விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
அஜயன் பாலா
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

சென்ற இதழ் தொடர்ச்சி...

'இன்றும் நாளையும் இன்னல்கள் தொடர்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்த உலகம் எல்லோருக்குமானதாக விடியும் என்பதாக!'

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

ஜாலா வேர் கர்ரி (Ijaalaa ware curry), மார்ட்டினைக் கத்தியால் குத்தியவள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண். அவள் பயன்படுத்தி இருந்தது கடிதங்களைக் கிழிக்கப் பயன்படுத்தும் கத்தி. ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்த மார்ட்டினைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, ஹார்லம் வீதிகளில் ஆம்புலன்ஸ் பறந்தது. இன்னும் ஓர் இஞ்ச் ஆழத்தில் கத்தி இறங்கி இருந்தால், அவரது இதயத்தைப் பதம் பார்த்து இருக்கும். மருத்துவர்கள், கத்தியை வெளியே எடுத்து, மார்ட்டினைப் பிழைக்கவைத்துவிட்டனர்.

மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கத்தியால் குத்துப்பட்ட நிலையில் மார்ட்டினின் முழுப் பக்கப் புகைப்படம் அச்சாகி இருந்தது. வாழ்த்து அட்டைகளும் மலர்க் கொத்துகளும் மார்ட்டினுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனையில் வந்து குவிந்தன.

இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவின் இதரப் பகுதிகளில் நடந்து வந்த இனத் துவேஷத்தை எதிர்த்துக் கறுப்பின மாணவர்களின் போராட்டங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக வன்முறையும் தீவிரமாக இருந்தன. அதிகமாகப் பெருக்கெடுத்து வரும் இனத் துவேஷம் மற்றும் வன்முறை ஆகியவற்றைக் கண்டித்து மார்ட்டின், 1963 ஆகஸ்ட் 28-ல் பிரமாண்டமான பேரணி ஒன்றை நிகழ்த்தத் திட்டமிட்டார். வாஷிங்டனில் ஆபிரகாம் லிங்கனின் நினைவகத்துக்கு எதிராக இருந்த மிகப் பெரிய மைதானத்தில் மக்கள் பேரணியாகக் கூடினர். நேரம் செல்லச் செல்ல ஒட்டுமொத்தக் கூட்டத்தின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தையும் தாண்டியது.

அமெரிக்க வரலாற்றிலேயே கறுப்பினத்தவர்கள் அப்படி ஒரு கூட்டத்தை எதிர்கொண்டது இல்லை. அந்த மகத்தான கூட்டத்தின் முன்தான் மார்ட்டின் லூதர் கிங், 'எனக்கு ஒரு கனவு இருக் கிறது' எனும் தலைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க தனது விடுதலை உரையை நிகழ்த்தினார். உலகின் தலைசிறந்த உரைகளில் ஒன்றாக இன்றளவும்கருதப் படும் அந்தப் பேச்சு அமெரிக்காவின் மனச்சாட்சியை உலுக்கி எடுத்தது.

நவம்பர் 22, 1963 அமெரிக்கர்களின் துக்க தினம். காலை அட்லாண்டாவில் தனது வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பேரதிர்ச்சி. காரணம், தொலைக்காட்சியில் வந்த செய்தி. அதில் திரும்பத் திரும்ப அமெரிக்க ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி ஒளிபரப்பப்பட்டது. துக்கம் தாளாமல் தனது மனைவியை நோக்கித் திரும்பிய மார்ட்டின், 'அமெரிக்காவுக்கு நோய் பீடித்து விட்டது. ஒருநாள் எனக்கும் இதே முடிவு தான்' என்றார். கராட்டா தனது கணவரின் தோள்களை இறுகப் பற்றி ஆறுதல்சொன் னார். கென்னடிக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார் லிண்டன் ஜான்சன். கென்னடி பரிந்துரை செய்து விட்டுப் போன, சம உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்தார். இதற்காக 1964-ல் ஜுலை இரண்டாம் நாள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மார்ட்டின் லூதர் கிங் கலந்துகொண்டார்.

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

தொடர் வேலையின் காரணமாக, ஓய்வே இல்லாமல் அலைந்த காரணத்தினால் மார்ட்டின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. பேசியவர் கராட்டா. அவரது குரலில் அபரிமிதமானஉற்சா கமும் மகிழ்ச்சியும் வழிந்துகொண்டு இருந்தது. ''மார்ட்டின், நியூயார்க் டெலிவிஷன் நெட்வொர்க்கில் இருந்து பேசினார்கள். உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்து இருக்கிறதாம்.''

மார்ட்டினால் அதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி அவரது எண்ணங்களின் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு பீறிட்டது. ''இது எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. என்னோடு பேருந்து நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் சொந்தமானது'' எனத் தீர்மானித்துக்கொண்டார்.

1964, டிசம்பர் 10-ம் நாள் நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில்... அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை மார்ட்டின் பெற்றார். அப்போது அவருடைய வயது 33. இத்தனை சிறிய வயதில் அந்த விருதை இதற்கு முன் எவரும் வாங்கியது இல்லை. அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையும் ஒரு தலை சிறந்த உரையாக மாறியது. 'இன அநீதி என்ற நீண்ட இரவுக்கு முடிவுகட்ட அமெரிக்காவின் 22 மில்லியன் கறுப்பின மக்கள் ஒரு நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டு இருக்கும் இந்நேரத்தில், அமைதிக்கான நோபல் பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன்...' எனத் தொடங்கிய அந்த உரை, இன்றும் கறுப்பின விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தில் மெம்பிஸ் எனும் நகரம். அங்கு பணிபுரிந்த கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். நிர்வாகம் பணிய மறுக்கவே, போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியை நடத்தத் திட்டமிட்டவர்கள், அதற்கு மார்ட்டினைத் தலைமை ஏற்க வரும் படி அழைப்பு விடுத்தனர்.

1968, மார்ச் 28-ம் நாள் நடந்த பேரணிக்கு மார்ட்டின் தலைமை ஏற்றார். பிரமாண்டமான அந்தப் பேரணியின் ஊடே எதிர்பாராத கல வரம் வெடித்துக் கிளம்ப, பேரணி பாதியில்தடை பட்டது. மார்ட்டின் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அந்தப் பேரணி மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரினார். அது போலவே இரண்டாவது முறை அந்தப் பேரணி ஏப்ரல் 4-ம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏப்ரல் 3-ம் நாளே மெம்பிஸ் வந்த மார்ட்டினை இந்த முறை லாரெய்ன் என்ற விடுதியில் தங்கவைத்தனர். அந்த விடுதிக்கு நேர் எதிராக இருந்த இன்னொரு விடுதிக்கு ஒரு மர்ம நபர் கையில் ஒரு பெட்டியுடன் வந்து இறங்கினார். தன் பெயர் ஜேம்ஸ் எர்ல் ரே எனப் பதிவு செய்தான். பகல் வெளிச்சம் விழும்படியான அறை ஒன்றைக் கேட்டு, சாவியை வாங்கிக்கொண்டான்.

மறுநாள் மார்ட்டின் தன்னைச் சந்திக்க வந்த ஜெஸ்ஸி ஜாக்ஸனுடன் பேசியபடி பால்கனிக்கு வந்தார். எதிர் விடுதியில் துப்பாக்கியுடன் காத்திருந்த ரே விசையைத் தட்டிவிட, மார்ட்டின் சத்தம் இன்றிக் கீழே சரிந்தார். கீழே விழுந்த மார்ட்டினைத் தூக்கிய ஜெஸ்ஸி ஜாக்ஸன் கைகள் முழுவதும் ரத்தம். இன வெறிக்கு எதிராக அகிம்சையின் வழியில் போராடிய அந்த மாமனிதருக்கு, காலம் ஜேம்ஸ் எர்ல் ரே எனும் எதிரி ஒருவனை உருவாக்கி, அவன் கையில் துப்பாக்கி ஒன்றையும் கொடுத்து அனுப்பி, அவரது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மார்ட்டின் இறந்த சேதி அமெரிக்காவையே உலுக்கி எடுத்தது. வன்முறைக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடி வந்த அந்த மாமனிதரின் இறப்புச் செய்தி பெரும் வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்தது ஒரு பரிதாபமான முரண்.

நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!

அவர் இறந்த ஏப்ரல் 7-ம் நாளை மார்ட்டின் லூதர் கிங் நாளாக அறிவித்தார் அமெரிக்க அதிபர். அன்று நாடு எங்கும் அமெரிக்கத் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. ஏப்ரல் 9 அன்று மாலை, நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அமெரிக்க மக்கள் கலந்துகொண்டனர். அன்று பல வெள்ளை இனத்தவர்கள் தாங்கள் வெள்ளை இனத்தவராகப் பிறந்தமைக்கான குற்ற உணர்ச்சியில் மருகினர். அவர்களது கண்களில் இருந்து வழிந்த நீர், மனிதர்களை நிறத்தால் வேறுபடுத்திய இயற்கையைக் கேள்வி கேட்பதாக இருந்தது.

அட்லாண்டாவின் சதர்ன் வியூவில் அந்த மாமனிதருக்கான கல்லறை இன்றும் மனித குலத்தின் ஆன்மாவுக்கு நம்பிக்கை அளிக்கும் சின்னமாக விளங்கி வருகிறது.

மிக இளம் வயதிலேயே அநீதிகளுக்கு எதிராகக் கிளம்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் குரல் இன்றும் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது விதவிதமான பெயர்களில், மொழிகளில், குரல்களில்!

 
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!
நாயகன் -மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் -எனக்கு ஒரு கனவு இருக்கிறது!