ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

லகத்துக்கே கருத்து சொல்லி திருந்தச் சொல்லும் சினிமா உலகத்தில் எவ்வளவு சென்டிமென்ட் தெரி யுமா?

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கும் இயக்குநருக்கும் ஜாதகம் பொருந்தி வருகிறதா என்று பார்த்த பின்தான் கதை கேட்கவே கூப்பிடுவார்கள். சில புத்திசாலி உதவி இயக்குநர்கள், அப்படியான தயாரிப்பாளர்களின் ஜாதகத்தைச் சுட்டு, பத்து பொருத்தம் இருக்கிற மாதிரி டுபாக்கூர் ஜாதகம் ரெடி பண்ணி, வாய்ப்பு வாங்கிவிடுவார்கள். தமிழ் சினிமாவின் ஒரு தயாரிப்பாளருக்கு விநோதமான சென்டிமென்ட். மொட்டைத் தலையர்களைப் பார்த்தாலே பதறிவிடுவார்.மொட்டைத் தலையர்களை உள்ளே விட்டால் கம்பெனியும் மொட்டை ஆகிவிடுமாம்.

ஷூட்டிங்கில் பெரும்பாலும் ஹீரோ சாமி கும்பிடுவது மாதிரி ஸீனைத்தான் முதலாவதாக எடுப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமரா லென்ஸ் வைக்கும் பாக்ஸைத் தெய்வம் போலப் பாதுகாப்பார் கள். அதை அவமரியாதை செய்தால், அவர்களின் சினிமா கேரியர் அதலபாதாளத்துக்குப் போய்விடும் என்று நடுங்குவார்கள். 'ஸ்ரேயாவின் கால் லென்ஸ் பாக்ஸின் மேல் பட்டதால்தான், அவர் இரண்டு வருடங்கள் சும்மா இருந்தார். பிறகு லென்ஸ் பாக்ஸ் முன்னால் நின்று பொதுமன்னிப்பு கேட்டார். உடனே, 'சிவாஜி' வாய்ப்பு கிடைத்தது' என்று அதற்கு உதாரணமும் காட்டுகிறார்கள்.

ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது யாராவது தும்மினால் மொத்த யூனிட்டும் அப்செட் ஆகிவிடும். தும்மியவருக்குத் திட்டோ, முறைப்போ கிடைக்கும். இதனாலேயே பல பேர் தும்மல் வந்தால் மூக்கைப் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடுவது வழக்கம். 'அலைபாயுதே' படத்தில் மாதவனின் கேரக்டர் பெயர் கார்த்தி. அதனால்தான் அந்தப் படம் ஹிட் என்று பல படங்களுக்கு ஹீரோ பெயரை கார்த்தி என்று வைத்தார்கள். அதே போல சிவா என்கிற பெயரும்கோலி வுட்டில் படா ஃபேமஸ். ஹீரோயின் கேரக்டருக்கு ப்ரியா என்கிற பெயர்தான் ஏகோபித்த சாய்ஸ்.

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

புதிதாக நடிக்க வருபவர்கள் மூன்றெழுத்துப் பெயரைத் தேடித் திரிவார்கள். ஏனெனில், ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு எல்லாமே மூன்றெழுத்தாம். பட ரிலீஸ் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைதான் இருக்கும். வெள்ளிக்கிழமை காலையில் ராகுகாலம் வருவதால் மேட்னி ஷோவில் இருந்து முதல் ஷோ ஆரம்பிக் கும். இதேபோன்று கடைசி நாள் ஷூட்டிங் முடிந்ததும் திருஷ்டி கழிவதற்காக பூசணிக் காய் உடைப்பார்கள். ஒரு நடிகர் கம் இயக்குநரின் படத் தின் கடைசி நாள்... ஒருவர் வெங்கடாஜலபதி சிலையைக் கை தவறிக் கீழே போட்டு உடைத்துவிட்டார். 'ஐயையோ... படம் என்னாகப் போகுதோ' என்கிற பீதியில் மொத்தயூனிட் டும் தூங்கவில்லை. கதை நன் றாக இருந்ததால் 100 நாட்கள் ஓடியது.

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

அடுத்த பட ஷூட்டிங்கின் கடைசி நாள்... பூசணிக்காய் உடைப்பதற்கு முன் 'அண்ணே... ஒரு வெங்கடாஜலபதி சிலை இருக்கு. உடைச்சிடலாமா?' என்று கேட்டு இருக்கிறார் யூனிட் ஆள். பதறிப் போன இயக்குநர், 'ஏதாவது ஆகிடப் போகுது... பூசணிக் காயையே உடைச்சிடுங்க' என்றாராம்.

சுந்தர்.சி தன் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான 'கிரி'யைக் கும்பகோணத்தில்வைத்து எடுத்ததால் வெற்றி பெற்றது என்று நம்புகிறார். இதனால், தான் நடிக்கும், தயாரிக்கும் படங்களின் ஒரு ஸீனையாவது கும்பகோணத்தில் வைத்து எடுப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்.

முதல் நாள் பூஜை போட்ட பிறகு, ஷூட்டிங் தேதி தள்ளிப்போனாலும் சும்மா இருக்க மாட்டார்கள். கேமராவைத் தூக்கிக்கொண்டு காரில் வைத்தபடி எதையாவது படம் பிடித்து வருவார்கள். அன்றில் இருந்து இன்று வரை தொட்டுத் தொடர்கிறது இந்த சென்டிமென்ட்!

பாச பார்ட்டி!

ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!

படப்பிடிப்பு, டான்ஸ் போட்டி, பாட்டுப் போட்டி, லாங் டூர் என எங்கு போவதாக இருந்தாலும் பாட்டியின் காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக் கிளம்புவதுதான் சரண்யா மோகனின் சென்டிமென்ட்!

 
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!
-ம.கா.செந்தில்குமார்
ஸ்ரேயா கேட்ட பொது மன்னிப்பு!