ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்
கவிதைகள்
காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்
காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்
காத்திருப்பு! + மொழி அறிதல்!
காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்
காத்திருப்பு!

அடகுவைத்த
கம்மலுக்கு ஐந்நூறு
ஆட்டுக்கறி
மசாலாவுக்கு இருநூறு
உற்சாக பானத்துக்கு நூறு
சினிமா, அல்வாவுக்கு நூறு
இலவச
தொலைக்காட்சி விற்றதில்
இவ்வளவுதான் முடிந்தது.
பாவாடை கேட்டழுத
தேன்மொழிக்கு
அம்மா சொன்னாள்
'அண்ணனுக்கு
சைக்கிள் தருவார்கள்
அப்போது...'

- எஸ்.தளவாய்சாமி

******************

மொழி அறிதல்!

குழந்தைகளின் மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிவது போலவே
பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்கு மட்டுமே
புரிகிறது!

- இரா.பூபாலன்

******************

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

பயணம்!

பேருந்துப் பயணம்
சாதாரணமானதுதான் எனினும்,
எப்போதேனும்
வரமென வாய்க்கும்
முன்பின் அறிமுகம் இல்லா
குழந்தை ஒன்றை
மடியிலமர்த்தி பயணிக்கையில்!

- ச.கோபிநாத்

******************

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

ம்மியாவ்..!

சாப்பிட அமர்கையில்
அண்ணாந்து முகம் பார்த்து
மியாவ்... என்கிறது
வெள்ளைப் பூனைக் குட்டி
அது அப்பா
என்பதாகவும் இருக்கலாம்!

மிச்ச கருணை!

எறும்பை நசுக்கிவிட்டாய்
வாயில் இருந்த சிறுதீனி
தன் குழந்தைகளுக்கு
எடுத்துப்போனதோ
என்னவோ?

- முத்துவேல்

******************

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

கடவுளின் பரிசு!

கடவுள்
குழந்தைகளுக்குப்
பரிசு தர விழைகிறார்
மூன்று
உலகங்களையும் உருட்டி
பந்தொன்றைச்
செய்து கொடுத்து
விளையாடச் சொல்கிறார்.
வாங்கிப் பார்த்த குழந்தைகள்
மூன்றே நொடியில்
அதைத் தூர
எறிந்துவிடுகின்றனர்.
வானவில்லின் நிறங்களை
தூரிகைகளில் பரவச் செய்து
அழகிய ஓவியமொன்றைப் படைக்கிறார்.
'ச்சீ... என்ன இது
பூச்சாண்டியாட்டம் இருக்கு!'
வெறுத்துப்போன கடவுள்
குழந்தைகளிடமே
விருப்பம் கேட்கிறார்.
யானையைப் போன்ற கரடியும்
காகத்தின் நிறத்தில் முயலும்
மனித மொழி பேசுகிற
டைனோசரும் வேண்டுமாம்.
யோசித்துப் பார்த்த பின்
கடவுள்
அனிமேஷன் படம்
இயக்கக் கிளம்பிவிட்டார்!

- ப.ராமச்சந்திரன்

******************

காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்

தீண்டாமை!

ஆசையாய்
அடம்பிடித்து வாங்கிய
மயில் கழுத்து பார்டரில்
தாழம்பூ தவழும்
பட்டுப் பாவாடை
பத்திரமாகத்
தூங்குகிறது பெட்டியில்.

பலவித பலகாரங்களைப்
படையிலிடுகிறாள் அம்மா
என்னை
பட்டினி போட்டுவிட்டு.

அடிவயிற்றில்
பிசையும்
வலியோடு அவளை
அணைத்து அழ
நெருங்குகையில்
'தொடாதே...
தீட்டு ஒட்டிக்கும்'
என்கிறாள் கோபமாக!

அப்பா முதுகில்
உப்பு மூட்டை தொங்கியபடி
பழிப்புகாட்டி
சிரிக்கிறாள் இன்னும்
பருவமெய்தாத் தங்கை.

கருகும் பூக்களென
கைப்பட்டாலென
செடிக்கு நீரூற்றும் உரிமையும்
மறுக்கப்படுகிறது எனக்கு.

சனி மூலை, அக்னி மூலை
தெற்கு மூலை, குபேர மூலை என எந்த மூலையிலும்
எனக்கோர் இடமின்றி
தள்ளப்படுகிறேன்
வீட்டுக்கு வெளியே.

பொம்பளத் தீட்டு
அம்மனுக்கு ஆகாதாம்.
அம்மனும் பெண்தானே...
அப்புறமேன் ஆகாது?

தனிமை மட்டுமே
துணையிருந்த இரவில்
இடி சத்தத்துக்கும்
பூனையின் அலறலுக்கும்
பயந்து
தூக்கம் தொலைத்த
இரவின் மறுநாள்
இரும்புத் துண்டை நீட்டி
அம்மா சொன்னாள்...
'வெச்சுக்க... இல்லேன்னா
பேய் பிடிச்சுடும்!'

வேகமாக
வீசி எறிகிறேன் அதை.
கோபமென அவள்
நினைத்திருக்கக் கூடும்.
உண்மையில்,
பேய்க்காவது என்னைப்
பிடிக்கட்டுமே என்கிற
நப்பாசைதானே தவிர
மற்றபடி
வேறொன்றும் இல்லை!

- சுமதி பெனடிக்ட்

படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி

'ஆனந்த விகடன், 757.அண்ணாசாலை, சென்னை-2' என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள்!

 
காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்
காத்திருப்பு! + மொழி அறிதல்! - கவிதைகள்