ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்
விகடன் பொக்கிஷம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

'நாமொன்று நினைக்க நமது சித்திரக்காரர் வேறொன்று நினைத்துவிடுகிறார்' என்கிற தலைப்பின் கீழ் வெளியான நகைச்சுவைத் துணுக்குகள் அந்த நாளில் மிகப் பிரசித்தம். இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து வெளியான அவற்றை வரைந்தவர் ஓவியர் ரவி. மாதிரிக்கு இதோ ஒன்று...

சித்திரக் குறும்பு

காலப் பெட்டகம்

கைவிட வேண்டிய தொழில்

என்னும் தலைப்புக்கு ஏற்றதாக அவரை ஒரு சித்திரம் போடச் சொன்னோம் அவர் போட்டுக் கொடுத்த படம் மேலே இருப்பதுதான்!


கிரிக்கெட் விளையாட்டு பற்றிய கட்டுரையை 'மட்டையடித் திருநாள்' என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார் 'மட்டை'. அடடா..! என்ன வொரு புனைபெயர்!


மட்டையடித் திருநாள்
''மட்டை''

காலப் பெட்டகம்

ட்டையடித் திருநாள் என்றதும் விஷ்ணு கோவில்களில், கோவில் சிப்பந்திகளையும் நிர்வாகி களையும் அம்மனுடைய ஆட்களான தாசிகள் வாழை மட்டைகளைக் கொண்டு அடிக்கும் தமாஷ் திருநாளைப் பற்றிய நினைவுதான் எல்லோருக்கும் தோன்றும். இந்த மட்டையடித் திருநாளுக்குள்ள 'மவுஸ்' இப்போது குறைந்து விட்டதென்றாலும், நம் தமிழ்நாட்டிலே மற்றொரு வித மட்டையடித் திருநாள் நாளுக்கு நாள் பிராபல்யமடைந்து வருகிறது. சென்னையிலே போன வாரம்கூட அது ஒன்று நடந்தது. அதைப் பற்றித்தான் இங்கே விவரிக்கப் போகிறேன்.

சென்னையிலே 'மெட்ராஸ் கிரிக்கெட் அஸோ ஸியேஷன்' என்றொரு சங்கம் இருக்கிறது; இதை நடத்துவது இந்தியர்கள். 'மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்' என்றொரு சங்கம் இருக்கிறது; இதை நடத்துவோர் ஐரோப்பியர்கள். இந்த ஐரோப்பியர் சங்கத்திற்கு எம்.ஸி.ஸி. என்று பெயர்; இந்தியர் சங்கத்திற்கு எம்.ஸி.ஏ. என்று பெயர். அரசியல் விஷயங்களில்தான் இந்தியர் தமக்குச் சுதந்திர மில்லாது மேநாட்டாரது தயவை எதிர்பார்த்திருக் கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்தக் கிரிக்கெட் விளையாட்டு விஷயத்தில்கூடச் சென்னை இந்தியர்கள் அப்படியேதானிருக் கிறார்கள். எம்.ஸி.ஸி. பெருமாள்கள் மட்டும் இவ் வருடம் வாடகைக்குத் தங்கள் இடத்தைக் கொடுத் திராவிட்டால், மேற்படி திருநாள் இவ்வருடம் நடந்திருக்கவே நடந்திருக்காது.

அரும்பெரும் தமிழ்த் தொண்டு புரிந்து, ஆனந்த விகடனால் 'தமிழ்த் தாத்தா' என்னும் சிறப்புப் பட்டப்பெயர் அளித்துக் கௌரவிக்கப்பட்ட மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்கள் இந்த ஆண்டின் முதல் இதழில் 'என் சரித்திரம்' என்னும் தலைப்பில் தன் சுயசரிதத்தை எழுதத் தொடங்கியுள்ளார். அதிலிருந்து ஒரு துளி...

உத்தமதானபுரம். இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும், 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.

இவ்வளவு ரூபாயென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் இருக்கவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்துவிடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் ஒரு சாந்தி இருந்தது. இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாகத் தேடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதேயழியக் குறையவில்லை.

காலப் பெட்டகம்

மகாகவி பாரதியாரின் புதல்வி தங்கம்மாள் பாரதி, 17.11.1940 தேதியிட்ட விகடன் இதழில் 'சத்தியமே ஜயம்' என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் லக்ஷ்மியின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா?', இந்த ஆண்டு 10-3-1940 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது. (13-8-2008 இதழில் அதை மறுபிரசுரம் செய்திருந்தோம்.) இந்த ஆண்டில் அதிகச் சிறுகதைகள் எழுதியுள்ளவரும் லக்ஷ்மிதான்! மொத் தம் 13 கதைகள்.

போதனா முறையில் சீர்திருத்தம் செய்த மான்டிஸோரி அம்மையார் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் சென்னை வந்திருந்த சமயம், விகடன் அவரைப் பேட்டி கண்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. அதிலிருந்து...

குழந்தைகள் விஷயம்
டாக்டர் மாண்டெஸோரி
''நந்தினி''

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பு இதாலி தேசத்தில் உபாத்தியாயர்கள் எல்லாம் சேர்ந்து ட்யூரின் என்ற நகரத்தில் ஒரு மகாநாடு கூட்டினர். இதாலி தேசத்திலேயே அந்தச் சமயம் கொலை, களவு முதலியவை அதிகம் இருந்ததால், ''தர்மம், நீதி முதலியவற்றை எவ்விதம் சரிவரப் போதிப்பது?'' என்பதே அம் மகாநாட்டின் முக்கிய நோக்கமாயிருந்தது.

மகாநாடு கூடின மூன்றாவது தினத்தன்று காலையில் ஆஸ்திரியா தேசத்து சக்ரவர்த்தினியாகிய எலிஸபெத் கொலை செய்யப்பட்டாரென்ற செய்தி கிடைத்தது. அந்தக் கொலையைச் செய்தது ஓர் இதாலியன். ஏற்கெனவே இரண்டு பெரிய கொலைகள் சமீபத்தில் இதாலியர்களால் செய்யப்பட்டிருந்தன. அது மூன்றாவது கொலை.

காலப் பெட்டகம்

அதை அறிந்ததும் பொது ஜனங்களும் பத்திரிகாசிரியர்களும் ஒரே மனதாக உபாத்தியாயர்களைத் திட்டி, ட்யூரின் நகரத்தில் கூடியிருந்த அவர்களுடைய மகாநாட்டைப் பகிஷ்கரித்தனர். மூன்றாவது தினத்தன்று கூடின மகாநாட்டின் கூட்டத்தில் அம் மகாநாட்டிற்கென்று வந்திருந்த உபாத்தியாயர்களைத் தவிர, வேறு பொது ஜனங்கள் எவரும் இல்லை. அந்த உபாத்தியாயர்களும் கூடக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். அச்சமயம் ஒரு பெண்மணி எழுந்து பேசினார்:

''நீங்கள் போதிக்கும் விஷயங்களை எவ்விதம் மாற்றலாம் என்று ஆலோசிப்பதில் பயனில்லை. போதிக்கப்படும் குழந்தைகளின் சுபாவத்தை நன்றாக அறிய முயலவேண்டும். எல்லாக் குழந் தைகளும் ஒரே விதமாக இருப்பதில்லை. சில இயற்கையாகவே கறுப்பாகவும் சிவப்பாகவும் இருப்பது போலவே, சில தேக பலம் அதிகம் பெற்றும், சில தேக பலம் குறைவாகப் பெற்றும், சில ஒருவித மனப்பான்மையுடனும், சில வேறு வித மனப்பான்மையுடனும் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரே போதனா முறையை அனுசரித்து, எல்லாமும் ஒரே விதமான தேகப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல் வது தவறு. நல்ல ஜீரண சக்தி படைத்திருப்பவனுக்குக் கஞ்சியை மாத்திரம் கொடுத்து வந்தால் அவனு டைய தேகம் இளைக்கும். அவன் பருமனாவதற்கு நல்ல கனமான ஆகாரம் தேவை. ஆனால் ஜீரண சக்தி இல்லாதவனைப் பருமனாகச் செய்ய முத லிலேயே கனமான ஆகாரம் கொடுக்கக்கூடாது. அவனுடைய சக்திக்குத் தகுந்தபடி முதலில் கஞ்சி முதலிய லேசான ஆகாரம் கொடுத்து, அவனுக் குக் கொஞ்சம் கொஞ்சமாக ஜீரண சக்தி உண்டாக்கி, அதன் பிறகே புஷ்டியான ஆகாரம் கொடுக்க வேண்டும். அதைப் போலக் குழந்தைகளுக்குப் போதிக்கும் முன், குழந்தைகளின் இயற்கையை நன்றாக அறியவேண்டும். அதை அறியாமல் போதிப்பது தவறு.''

இவ்விதம் பேசின பெண்மணி ஓர் உபாத்தியாய ரல்ல; டாக்டர். மேற்கூறியவாறு அந்தப் பெண்மணி பேசினதும், அதுவரை என்ன செய்வதென்று அறியாமல் கவலையில் ஆழ்ந்திருந்த உபாத்தியா யர்களுக்குச் சற்றே மனோ தைர்யம் ஏற்படலா யிற்று. உடனே அந்தப் பெண்மணியின் தலை மையின்கீழ் ஒரு தனிப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, துர்க்குணமும் கெட்ட வழக்கங்களுங்கொண்ட 'அடங்காத' பிள்ளைகளையெல்லாம் அதில் சேர்த்தனர். அப்பெண்மணி அந்தப் பிள்ளைகளைப் பற்றி நடத்தின பல ஆராய்ச்சிகளினால் அநேக விஷயங்களை அறிந்து, தனிப்பட்ட போதனா முறை ஒன்றைக் கையாளலானார். அதன் பலனாக அப்பிள்ளைகளின் துர்க்குணங்கள் மறைய ஆரம்பித்தன.

அப்பெண்மணியின் பெயர் மாண்டெஸோரி.


யார் இவர்?

காலப் பெட்டகம்

இப்படி ஒரு வித்தியாசமான மேக்கப்பில் இருக்கும் நடிகையின் விதவிதமான படங்களைத் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிரசுரித்து, அந்த நடிகை யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்து, சரியான விடை எழுதியவர்களுக்கு ரூ.100, ரூ.50, ரூ.25 எனப் பரிசுகளும், மேலும் 25 பேருக்கு இலவச சினிமா டிக்கெட்டும் அனுப்பி வைத்திருந்தது விகடன். சரி, இந்த நடிகை உங்களுக்கும் தெரிந்தவர்தான். கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இவர் யார்?
போட்டி முடிவு

''நமது கண்களையே நாம் நம்புவதற்கில்லை'' என்று சொல்கிறார்களே, அது ஓரளவு உண்மை தான் என்று 'இவர் யார்?' போட்டியிலிருந்து தெரிய வருகிறது. போட்டிக்காகப் பிரசுரித்த படம் தமிழ்நாட்டில் பிரசித்தமாயிருக்கும் ஒரு நடிகை யினுடையது. அது மட்டுமல்ல; அவர் இன்றைய தினம் காண்பிக்கப்படும் தமிழ்ப் படங்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றென்பதில் காட்சியளிக் கிறார். அவர் ஒரு புது வேஷத்தில் இந்தப் படத் தில் தோற்றமளிக்கிறார், அவ்வளவுதான். இருந்தா லும் பதினாயிரக்கணக்கான நேயர்களால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

காலப் பெட்டகம்

சில நேயர்கள் எழுதியிருக்கும் விடையைப் பாருங்கள்: அசுவத்தம்மா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, எம்.எஸ்.விஜயாள், எஸ்.ஸி. கோமதி, எஸ்.பி.எல்.தனலக்ஷ்மி, கண்ணாம்பாள், காஞ்சனமாலா, குமாரி ருக்மணி, கே.எல்.வி.வஸந்தா, சந்தானலக்ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள், சூரிய குமாரி, செல்லம், டி.பி.ராஜலக்ஷ்மி, டி.எஸ். தமயந்தி, தவமணிதேவி, பாலசரஸ்வதி, பேபி சகுந்தலா, பேபி சரோஜா, டி.ஆர்.ராஜகுமாரி, ராஜம்மாள், ராஜாமணி, ஜனகம், ஜி.சுப்புலக்ஷ்மி

இப்படித் தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகை பேர் பாக்கி விடாமல் பொறுக்கியெடுத்து எழுதி யிருக்கிறார்கள். சில நேயர்களோ சாந்தா ஆப்தே, கண்ணன் பாலா, நஸ்ஸீம், நெரிஸ்ஸா, லீலா சிட்னிஸ், லீலா தேசாய் என்று வடநாட்டு நடிகை களின் பெயர்களையும் எழுதியிருக்கிறார்கள்.

சில நேயர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், சிறுகளத்தூர் சாமா, எம்.கே.ராதா, பெத்தாபுரம் ராஜு, பி.எஸ்.ஸ்ரீநிவாஸராவ் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். படத்திலிருப்பவர் ஒரு நடிகை என்று நாம் சொன்னதைக்கூட அவர்கள் நம்பத் தயாராயில்லை.

இப்படிப் பலரைப் புது வேஷத்தால் ஏமாற்றும் இந்த நடிகை யார்? ஸ்ரீமதி டி.ஏ.மதுரம்தான். மெஸ்ஸர்ஸ் நாராயணன் கம்பெனியாருக்குச் சொந்தமான பக்ஷிராஜா பிலிம்ஸ் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டு வரும் 'அலிபாபா' படத்தில் இந்த வேஷத்தில் தோன்றுகிறார்.


வெறுமே கேரிகேச்சர் படங்களை மட்டுமே வரைந்துகொண்டு இருந்த ஓவியர் தாணு, விகடனில் வரைந்த முதல் கார்ட்டூன் இதோ...

காலப் பெட்டகம்

இந்தியாவில் பத்திரிகாசிரியர்கள் இப்படிப்பட்ட ஆபத்தான நிலைமையிலேதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

-17.11.40


விகடன் பேச்சு

காலப் பெட்டகம்

''உன் மனைவி ஊரில் இல்லையா?''

''இல்லை; அவளுக்கு வாரத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.''

''பரவாயில்லையே! நீ உன் மனைவியின் பேரில் ரொம்ப பிரியமாயிருக்கிறாயே!''

''வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதத் தப்பினால் தான் புறப்பட்டு வந்துவிடுவதாக அவள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்.''

***************

காலப் பெட்டகம்

காமு: நான் உன்னிடம் சொன்ன ரகசியத்தை அலமுவிடம் சொல்லாதே என்று சொன்னேனே. நீ அதை அவளிடம் சொன்னதாக அலமு என்னிடம் சொன்னாளே?

நீலா: சொல்லிவிட்டாளா? நான் அதை அவளிடம் சொன்னதாக உன்னிடம் சொல்ல வேண்டாமென்று சொல்லி வைத்திருந்தேனே!

காமு: சரி, நான் அவள் சொன்னதை உன்னிடம் சொன்னதாக நீ அவளிடம் சொல்லி விடாதே!

காலப் பெட்டகம்

***************

சினிமா டைரக்டர்: அந்தச் சிங்கத்தைக் கண்டு கொஞ்சமும் பயப்படாதே! அதை ஒரு பூனை என்று நினைத்துக் கொள்.

நடிகன்: அப்படியே செய்கிறேன். ஆனால் அந்தப் பூனை என்னை எலி என்று நினைத்துக் கொண்டு விட்டால்?

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்