ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்
சத்குரு ஜக்கி வாசுதேவ், எழுத்தாக்கம்: சுபா
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே!
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

''பொதுவாக நான் தனிமையை விரும்பியது இல்லை. உறவுகள், வாழ்க்கையை ஆழமாக உணர்வதற்கு உதவுபவை என்பது என் கருத்து. ஆனால், அதே உறவுகள் என் ஆன்மிகப் பயணத்துக்குத் தடையாக இருக்குமோ என்று அச்சமாகவும் உள்ளது. ஆன்மிகத் தேடலில் தனியாகச் செல்லவா அல்லது யாரையாவது உடன் வைத்துக்கொள்ளவா?''

''காலையில் வாக்கிங் போகும்போது ஒரு நண்பர் வேண்டியிருக்கிறது. இரவு பார்ட்டிக்குப் போவதற்கு வேறுவிதமான நண்பரைத் தேடுகிறீர்கள். தொழில் செய்யும் நேரத்தில் அதற்கு இன்னொருவிதமான நண்பர் தேவைப்படுகிறார்.

நமக்கு உடல்நிலை அளவில் ஒரு தேவை. மனநிலை அளவில் ஒரு தேவை. உணர்ச்சிநிலை அளவில் ஒரு தேவை. பொருளாதார நிலை அளவில் ஒரு தேவை. சமூகநிலை அளவில் ஒரு தேவை. இப்படிப் பலவிதமான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு பலவிதமான உறவுகளைத் தேடிக்கொள்கிறோம்.

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

மற்றபடி எந்த உறவும் உங்களுடைய உண்மையான உள்தன்மையைப் பிரதிபலிக்கும்விதமாக அமைவது இல்லை. உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ('life is a sexually transmitted disease') என்றார். காமம் என்பது உடல்நிலை அளவிலும், மனநிலை அளவிலும் மட்டுமே பிறக்கிறது. உடல், மனம் இவற்றை மட்டுமே அனுசரித்து வாழும் சமூகத்தில் அதையே மனிதனின் அடிப்படை என்று கற்பனை பண்ணிக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை.

உண்மையில் உங்கள் உயிர் முற்றிலும் முழுமையானதாகத்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அதை இட்டு நிரப்ப அதற்கு இன்னொரு உயிரின் உதவி ஒன்றும் தேவை இல்லை.

ஆனால், அந்த முழுமையை உணர இயலாதவர்களுக்குத் தங்கள் பக்கத்தில் ஏதாவது ஓர் உறவை வைத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டும் என்று வருகிறீர்கள். மாமியார், மனைவி, இரண்டு குழந்தைகள் சகிதம் வந்தீர்கள். மாமியாருக்கு கால் சொன்ன பேச்சைக் கேட்காது. மனைவி நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாள். குழந்தைகள் யார் சொல்லும் பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்று ஒரு நிலைமை.

'சம்போ, சிவ சம்போ' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக்கொண்டு மலை ஏறுபவர்களைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுடன் ஏழு மலை ஏற வேண்டும் என்று ஆசை தான். ஆனால், உடன் வந்தவர்களைப் பார்க்கிறீர்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும், உங்கள் மனைவி 'ஊ...ஃப் ஊஃப்' என்று பெருமூச்சு விடுகிறார். குழந்தைகள் குய்யோ குய்யோ என்று கத்துகின்றன. மாமியார் முழங்காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார்.

'அட! மலை உச்சிக்குப் போனால்தானா? அடிவாரமே எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்' என்று உங்கள் வாயில் இருந்து ஒரு தத்துவம் உதிர்கிறது. முற்றிலும் உணர்ந்ததால் உரைத்த தத்துவமா இது? இல்லை. இயலாமை காரணமாக, பலவீனம் காரணமாக உதிர்க்கப்படும் ஒரு தத்துவம் இது. இதுவே தனியாக வந்திருந்தால், ஒருவேளை மலை ஏறிப் பார்த்திருப்பீர்கள்.

ஒருநாள் சங்கரன் பிள்ளையை அவருடைய அப்பா, அம்மா, மாமா, அத்தை, சித்தி என்று அத்தனை பேரும் சூழ்ந்திருந்தார்கள்.
சங்கரன் பிள்ளை சொன்னார், 'பக்கத்துத் தெருவில் துளசி இருக்கிறாளே, அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!'

சங்கரன் பிள்ளையின் அப்பா சொன்னார், 'டேய் முட்டாள்! அந்தப் பெண்ணுக்கு ஒரு காசுகூட சொத்து இல்லை!' அம்மா, 'அவ அநாதைடா... என்ன சாதின்னே தெரியாது!' என்றாள். அத்தை சொன்னார், 'அவள் தலைமுடியைப் பார்த்தாயா? கேவலமாக இருக்குமே?' மாமா சொன்னார், 'அவ அழகா இல்லடா!'

மாமாவின் வாண்டுப் பையன் கத்தினான், 'ஐயோ அங்கிள், அவளுக்கு கிரிக்கெட்னா என்னன்னு தெரியல!'

'இப்படி ஆளாளுக்குக் குழப்புவதற்குக் குடும்பத்தார் யாரும் அவளுக்கு இல்லை என்பதுதான் அவளை நான் தேர்ந்தெடுத்த காரணம்!' என்றார், சங்கரன் பிள்ளை.

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதற்காக இரண்டு பேர் நண்பர்களாகச் சேர்ந்திருக்கவே அவசியம் இல்லையா? அப்படி அல்ல. யாரையும் வெறும் உறவாகப் பார்த்திருந்தால், பிரச்னை இல்லை. குறிப்பிட்ட உறவு உங்களுடைய ஏதோ ஒரு தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள சௌகர்யமாக இருந்தால், அந்த உறவின்மீது மட்டும் பற்றுக்கொள்கிறீர்கள்.

பற்று வந்தால், அது ஆன்மிகத்துக்குத் தடையா? ஆன்மிகத்துக்கு மட்டும் அல்ல; வாழ்வை உணர்வதற்கே அது ஒரு தடைதானே? எப்போது எதன் மீதாவது உங்களுக்கு ஒரு பற்று வந்துவிட்டதோ, அதன் உண்மையான தன்மையை உங்களால் பார்க்க முடியாது. அந்தப் பற்றுகூட அன்பினால் வரவில்லை. உங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உணர்வு காரணமாக, ஒன்றைப் பிடித்துவைத்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள்.

என்ன முட்டாள்தனம் இது? தனிமையில் இல்லாமல், இரண்டு பேராக இருந்தால், துன்பமே தொடாதா? மரணமே வராதா?

கௌதம புத்தரிடம் ஒருவர் இதே போன்ற கேள்வி கேட்டார்...

'ஆன்மிகத் தேடலில் தனியாகப் போவது மேலா? அல்லது, ஒருவரைத் துணைக்கு வைத்துக்கொள்வது மேலா?'

'ஒரு முட்டாளுடன் பயணம் செய்வதைவிட தனியாகப் போவதுதான் மேல்' என்று பதில் சொன்னார், புத்தர்.

பொதுவாக, வழிப் பயணங்களில் நம்முடன் நான்கு பேர் இருந்தால் எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. தனியாகப் போனால், அவை இராது. ஆனால், அதே சமயம் உங்களைக் கட்டுப்படுத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்பதும் பெரிய வசதிதானே?

வழிப் பயணம் உடல் தொடர்பானது. மனம் தொடர்பானது. ஆன்மிகம் என்பது உள்நோக்கிய பயணம். வேறுவிதமாக நீங்கள் விரும்பினாலும், அதை நீங்கள் தனியாகத்தானே மேற்கொண்டாக வேண்டும்?

'வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால், துணையுடன் பயணம் செய்' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம்.

எது சரி, எது தப்பு என்று எதுவும் இல்லை. இதை இப்படித்தான் செய்ய வேண்டும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடை யாது. தனி மனிதனுடைய தேவை எப்படி இருக்கிறதோ, அப்படிச் செய்துகொள்வதுதான் உத்தமம்.

ஆசிரமத்தைச் சமூகத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் அமைப்பதற்குக் காரணம் என்ன? மற்ற கட்டாயங்களில் இருந்து விடுபட்டு அமைதியாக அப்படியே உட்கார்ந்து மனநிலை, உடல்நிலை, சக்தி நிலை இவற்றைச் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும். பின் 'நான் எப்படிப் போனால் நல்லது?' என்று அதற்குத் தேவையான கவனம் கொடுத்து நிர்ணயம் செய்தால், அது உங்கள் வளர்ச்சிக்குப் பெருமளவு உதவி செய்யும்!''

சத்குருவின் 'ஜென்'னல்!

நான்கு துறவிகள் ஏழு நாட்களுக்கு யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தியானம் செய்வது என்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

முதல் நாள். இரவு காற்றில் மெழுகுவத்திச் சுடர் படபடத்தது. 'ஐயோ, மெழுகுவத்தி அணையப் போகிறது' என்றார், ஒருவர். 'அட! நாம் பேசக் கூடாது என்பதை மறந்தாயா?' என்றார் இரண்டாமவர். 'எதற்காகத்தான் நீங்கள் பேசுகிறீர்களோ?' என்றார் மூன்றாவது துறவி. 'ஹா... ஹா! நான்தான் எதுவும் சொல்லவில்லை' என்றார் நான்காவது துறவி.

சத்குருவின் விளக்கம்:

மௌனமாக இருக்கப்போவதாகச் சொன்ன நான்கு துறவிகளை கலைப்பதற்கு உலகையே அதிரவைக்கும் நிகழ்வு எதுவும் நடந்துவிட வில்லை. ஒரு மெழுகுவத்தியின் படபடப்பு போதுமானதாக இருக்கிறது.

செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்

உங்கள் மனது அதற்குப் பழக்கப்பட்ட சில கட்டாயங்களைத் தாண்டிச் செல்வது சுலபம் அல்ல. உங்கள் இறந்த காலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏராளமான பதிவுகள்தான் மனதை ஆள்கின்றன. இதைத்தான் நாம் கர்மா என்கிறோம். வெளிப்படையான எதிரியைச் சமாளிக்கலாம். உள்ளிருந்து வேலை செய்யும் உளவாளியை என்ன செய்வீர்கள்?

வேறு யாராவது பிடித்துவைத்திருந்தால், நீங்கள் வெளியே வந்துவிடலாம். இது நீங்களே கவனம் இல்லாமல் பூட்டிக்கொண்ட சிறை. அந்தச் சிறை மீது பற்று வேறு வைத்துவிட்டீர்கள். வெளியே வருவது எப்படி எளிதாக இருக்க முடியும்?

முழுமையான விழிப்பு உணர்வும், குருவின் மேன்மையான ஆசிகளும் இருந்தால் அதுவும் சாத்தியமாகும்!

 
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்
-சரி செய்வோம்...
செய் செய்யாதே! :சத்குரு ஜக்கி வாசுதேவ்