ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

'சிலிகான் இம்ப்ளான்ட்' செய்துகொண்டவர்களுக்குப் பால் ஊறுவதில் பிரச்னை உண்டா? குழந்தை பால் அருந்துவதில் சிரமம் ஏற்படுமா?

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

இம்ப்ளான்ட் (செயற்கையாக மார்பகத்தைப் பெரிதாக்குவது) என்பது மேலெழுந்தவாரியாகச் செய்யப்படுவது. நதிகளைப் போல பாலின் உறபத்தி ஸ்தலம் இருப்பது மார்பகத்துக்கு உட்பகுதியில்! ஆகவே, பிரச்னை இருக்காது. கர்ப்பமுற்ற பெண்ணின் மார்பகத்துக்கு உள்ளே 'வியர்வைச் சுரப்பிகள்' உண்டு. ஒரே வித்தியாசம், அவை சுரப்பது பால்! கர்ப்பம் தரித்த பிறகு, காம்புக்கு (nipple) நேர் பின்னால் உள்ள இந்தச் சுரப்பிகள் சற்றுப் பெரிதாகும். இப்படிச் சுரக்கும் பால் மெல்லிய குழாய்கள் மூலம் குட்டிக் குட்டி கோடவுன்களுக்கு வந்து சேர்கிறது. இந்த storage space க்கு sinuses என்று பெயர். அங்கேயிருந்து மினி 'டியூப்'கள் மூலம் பால் ஒவ்வொரு காம்பின் நுனிக்கும் வந்து சேர்கிறது. பிறந்தவுடனே குழந்தை அதை நுகர்ந்து தெரிந்துகொண்டு உறிஞ்சுவதுதான் ஆச்சர்யம்! 'இம்ப்ளான்ட்', தோலுக்கு ஜஸ்ட் உள்ளே பொருத்தப்படுவது. இதனால், மார்பகத்தின் மென்மை சற்று மாறும்தான்! இயற்கையான மார்பகத்தில் பால் குடித்த குழந்தையை இம்ப்ளான்ட் மார்பகத்துக்கு மாற்றினாலும்... பால் கிடைக்கும். ஆனால், இது என்ன... அவ்வளவு மிருதுவாக இல்லாமல், ஒரு மாதிரி இருக்கிறதே?!' என்று குழந்தை சற்று வித்தியாசமாக உணரக்கூடும்!


சுதா.நடராசன், சென்னை-63

பிணவறைக் காவலாளியாகப் பணியில் இருப்பவருக்கு, மரணம் குறித்த பார்வை என்னவாக இருக்கும்?

சாதாரணமாக இருக்கும். அதற்காக உணர்வுகள் மரத்துப்போகாது. அவருக்கு நெருக்கமானவர் இறந்தால், அவர் கதறி அழத்தான் செய்வார். பிணவறைக்குள் நாம் இருக்க நேர்ந்தால், சற்று பயப்படுவோம். (உலகில் பிணத்தைவிட சாதுவானது எது?!) அவருக்கு அந்தப் பயம் எல்லாம் இருக்காது. ஆமாம், தினம் நூற்றுக்கணக்கில் எக்ஸ்-ரே எடுப்பவர் கண்களுக்கு, எதிரில் வரும் எல்லோரும் எலும்புக்கூடுகளாகத் தெரிவார்களா என்ன?!


பெ.செந்தில்குமார், ஆலத்தூர்.

அதிர்ஷ்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

'எதிர்பாராத, யதேச்சையான நிகழ்வு (chance)' என்பதில் நம்பிக்கை உண்டு. அதை 'அதிர்ஷ்டம்' என்று நீங்கள் அழைத்தால், எனக்கு ஆட்சேபனை இல்லை! எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் குறிப்பிடுங்கள்... அதை (உங்கள் வார்த்தையிலேயே சொன்னால்) அதிர்ஷ்டம் என்று என்னால் நிரூபிக்க முடியும்!

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

சுமார் 40 லட்சம் உயிரணுக்கள் அப்பாவிடம் இருந்து அம்மாவுக்குள் நுழைந்து நீந்துகின்றன. அதில் ஒரே ஒரு உயிரணு - நீங்கள்! இந்த 'நீச்சல் போட்டி'யில் ஜெயித்து, முட்டையை 'நீங்கள்' துளைக்கும் சமயம்... அம்மா லேசாக நகர்ந்து படுத்தாலோ, இருமினாலோகூட, 'நீங்கள்' என்கிற உயிரணுவின் குறி தவறி, இன்னொரு உயிரணு முட்டைக்குள் நுழைந்திருக்கும். அதாவது 'வேறு ஒருவர்' கருவாகிப் பிறந்திருப்பார்! நுழைந்தது நீங்களாக இருந்தது அதிர்ஷ்டமா? யதேச்சையான நிகழ்வா?! ('என் திறமை' என்றெல்லாம் சொல்லக் கூடாது!)


வெ.கா., கடையநல்லூர்; வி.எஸ்.கே.மணியன், பவானி; அ.காதர்பாட்சா, தவுட்டுப்பாளையம்.

உலக வரைபடம் முதன்முதலில் யாரால், எப்போது தயாரிக்கப்பட்டது?

'உலகம் சுற்றும் வாலிபர்'களாக வேண்டும் என்கிற ஆர்வம் சற்று அதிகமாக இருந்த கிரேக்கர்கள் கி.மு.500-லேயே 'மேப்' தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவை அண்டை நாடுகள் சம்பந்தப்பட்ட வரைபடங்கள். கி.மு.2300-ல் தயாரிக்கப்பட்ட முதல் 'மேப்' இராக் நாட்டில் (பண்டைய பாபிலோன்) கிடைத்திருக்கிறது. அது, களிமண்ணில் வரையப்பட்ட மேப்! அவை எல்லாமே பயணிகள் சொல்வதை வைத்துத் தயாரிக்கப்பட்ட, குத்துமதிப்பான, சற்று அபத்தமான வரைபடங்கள்தான் என்றாலும், அவைதான் முதல் மேப்புகள்!

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
மரியராசா, துரிஞ்சிக்கொல்லை.

ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களுக்கான கருக்களை இத்தாலிய இலக்கியங்களில் இருந்து எடுத்தார் என்பது உண்மையா?

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்

சில கதாபாத்திரங்களை இத்தாலிய வரலாற்றில் இருந்து எடுத்தார் என்பதே சரி! அவருடைய நாடகங்களில் வந்த ஜூலியஸ் சீசர், ஆண்டனி, கிளியோபாட்ரா போன்றவர்களைப்பற்றிய தகவல்கள், ப்ளூடார்க் எழுதிய வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவைதான். அதனால் என்ன? வால்மீகியின் (சம்ஸ்கிருத) ராமா யணத்தைப் படித்துவிட்டுத்தான் கம்பர் ராமாயணம் எழுதினார். இருப்பினும், அது தனித்தன்மை மிகுந்த ஒப்பற்ற காவியமாகத்தானே கருதப்படுகிறது!

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நிகரில்லாதவை. ஒருமுறை, 'மிகச் சிறந்த நாடகாசிரியர் யார்?' என்று ஒருவர் கேட்டதற்கு, 'நகைச்சுவை நாடகம் (Comedy), சோக நாடகம் (tragedy) இரண்டையும் பிரமாதமாக எழுதுகிறவர்தான். ஆனால், அப்படி யாருமில்லை!' என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் மட்டுமே அதைச் சாதித்துக் காட்டினார்! ஆங்கில மொழிக்கு (இன்றைக்கும் நாம் பயன்படுத்தும்) 1,800 புதிய வார்த்தைகளை உருவாக்கித் தந்தவர் ஷேக்ஸ்பியர் என்பது உங்களுக்குத் தெரியுமா?!

 
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்
அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் - ஹாய் மதன்-கேள்வி பதில்