யூத மதத்தில் பாவத்தைத் தொலைப்பதற்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. உயிருடன் இருக்கும் ஒரு கோழியைத் தோள் உயரத்துக்குத் தூக்கிப் பிடித்துச் ஜெபிப்பார்கள். பின் மூன்று முறை சுற்றுவார்கள். இப்படிச் செய்தால், பாவங்கள் மனிதர்களிடம் இருந்து கோழிக்கு டவுன்லோட் ஆகிவிடும். பின்னர், கோழியைக் குழம்புவைக்கக் கொடுப்பார்கள். எல்லாப் பாவங்களும் குழம்போடு கொதித்து ஆவியாகி விடும்.
'எனோமேமோ' என்பது வெனிசுலாவின் பழங்குடி இனம். 'இறந்தவர்களின் மிச்சம் மீதி எதுவும் இந்த உலகில் இருக்கக் கூடாதாம். யாராவது இறந்தால் உடலை எரித்துவிடுவார்கள். மிஞ்சும் எலும்பைப் பொடியாக்கி, சாம்பலுடன் கலந்து சாப்பிட்டுவிடுவார்கள். சாம்பல் வைத்தி ருந்த பானையையும் உடைத்துவிடுவார்களாம். எனோமேமோ பண்ணுறாங்க போங்க!
|