ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

சந்திரலேகா

சந்திரலேகா

சந்திரலேகா
விகடன் பொக்கிஷம்.
சந்திரலேகா
சந்திரலேகா
சந்திரலேகா
சந்திரலேகா
சந்திரலேகா
சந்திரலேகா

(சாமா, சாஸ்திரி, பாகவதர்)

சாஸ்: அடேடே! அதென்ன கையிலே? 'சந்திரலேகா' சினிமா புஸ்தகம் போலன்னா இருக்கு!

சாமா: ஆமாம். இதுல சந்திர லேகா தயாரிப்பைப் பத்திரொம்ப சுவாரஸ்யமான விவர மெல்லாம் போட்டிருக்கு.

பாக: என்னங்காணும் போட் டிருக்கு? ரொம்ப செலவாகியிருக்காமோ?

சாமா: ஆமாம், சாஸ்திரிகளே! சசாங்கன்னு வரானே இளைய ராஜகுமாரன், அவனுடைய அறையை நிர்மாணம் பண்றதுக்கு நிஜத் தேக்கு கருங்காலி இதுகளையே உபயோகித்து தத்ரூபமாகவே செய்துட்டாளாம். அதைத் தயாரிக்கிற துக்கு மட்டுமே 75,000 ரூபா செலவாகியிருக்காம்.

சாஸ்: அடே அப்பா! அந்தப் பணத்துக்கு, ஒரு பெரிய பங்களாவையே விலைக்கு வாங்கிடலாம் போலிருக்கே!

சாமா: அதே மாதிரி, அரண் மனைக்கு வெளியிலே ஒரு பாலம் தொங்கறது பாருங்கோ சங்கிலியிலே, அதுவும் நிஜப் பாலமேதானாம். அநேக இன் ஜினீயர்கள் சேர்ந்து அதைக் கட்டினாளாம் இந்த ஸினிமா வுக்காகவே!

சாஸ்: வாஸ்தவம்தான்! நாம்பதான் அன்னிக்குப் பார்த் தோமே! ஒவ்வொரு ஸெட்டிங் குமே பிரமாதமாதான் இருந் துது!

சாமா: ஸெட்டிங் மாத்திரம் தானா! ராஜகுமாரி உடுத்தியி ருந்த விதவிதமான டிரஸ்கள் என்ன! நாடோடிப் பெண்கள் உடுத்தியிருந்தார்களே, அந்த டிரஸ்கள்தான் என்ன..!

சாஸ்: குதிரைகள் என்ன...

சாமா: குதிரைகள் என்றதும் ஞாபகம் வரது! இந்தக் குதிரைகளை வைச்சிண்டு பிடிச்சிருக்கிற காட்சிகளெல்லாமே ரொம்ப ஆபத்தானதாம்! ஒரு சமயம் ரஞ்சனையே கீழே தள்ளிப்பிடுத் தாம் ஒரு குதிரை!

சாஸ்: ஐயையோ! அது வேறயா?!

சாமா: அது மட்டுமில்லே, சாஸ்திரிகளே! முரசாட்டம்கிறதும் எவ்வளவு ஆபத்தான டான்ஸாம் தெரியுமா? நாற்பது அடி உயரத்திலே முரசுகளை ஏற்றி வைச்சு, அது மேலே நின் னுண்டு டான்ஸ் பண்ணியிருக்காளாம்! கரணம் தப்பினா மரணம்னு சொல்லுவாளே, அது மாதிரிதான்!

சாஸ்: எதுக்காக அவ்வளவு உயரத்திலே நாட்டியமாட ணும்?

சாமா: அப்பத்தானே அவாளைக் கீழேயிருந்து நன்னா போட்டோ எடுக்கலாம்!

சாஸ்: ஓஹோ!

சாமா: இதையெல்லாம்விட, சிங்கத்தையும் புலியையும் மோத விட்டுப் பக்கத்துலே வந்து அதைப் படம் பிடிச்சிருக்காளே, அது இன்னும் எவ்வளவு ஆபத் துங்கிறேன்!

சந்திரலேகா

சாஸ்: அடே அப்பா! ரொம் பத் துணிச்சலான காரியம் தான்!

சாமா: துணிச்சல்தான் படம்பூராவுமே! கத்திச் சண்டை போடறாளே இரண்டு பேர், எப்படி இருக்கு அது?

சாஸ்: ஐயையோ, அதை நினைச்சாலே பயமா இருக்குன்னா! அவா சண்டைபோடற போது கொஞ்சம் தவறிட்டா, கத்தி பட்டு ஆள் இரண்டு துண்டாப் போக வேண்டியது தான்! இதையெல்லாம் நினைக்கிறபோது, என்னமாத்தான் இந்தப் படத்தை ஜெமினி ஸ்டூடியோக்காரா மூணு வரு ஷத்துக்குள்ளே பிடிச்சு முடிச் சானு ஆச்சரியமாயிருக்கு!

பத்திரிகைகள் பாராட்டுகின்றன...

(மாதிரிக்குச் சில...)

ஹிந்து (9-4-48): இந்த ராஜ தானியிலோ அல்லது இந்தியா வில் வேறு எங்கிலுமோ இத்த கைய பிரமாதமான காட்சி ஜோடனைகளைக் கொண்டு ஜெமினி சந்திரலேகாவுடன் ஒப்பிடும்படியான சித்திரம் எதுவும் வெளிவந்ததில்லை.

மெயில் (9-4-48): இச் சித்திரம் நம் நாட்டின் சிறப்பு வாய்ந்த விசேஷ அம்சங்களுடன் ஜாஜ்வல்யமாக பிரகாசிக்கிறது.

பிரீ பிரஸ் (9-4-48): ஹாலிவுட்டில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட எந்தப் படத்துடனும் ஒப் பிடக்கூடிய அளவுக்கு இந்திய ஸினிமா உலகிலேயே முதன்மை வாய்ந்த சித்திரம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் (10-4-48): பலரும் பார்த்து ரசிக்கும்படியான சிங்கம், யானை, புலி, குதிரை, கோமாளிக்கூத்து, கயிற்றூஞ்சல் ஆட்டம் முதலிய பலவித அம்சங்களுடன் ஹாஸ்யம் நிறைந்த சித்திரம்.

சுதேசமித்திரன் (10-4-48): ஆங்கில ஆசிரியர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வதுண்டு- 'அவர் தொடாத வேலையில்லை; அவர் தொட்டு சிறப்படையாத காரியமும் இல்லை' என்று. 'சந்திரலேகா' வைப் பார்த்த பின்பு, இந்த வார்த்தைகளை ஸ்ரீ வாஸன் விஷயத்திலும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

தினமணி (10-4-48): 'சந்திர லேகா' ஒரு முதல் தர தமிழ்ப்பட மட்டுமல்ல; அதை ஒரு சர்வ தேசப் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்திரலேகா

ஹிந்துஸ்தான் (11-4-48): பிரமிப்பூட்டும் காட்சி ஜோட னைகள், கண்ணைக் கவரும் இனிய காட்சிகள், இயற்கை யான நடிப்பு, சாமான்ய மக்க ளும் புரிந்துகொண்டு திருப்பிப் பாடக்கூடிய இனிய கீதம், ஹாஸ்யம் கலந்த லளிதமான சம்பாஷணை இவைதான் ஜெமினி சந்திரலேகாவின் தனிச்சிறப்புகள்.

ஆந்திர பத்திரிகா (16-4-48): எக்காலத்திற்கும், எல்லா வகுப் பினருக்கும் இன்றியமையாத சித்திரம் இது. தென்னிந்திய ஸினிமாத் துறையிலே 'சந்திரலேகா' உன்னத ஸ்தானத்தை வகிக்கிறது.

 
சந்திரலேகா
சந்திரலேகா