ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்
விகடன் பொக்கிஷம்.
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

'தமிழ்நாடு தமிழர்களுக்கே!' என அக்காலத்தில் ஒரு கோஷம் எழுந்தது. இந்த விபரீதப் போக் கைக் கண்டித்து, 29.1.1939 இதழில் 'எலி வளை எலிகளுக்கே!' என் னும் தலைப்பில் ஏழு பக்கக் கட் டுரை தீட்டியது விகடன். அதிலி ருந்து ஒரு துளி...

எலிவளை எலிகளுக்கே!

வீட்டில் எலிகளின் கூச்சல் ரொம்ப அதிகமாய்ப் போயிற்று. ''எலி வளை எலிகளுக்கே!'' என்ற கோஷம் கேட்டுக்கொண்டேயிருந் தது. வீட்டிலுள்ளவர்கள் பொறுத் துப் பொறுத்துப் பார்த்தார்கள்; கடைசியில், வீட்டின் எஜமான் ஒரு கொல்லத்துக்காரனை அழைத்து, எலி வளைகளையெல் லாம் மூடி மேலே சிமண்டு போட் டுக் கெட்டித்துவிடும்படி கட்டளை யிட்டான். அப்படியே எலி வளைகள் எல்லாம் மூடப்பட்டன. பிறகு, எலி வளைகள் எலிகளுக்கே ஆயின! எலிகளும் எலி வளை களுக்கு ஆயின!!

காலப் பெட்டகம்

இது என்ன பைத்தியக்காரக் கதையாயிருக்கிறதே என்று நேயர் கள் நினைக்கிறார்கள். நல்லது; ஒரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியக்காரத் தனமாகத்தானே இருந்தாக வேண்டும்?

''தமிழ்நாடு தமிழர்களுக்கே!'' என்ற கூக்குரல் சென்ற சில காலமாகச் சிற்சில இடங்களில் கிளம்புவதைக் கேட்கிறோம். இதற்கு உபமானமாகத்தான் மேற்படி கதையை விகடன் தேடிக் கண்டு பிடித்தான்.

காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெற்றார். காந்திஜியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையா தோல்வியுற்றார். அப்போது ''டாக் டர் பட்டாபி தோல்வி அடையவில்லை; தோல்வி அடைந்தது நான்தான்!'' என்றார் காந்திஜி. இது குறித்து அப்போது 'காந்தியின் தோல்வி' என்னும் தலைப்பில் விகடன் எழுதிய ஏழு பக்கக் கட்டுரையிலிருந்து...

காந்தியின் தோல்வி

இந்த விஷயத்தில், விகடன்கூட காந்திஜியை ஆதரிக்க முடியாமலிருப்பதற்காக மிகவும் வருந்துகிறான். சுபாஷ்போஸின் கட்சியைத்தான் விகடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. சென்ற இதழில் அவருடைய வெற்றிக்குக் காரணங்கள் இன்னின்னவையென்று விகடன் எழுதிய பிறகு, சுபாஷ் போஸ் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், விகடன் கூறிய காரணங்களையேதான் அவரும் கூறியிருக்கிறார்.

''தேர்தல் போட்டி உங்களுக்கும் எனக்குமா நடந்தது? இல் லையே? பின் உங்களுக்கு எப்படித் தோல்வி?'' என்று சுபாஷ் பாபு மகாத்மாவைக் கேட்கிறார்.

''என் கொள்கைகளின் பிரதிநிதியே நான்; என் கொள்கைகளுக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது; அது என்னுடைய தோல்விதான்!'' என்று காந்திஜி விளக்கிச் சொல்லியிருக்கிறார்.

இதற்கு, சுபாஷ் என்ன சொல்கிறாரென்றால், ''இந்தத் தேர்தல் போட்டியில் காந்திஜியின் கொள்கைகளோ என்னுடைய கொள்கை களோ பிரச்னையாக வைக்கப்படவில்லையே?

1. காங்கிரஸ் பிரதிநிதிகளின் வோட்டு சுதந்திரம்

2. பெடரேஷனுக்கு தீவிர எதிர்ப்பு

ஆகிய இரண்டு விஷயங்களைத்தான் என்னுடைய தேர்தல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டேன். இவைதான் எனக்கு வெற்றி அளித்தன. மேற்கொண்டு, அபேட்சகர்களின் தராதரத்தையும் பிரதி நிதிகள் கவனித்திருக்கலாம். மற்றபடி, காந்திஜியின் கொள்கைகளுக்கு மாறாக என்னுடைய கொள்கைகளுக்கு அவர்கள் வோட்டுக் கொடுத்து விடவில்லை'' என்கிறார்.

''ரொம்பச் சரி'' என்றுதான் இதற்கு விகடன் ஒப்பம் வைக்க வேண்டியதாயிருக்கிறது.

இந்த ஆண்டு பிரிட்டனும் பிரான்சும் சேர்ந்து, ஹிட்ல ரின் தலைமையின் கீழ் இருந்த ஜெர்மனியின் மீது போர் தொடுத்தன. இந்த நிகழ்வுகளை 'யுத்த டயரி' என்னும் தலைப்பில் வாரா வாரம் தொகுத்துத் தந்தது விகடன். அதிலிருந்து...

காலப் பெட்டகம்

24-10-39

சண்டையில் ஈடுபட்டிருக்கும் எந்தத் தேச நீர்முழ்கிக் கப்பல் களும் அமெரிக்காவின் கடற் பிரதேசத்தில் 300 மைலுக்குள் வரக் கூடாதென்று ரூஸ்வெல்ட் உத்தரவிட்டிருக்கிறார்.

ஹிட்லருக்கு இப்பொழுது ஒரு புது யோசனை தோன்றியிருக் கிறது. 'முதலில்

காலப் பெட்டகம்

பிரிட்டிஷ் கப்பல் படையை நூற்றுக்கணக்கான விமானங்களாலும், நீர்முழ்கிக் கப்பல்களாலும் தாக்கி நாசம் செய்து விட வேண்டியது. அப்புறந்தான் ஸிக்பிரீட் அரணில் யுத்தத்துக்கு ஆரம்பிக்க வேண்டியது' என்று தீர்மானித்திருக்கிறார். நடுவில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஒற்றுமை குலையும்படி விஷமப் பிரசாரம் செய்துகொண்டிருக்கப் போகிறார்.

ஸினிமா காங்கிரஸ்

ஸினிமா பத்திரிகாசிரியர்கள் மகாநாட்டில் ஒரு பயங்கரமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! படம் பிடிப்பதற்கு முதன்முதலில் ஒரு நல்ல கதை வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். வரவேற்புக் கமிட்டித் தலைவரும் ஸினிமா தயாரிப்பவருமான ஸ்ரீ சந்துலால் ஷா அவர்களே படங்களுக்கு நல்ல கதை வேண்டுமென்று கூறினார். படம் பிடிப்பதற்குக் கதை வேண்டுமாமே! இது என்ன, அநியாயமாகவல்லவா இருக்கிறது!

ஸினிமாவுக்குக் கதை என்றதும் ஹாலிவுட்டைப் பற்றிய தமாஷ் கதை ஒன்று ஞாபகம் வருகிறது. அங்கே ஒரு படம் பிடித்துக் கொண்டிருந்தபோது டைரக்டர், ''கதாசிரியர் எங்கே, எங்கே?'' என்று கூவினார். கதாசிரியர் ஓட்டமாக ஓடி வந்தார். நடி பேசியதை ஒரு நோட்டில் என்னமோ எழுதிக்கொண்டு போனார். ஸ்டூடியோவுக்குப் புதிதாக வந்திருந்த ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு விஷயம் என்னவென்று விசாரித்தார். கதாசிரியர், ''ஐயா! நான் இப்பொழுது முதலில் கதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் நடிகர்கள் நான் எழுதியபடி நடிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் அவர்கள் மாட்டில் ஏதாவது நடித்துக்கொண்டு போவார்கள். அவர்கள் பேசு வதையும் நடிப்பதையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு நான் பிறகு கதையாக எழுதி முடிப்பேன்'' என்றாராம்.

அமெரிக்காவிலேயே இப்படி இருக்கும்போது நமது நாட்டை-அதுவும் தமிழ் நாட்டைப் பற்றிக் கேட்கவேண்டுமா? இந்த நிலைமையில் நல்ல கதை வேண்டுமென்று துணிந்து சொல்வதென்றால் ஸினிமாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதென்றே சொல்லவேண்டும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தது. அதை விகடன் முழு மனதாக வரவேற்றுத் தலையங்கம் எழுதியது. வைதிக கோஷ்டித் தலைவர்கள் சிலர் இதை எதிர்த்தனர். அது பற்றி 'ஸ்வாமி இருக்கிறாரா?' என்னும் தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதி, தன் கருத்துக்கு ஆதாரமாக மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு சந்நிதியிலும் பக்தர் கூட்டம் திரண்டிருப்பதைப் புகைப்படங்கள் எடுத்து, ஏழெட்டுப் பக்கங்களுக்கு வெளியிட்டிருக்கிறது விகடன்.

ஸ்வாமி இருக்கிறாரா?

1. கடவுள் எல்லையற்ற கருணையுடையவர்

2. கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர்

என்று நாம் நம்புகிறோம். ஆனால் மதுரை, வைதிகக் கோஷ்டித் தலைவர்களோ, 'கடவுள் ஹரிஜனங்களை வெறுக்கிறார்; அவர்கள் கிட்ட வந்தால் கடவுளின் சக்தி போய்விடுகிறது!' என்கி றார்கள்.

அதிர்ஷ்டவசமாக, பொதுஜனங்கள் அப்படிக் கருதவில்லை; மதுரைக் கோவிலில் ஸ்வாமியும் அம்மனும் இருப்பதாகவே நம்பித் திரளான ஜனங்கள் தரிசனத்துக்குப் போகிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். ஸ்வாமி, அம்மன் இவர்களுடைய அருள் சக்தி குறைந்து விட்டதாகவும் ஜனங்கள் நினைக்கவில்லை; வழக்கம்போல் பக்தி சிரத்தையுடனேதான் வந்து தரிசிக்கிறார்கள்.

திண்டுக்கல் அட்வகேட் ஸ்ரீ கே.குப்புசாமி ஐயர், எம்.எல்.ஏ. அவர்களும், சென்னை அட்வகேட் ஸ்ரீ என்.ராஜகோபாலய்யங்கார் அவர்களும் இதை நேரில் போய்ப் பார்த்துப் பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் சொல்வது உண்மையல்ல என்று மறுக்கிறார்கள் மதுரை 'வைதிக' கோஷ்டி யார். 'கோவிலுக்கு இப்போது ஒருவருமே போவதில்லை; சூன்யமாய்க் கிடக்கிறது' என்று தந்திமேல் தந்தியடிக்கிறார்கள்.

இவர்கள் யார் சொல்வது நிஜம்? மதுரைக் கோவிலுக்கு ஜனங்கள் இப்போது வருகிறார்களா, அல்லது கோவிலே சூன்யமாய்க் கிடக்கிறதா?

இந்தப் படங்களைப் பாருங்கள்!

இந்த ஆண்டிலிருந்து 'சின்னஞ்சிறுகதை' என்னும் தலைப்பில் வாரா வாரம் ஒரு பக்கக் கதைகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 'சாவி'யும் விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார்.

'நானும் பிறந்தேன்' என்னும் தலைப்பில் இந்த ஆண்டின் முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் 'யமன்'. இவர் வேறு யாருமல்ல, 'கல்கி'யேதான்! கர்நாடகம், ரா.கி. என்பவை அவரின் வேறு சில புனைபெயர்கள்.

ஒரு திரைப்படம் உருவாகிக்கொண்டு இருக்கும்போதே, அந்த ஸ்டில்களோடு அதைத் தொடர்கதையாக வெளியிட்டு முதன்முதலாக ஒரு புதுமையை இந்த ஆண்டுத் துவக்கத்தில் செய்தது விகடன். அந்தக் கதை 'தியாக பூமி'. எழுதியவர் கல்கி.

பாரதியாரின் புதல்வி தங்கம்மாள் பாரதி, விகடன் மார்ச் இதழிலிருந்து தொடர்ந்து ஏழெட்டு வாரங்களுக்கு பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

கனவான்:| என் கைக்கடியாரம் திருட்டுப் போனதாகச் சொன்னேன் அல்லவா? அது நேற்று அகப்பட்டுவிட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்:| இவ்வளவு நாள் கழித்துச் சொல்கிறீரே! திருடனைப் பிடித்தாகி விட்டதே!

***************

இரண்டு பேர் டிராம் வண்டியில் சந்தித்துக் கொண்டனர். ''எங்கே, பாட்டுக் கச்சேரிக்கோ?'' என்று கேட்டார் ஒருவர்.

''போகிறது வழக்கம்தான். ஆனால் இன்று போகவில்லை. இன்று கச்சேரி சுகப்படாது என்று கேள்விப்பட்டேன்'' என்றார் மற்றவர்.

''அட பாவமே! ஆனால் நான் போய்த்தான் ஆகவேண்டியிருக்கிறது.''

''ஏன் அப்படிக் கட்டாயம்?''

''அங்கே நான்தானே இன்று கச்சேரி செய்கிறேன்.''

***************

காலப் பெட்டகம்

''வயிற்றை வலிக்கிறது.''

''ஏன்? நேற்று ராத்திரி என்ன பலகாரமோ?''

''ஏதோ ஒரு மண்ணாங்கட்டி!''

''அப்போ சரிதான்! பின் ஏன் வலிக்காது?''


காலப் பெட்டகம்

'இதுவும் ஒரு பிரகிருதி' என்னும் தலைப்பில் வாரம் ஒரு குணச்சித்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் நாடோடி. இதுதான் பின்னாளில் சாவி எழுதிய 'கேரக்டர்' பகுதிக்கான அடித்தளம்.

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

ஆனந்த விகடனின் பிரபல கார்ட்டூனிஸ்ட் தாணு, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் களத்தில் இறங்குகிறார். அவர் வரைந்த முதல் படமே அட்டைப்படமாக மலர்ந்திருக்கிறது. 'யுத்தப் பிரமுகர்கள்' என்று ஒரு தொடர் நவம்பர் 12 தேதியிட்ட இதழில் தொடங்குகிறது. அதற்கு தாணு வரைந்த படம்தான் இது. படத்தில் இருப்பவர் சேம்பர்லின் துரை.

காலப் பெட்டகம்

'கல்கி'யின் 'தியாக பூமி' தொடர்கதை இந்த ஆண்டு, மே மாத இதழில் முடிவடைந்து, உடனடியாக அது திரைப்படமாகவும் ரிலீசாகிவிட்டது. 'கல்கி' ஆனந்த விகடனில் கேலியும் கிண்டலுமாக எழுதிய சினிமா விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பதாக எண்ணி, 'தியாக பூமி' படத்தை சுதேசமித்திரன், தினமணி, ஹநுமான் போன்ற பத்திரிகைகளில் கிழிகிழியென்று கிழித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 'கல்கி' தமது நகைச்சுவை உணர்வைக் கொஞ்சமும் இழக்காமல் விஸ்தாரமாக மூன்று வாரம் பதில் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வரியையும் அணு அணுவாகப் படித்து இன்புற வேண்டிய நகைச்சுவைக் காவியம் அது. அதிலிருந்து ஒரு துளி எடுத்து இங்கே பிரசுரிப்பதெல்லாம் இயலாத காரியம்.

காலப் பெட்டகம்

விகடனில் ஹிட்லரைப் பற்றித் தலையங்கமும், கார்ட்டூனும் வெளியிட்டதற்கு, பெர்லினிலிருந்து விகடன் நேயர் ஒருவர் பொங்கியெழுந்து கடிதம் எழுதியுள்ளார். அவர் நாட்டால், மதத்தால், நிறத்தால் வேறுபட்டவராயினும் தமிழ்ப் பத்திரிகை படிக்கிறார், தமிழில் எழுதுகிறார் என்பதே எத்தனை சந்தோஷம் தருவதாக இருக்கிறது!

காலப் பெட்டகம்

வழக்கமான சோப்பு, பற்பசை விளம்பரங்களோடு 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' ரேடியோ, 'புல்ஸ் ஐ' கேமரா, காமினியா ஹேர் ஆயில், எவரிமென் ஸ¨ட்டிங்ஸ், பீஸ்டன்-ஹம்பர் சைக்கிள், ஃபயர்ஹேண்ட் ஹரிக்கேன் லாந்தர் விளக்குகள் என ஒரு பக்க விளம்பரங்களும் இந்த ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளன. தவிர அதிர்ஷ்டம் அழைக்கிறது, யயாதி, ரம்பையின் காதல் போன்ற சினிமா விளம்பரங்களும்! இதோ, இப்படியும்கூட ஒரு விளம்பரம்! கேச தைலத்துக்கு கவி தாகூரின் சிபாரிசு! அட, விற்பனையாளர்களும் தாகூர் அண்ட் கோ.

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்