இதனால் சந்திரசேகரின் விஞ்ஞான ஆர்வம் தாற்காலிகமாகச் சற்றுத் தளர்ந்தாலும், தன் ஆராய்ச்சிப் பயிர் செழிக்க பிரிட்டிஷ் மண் ஏற்றதல்ல என்று உணர்ந்து, 1937-ம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 45 ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் செய்தார். இறுதியாக, தான் முதன்முதலில் தொடங்கிய நட்சத்திர ஆராய்ச்சியின் பலனாகக் கண்டுபிடித்த உண்மையை உறுதிப்படுத்தினார். உலகமே அதைக் கண்டு வியக் கும்படி செய்தார். அவருக்கு உறுதுணையாயிருந்து ஊக்குவித்தவர் அவரது துணைவியார் திருமதி லலிதா - அவருடன் சென்னைக் கல்லூரியில் பௌதிகம் படித்தவர்.
இந்தியாவில் முதன்முதலில் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் சகோதரரின் மகன் சந்திரசேகர், விஞ்ஞானத்திற்காக ஒரே குடும்பத்தில் இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு, அதிலும் தென்னகத்திற்கு எத்தனைப் பெரிய பெருமை!
வளர்க நமது விஞ்ஞான ஆராய்ச்சி ஆர்வம்; பாரெங்கும் பரவுக பாரதத்தின் புகழ்!
|