கிறார். அப்பாவின் கண்கள் அவரை ஏறிட்டுப் பார்க்கின்றன. மரணம்பற்றி எதுவும் தெரியாத சிறுவனாக இருந்த கார்க்கி தனக்குத் தூக்கம் வருகிறது என்று தன் படுக்கைக்கு ஓடிவிடுகிறார்.

விடியும்போது அப்பா இறந்துபோயிருக்கிறார். வீட்டில் மதச் சடங்குகள் நடக்கின்றன. அப்பாவிடம் தான் பேசாமல் போனதால்தான் இறந்துபோய்விட்டாரோ என்று பயப்படுகிறார் கார்க்கி. கல்லறைத் தோட்டத்தில் அப்பாவைப் புதைக்க ஏற்பாடு ஆகிறது. உடலைச் சுமந்துகொண்டு உறவினர்கள் நடக்கத் துவங்கும்போது, நல்ல மழை கொட்டுகிறது. மழையோடு அவர்கள் கல்லறைத் தோட்டத்தினுள் போகிறார்கள். அங்கே பெரிய குழி வெட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் குழி அருகே இரண்டு தவளைக் குஞ்சுகள் இருப்பதை கார்க்கி காண்கிறார். அவை வானை நோக்கி உற்சாகமாகச் சத்தமிடுகின்றன. அதை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார் கார்க்கி.

அப்பாவின் உடலைக் குழியில் இறக்கி மண்ணைத் தள்ளி மூடுகிறார்கள். அப்போது ஒரு மண்வெட்டி, மண்ணோடு அந்த இரண்டு தவளைகளையும் சேர்த்து அள்ளிக் குழியில் போடுகிறது. தவளைகள் குழியினுள் இருந்தபடியே தாவ முயற்சிக்கின்றன. மண்ணை அள்ளிஅள்ளிக் கொட்டுகிறார்கள். அப்பாவின் உடலோடு அந்த இரண்டு தவளைக் குஞ்சுகளும் சேர்ந்தே புதைக்கப்படுகின்றன. தன்னால் அந்தத் தவளைக் குஞ்சுகளை மறக்கவே முடியவில்லை. ஏன் அவை அப்பாவோடு சேர்ந்து இறந்துபோயின? ஒருவர்கூட அந்தத் தவளைகள் மீட்க எதற்காக முயற்சிக்கவே இல்லை?

இந்த நினைவு அவரை ரணப்படுத்தத் துவங்க, அந்தத் தவளைகளுக்காக வருத்தப்பட்டு அழுதார். யாரோ ஒருவருக்காக அப்பாவிகள் ஏன் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள்? உலகம் எளிய மக்களின் துயரங்களை எதற்காகக் கண்டுகொள்வதே இல்லை என்ற உண்மைகளை அந்தத் தவளைகள் தனக்குக் கற்றுத்தந்தன. செத்துப்போன அப்பாவைவிட, தவளைக் குஞ்சுகளே நினைவில் வந்தபடியே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் கார்க்கி. பெரிய உண்மைகளை எளிய சம்பவங்களே கற்றுத் தருகின்றன.

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் சில வருடங்களுக்கு முன்பு புலி பற்றிய ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அதில் ஒரு புலிக் குட்டி முதன் முறையாக ஒரு தவளையைப் பார்க்கிறது. தவளை தாவுகிறது. மிரட்டுவது போலக் கத்துகிறது. அதைக் கண்ட புலிக்குட்டி பயந்துவிடுகிறது. தன்னால் செய்ய முடியாததை இந்தத் தவளை செய்கிறதே என்று தானும் தாவிப் பார்த்துத் தோற்றுப்போகிறது. முடிவில் தவளையைப் பார்த்து பயப்படத் துவங்குகிறது.

அங்கே வந்த தாய்ப் புலி இதைக் கவனித்து, தன் வலிமையான கால்களால் தவளையை ஓங்கி அடித்துக் கொல்கிறது. பிறகு, புலிக் குட்டி அருகில் சென்று தவளையைத் தொட்டுப் பார்க்கிறது. புரட்டிப் பார்க்கிறது. தவளை தவ்வவில்லை. அது உயிரோடு இல்லை என்பது புலிக் குட்டிக்குப் புரியவில்லை. மாறி மாறித் தவளையைப் புரட்டுகிறது. பின்பு வருத்தத்துடன் அதைப் பார்த்தபடியே நிற்கிறது. அந்த வலி ஒரு வடு. அது எளிதில் மறந்து போகக்கூடியது இல்லை.

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

'A boy in the Stripped pyjama' என்ற ஜெர்மானியப் படம் பார்த்தேன். யூதர்களைக் கொல்வதற்கான நாஜி முகாம் ஒன்றுக்கு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று வருகிறது. ராணுவ அதிகாரிக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராணுவக் குடியிருப்பு என்பதால் வெளியே போய் விளையாட யாரும் இல்லை. தனியே வீட்டில் இருப்பது எரிச்சலூட்டுகிறது.

ஒருநாள் தன் வீட்டின் பின் வாசலைத் திறந்து ஓடுகிறான். தொலைவில் ஒரு முகாம் இருப்பதைக் காண்கிறான். அதில் முள்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. வேலியின் உள்ளே அவன் வயதில் ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து அடிபட்டு வீங்கிய முகத்துடன் இருப்பதைக் காண்கிறான். ஜெர்மானியப் பையனுக்கு அது அகதி முகாம் என்று புரியவே இல்லை. அவன் யூத சிறுவனிடம், 'எதற்காக இந்த முகாமைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது, மிருகங்கள் வராமல் தடுக்கவா?' என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன், 'இல்லை, மனிதர்கள் வராமல் தடுக்க' என்று பதில் சொல்கிறான்.

ஜெர்மானியச் சிறுவனுக்கு அது புரியவில்லை. 'இந்த முகாமில் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறான். யூதச் சிறுவன் பதில் சொல்லாமல் போய்விடுகிறான். மறுநாள் ஜெர்மானியச் சிறுவன் வீட்டில் நடக்கும் விருந்துக்கு ஒயின் கிளாஸைச் சுத்தம் செய்ய முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான். அங்கே ஜெர்மானியச் சிறுவன் தந்த கேக்கை யூதச் சிறுவன் தின்னும்போது பிடிபடுகிறான். உடனே, ஜெர்மானியச் சிறுவன் அவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லி மாட்டிவிடவே, கேக்கை திருடிச் சாப்பிடுகிறாயா என்று ராணுவ அதிகாரி அடிஅடியென அடிக்கிறார்.

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

மறுநாள் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனைத் தேடி வருகிறான் ஜெர்மானியச் சிறுவன். யூதச் சிறுவன் கோபம்கொள்ளவில்லை. மாறாக, பிடிபட்டு அகதியாக உள்ளவன் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான் என்று மன்னிக்கிறான். இரண்டு சிறுவர்களுக்குள்ளும் நட்பு உருவாகிறது.

அதன் பிறகு, தன் வீட்டில் இருந்து ரகசியமாக ரொட்டி, கேக் எனத் திருடி வந்து, யூதச் சிறுவனுக்குத் தருகிறான். ஒரே வயது, ஒரே விருப்பம், விளையாட்டுத்தனம்கொண்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் அகதியாகவும் மற்றவன் அதிகார வாரிசாகவும் இருப்பதும் எவ்வளவு முரண்பாடு. அகதிச் சிறுவன் அவமானத்தில் குறுகிப்போய் ஒடுங்கி மெலிந்திருப்பது அதிர்ச்சிகொள்ளவைக்கிறது.

இதற்கிடையில், யூத முகாமில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவதும், இறந்த உடலை மொத்தமாக எரிப்பதுமாக அழித் தொழிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த உண்மை அறிந்த ஜெர்மானிய அதிகாரியின் மனைவி அதிர்ச்சியடைகிறாள். கணவனோடு சண்டையிடுகிறாள். கணவன், 'ஹிட்லரின் கட்டளையை நாங்கள் மீற முடியாது. இது ஒரு தேசச் சேவை' என்கிறான். மனைவி, 'இந்தக் கொடுமையைக் காண என்னால் முடியாது' என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்கிறாள்.

ஊருக்குப் புறப்படும் முதல் நாளில் யூதச் சிறுவன் தன் அப்பாவை முகாமில் காணவில்லை என்று சொல்லிக் கவலைப்படுகிறான். அவரைத் தேட தானும் அந்த முகாமில் வருவதாகச் சொல்கிறான் ஜெர்மானியச் சிறுவன். அதன்படி அவனுக்காக அகதி உடை ஒன்றைத் திருடி வந்து தருகிறான் யூதச் சிறுவன்.

இரண்டு சிறுவர்களும் முகாமுக்குள் போகிறார் கள். மனித அவலங்களைக் காண்கிறார்கள். ஹிட்லரின் அவசர ஆணைப்படி முகாமில் இருப்பவர்கள் மொத்தமாகக் கொல்ல அழைத்துப் போகப்படுகிறார்கள். அதில் இரண்டு சிறுவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23

இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடி அலைகிறாள் ஜெர்மானியத் தாய். அவனைத் தேடி முகாமுக்கே வருகிறான் தந்தை. ஆனால், யூதர்களை விஷ வாயு செலுத்திக் கொல்வதற்காக அடைத்துவைக்கப்பட்ட சேம்பரில் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பிள்ளையைக் காப்பாற்ற குடும்பமே போராடுகிறது. ஆனால், விஷ வாயு தாக்கி இரண்டு சிறுவர்களும் செத்துப் போகிறார்கள். இருவரது கைகளும் நட்போடு ஒன்றாகக் கோக்கப் பட்ட நிலையில் இருக்கின்றன. ஜெர்மானிய அதிகாரியின் மனைவி கதறி அழுகிறாள்.

சொந்த உதிரம் பலியாகப் போகும்போது ஏற்படும் தவிப்புப் போராட்டம். ஏன், ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை என்ற ஜெர்மானிய மனச்சாட்சியின் கேள்வியை அந்தப் படம் எழுப்புகிறது. மனித அவலத்தின் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மைப்படுத்தி சொல்லிய அற்புதமான படம். யுத்தகளம். படு கொலைக் காட்சிகள். வன்முறை எதுவும் இல்லை. ஆனால், ஆழமான வலியை உருவாக்குகிறது. படம் முடியும்போது சரித்திரத்தின் குருதிக் கறை நம் கைகளிலும் படிகிறது!

பார்வை வெளிச்சம்!

திருமணத்துக்கு தாம்பூலப் பை கொடுப்பதில் வெற்றிலை பழம் போட்டுத் தருவார்கள். சிலர் மணமக்களை வாழ்த்தி அச்சிட்ட சிறிய புத்தகங்களைத் தருவது உண்டு. சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் தாம்பூலப் பையில் ஒரு ஆடியோ சி.டி-யைப் போட்டுத் தந்தார்கள். அந்த ஆடியோ சி.டி-யில் திருக்குறள், நீதிநூல்கள், தேர்வு செய்யப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் பாரதியார் பாடல்கள் உள்ளிட்ட 32 முக்கிய படைப்புகளை அவர்களே இசைவடிவில் எம்பி3 ஆகத் தயார் செய்திருந்தார்கள். சிறப்பான முயற்சியாகவும், அவசியம் பின்பற்ற வேண்டிய ஒன்றாகவும் இருந்தது. இது போல தமிழ் அகராதி, சங்கப் பாடல் கள், சிறுகதைகள் கவிதைகள், மின்புத்தகங்கள் கொண்ட குறுந்தகடுகளைப் பரிசாகத் தரும் நடைமுறையை யாவரும் பரிசீலனை செய்து பார்க்கலாம்!

 
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - எதற்காக இந்த முள்வேலி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 23