ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
விகடன் பொக்கிஷம்
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

பாகவதரும் வெள்ளையப்பரும்!

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

லகம் என்பது என்ன? ஸ்ரீ எம்.கே.தியாகராஜ பாகவதரிடம் கேட்டுத் தெரிந்து

கொள்ளுங்கள். சங்கீதமே உலகம் என்றோ, ஸ்டூடியோவே உலகம் என்றோ, பணமே உலகம் என்றோ அவர் கூறுவதில்லை. அன்பே உலகம் என்கிறார் அவர். அன்று சென்னையில் அம்பிகாபதி பொன்விழாவின்போது மந்திரி கனம் ராமநாதன் முன்னிலையில்கூட இவ்வாறுதான் கூறினார் அவர். இதிலிருந்தே பாகவதர் லேசுப்பட்டவர் அல்ல என்பது தெரியவில்லையா? அன்பு அதிகமானால் அவருக்கும் வரும்படி அதிகம்தானே! அதிலும் அவருடைய சொந்தப் படமான திருநீலகண்ட நாயனார் வரப்போகிறது. கையிலிருந்து வெள்ளையப்பர் இப்போது வெளியேறி வருகிறார். அவரைப் பன்மடங்காகத் திரும்பப் பெற, உலகமெல்லாம் அன்பாக இருந்தால்தானே நல்லது!

(20-11-38)


தேங்காய்பக்தி!

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

மாதத்துக்கொருமுறை திருப்பதி கோயிலுக்குப் போகும் வழக்கமுடையவர் (அண்மையில் மறைந்த) நடிகர் தேங்காய் சீனிவாசன்.

அவரிடம் யாராவது ''ஒரு நேர்த்திக்கடன், திருப்பதி போகணும்னு. ஆனா, கையிலே பணமில்லே..!'' என்று சொன்னால், உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து, ''எனக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டு வாப்பா...'' என்பார் தேங்காய். இதற்காகவே, பணம் போட்ட இரண்டு கவரை பையில் எப்போதும் தயாராக வைத்திருப்பாராம்...!

(15-11-87)


''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

மது இலங்கைப் பிரயாணத்தின்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு வரவேற்புக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசும்போது, ''நான் ஈழ நாட்டில் பிறந்தவன், கேரள நாட்டைச் சேர்ந்தவன், இப்போது தமிழ்நாடு என்னை வளர்க்கிறது. அப்படியானால் நான் யாருக்குச் சொந்தம்..?'' என்று கேட்டு வாக்கியத்தை முடிக்கு முன் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் உரக்க, ''நீங்கள் எங்க வீட்டுப் பிள்ளை''என்று கூவினான்.

(28-11-65)


மாதச் சம்பளம் 36 ரூபாய்!

''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

ரம்பத்தில் இவர் ராணுவச் சிற்றுண்டிச்சாலையன்றில் மாதம் 36 ரூபாய்க்கு வேலை பார்த்து வந்தார். அப்போது மாதம் 625 ரூபாய் சம்பளத்திற்கு திரையுலகில் வேலை கிடைக்கவே, ஓட்டல் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு சினிமா உலகில் நுழைந்தார். இவர் வேறு யாருமல்ல, இந்தியாவிலேயே அதிகமாகப் பணம் வாங்கும் புகழ்பெற்ற நடிகர் திலீப்குமார்தான்!

(28-11-65)


''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் 'அன்பே வா' வர்ணப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், கதாநாயகியின் தந்தையாக நடித்து வருகிறார். இதுபற்றி படப்பிடிப்பின் இடைவேளையின்போது தமாஷாக டி.ஆர்.ஆர். குறிப்பிட்டார்.

''என்னை நாடகத்திலிருந்து சினிமாவுக்குக் கொண்டு வந்து காமெடியனாக்கியது ஏவி.எம். அவர்கள்தான். என்னை கதாநாயகயனாக ஆக்கியதும் அவர்தான். அவரேதான் இப்போது என்னை அப்பாவாகவும் ஆக்கியிருக்கிறார்'' என்று சொல்லி, சிறிது இடைவெளிவிட்டு, ''சொல்ல முடியாது, அவர் செஞ்சாலும் செய்வார்!'' என்று சொல்லிச் சிரித்தார் டி.ஆர்.ராமச்சந்திரன்.

''என்ன செய்வார்?'' என்று அவரிடம் கேட்டபோது, ''அதுவா! என்னைத் தாத்தா வேஷம் போட வெச்சாலும் வைப்பார்னு சொல்ல வந்தேன்!'' என்று சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார் டி.ஆர்.ஆர்.

(28-11-65)

 
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
''நான் யாருக்குச் சொந்தம்?'' கேட்கிறார் எம்.ஜி.ஆர்.