மரணத்தை மட்டும் விட்டுவைப்பார்களா மனிதர்கள்? அங்கேயும் ஆணி அடித்துக் காத்திருக்கிறது சில சென்டிமென்ட்டுகள். 'வீட்டுக்குள் குடையை விரிக்கக் கூடாது' என்பது அமெரிக்கா உள்பட பல மேலை நாட்டிலும் நிலவும் சென்டிமென்ட். அப்படி விரித்தால் வீட்டில் இருக்கும் யாராவது பொட்டென்று போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை.
குடை போகட்டும்... தொப்பியைக்கூட படுக்கையில் வைக்க மாட்டார்கள். படுக்கையில் தொப்பியை வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது. எழுந்திருக்கும்போது வீட்டில் இருப்பவர்களில் யாராவது நிரந்தரத் தூக்கத்துக்குப் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை.
ஹவாய் தீவில் உள்ள மக்கள் கதவுக்கு நேராகக் கால் நீட்டிப் படுக்கவே மாட்டார்கள். காரணம், நம்மை அறியாமலேயே இரவில் உயிர் கால் வழியாக இறங்கி, வாசல் வழியாக வெளியே போய்விடுமாம்.
கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக்கொண்டு விரைவாகப் போகவேண்டும். இது அமெரிக்கர்களிடம் முன்பு இருந்த ஒரு சென்டிமென்ட். காரணம் ரொம்ப சுவாரஸ்யமானது. அதாவது, செத்துப்போனவர்களுக்கு நம்மைப் பார்த்துப் பொறாமை வருமாம். தன் மூக்கைத் தொட்டுப் பார்த்து, 'அவனுக்கு |