விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா?
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

தமிழ்ப் படங்களிலும் இதழோடு இதழ் 'இச்' தரும் காட்சிகள் பெருகிவிட்டனவே?

அப்படி ஒன்றும் பெருகிவிட்டதாகத் தெரியவில்லை. முத்தக் காட்சி விஷயத்தில் நாம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்! 'தமிழ் மண்ணின் கலாசார'ப்படி பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை நாம் தர்மசங்கடமாகத்தான் பார்க்கிறோம். மேலை நாடுகளில் அப்படி இல்லை. அங்கேயெல்லாம் 'சினிமாவில் மிகச் சிறந்த முத்தக் காட்சிகள்' என்று லிஸ்ட்கூட எடுத்திருக்கிறார்கள்! அந்தப் பட்டியலில் கிளார்க் கேபிள் நடித்த 'Gone with theWind' முதல் இடத்தையும், ' From Here to Eternity' இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன ('டைட்டானிக்' பத்தாவது இடம்!). '... Eternity ' படத்தில் பர்ட் லங்காஸ்டர்-டெபோரா கெர் முத்தம் புகழ் பெற்றது. கடற்கரையில், டெபோராவைப் படுத்தபடி வாரியணைத்து பர்ட் நீண்டநேரம் ஆவேசமாக முத்தமிடுவார். அலைகள் ஆச்சர்யமாக அவர்களை மீண்டும் மீண்டும் தொட்டுவிட்டுப் போகும். அது முத்தம்! தமிழ் சினிமாவில் இன்றுவரை முத்தக் காட்சியில் பிரமாதப்படுத்த எந்த இயக்குநரும் முழுசாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. (ஏதோ என்னால் முடிந்த அளவு இயக்குநர்களை உசுப்பேற்றி இருக்கிறேன்; பார்ப்போம்!)


எம்.ராஜா, திருப்பூர்.

தோலை உரித்துவிடுவேன் என்று அந்தக் கால ஆசிரியர்கள் திட்டினார்களே! நிஜமாகவே மனிதத் தோலை உரிக்க முடியுமா?

மனிதத் தோல் ரொம்ப மெல்லிசு. ஆரஞ்சுப் பழத் தோல் மாதிரி எல்லாம் உரிக்க முடியாது. ஆப்பிள் மாதிரிதான் உரிக்க முடியும்!


கல்லை. போஸ்டல்ராஜ், புதுச்சேரி.

மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்

டிஸ்கவரி சேனலில் மிருகம் ஓடும்போதும், பறவை பறக்கும்போதும் கூடவே கேமராவும் ஓடுகிறது, பறக்கிறதே... எப்படி? (சாட்டிலைட் மூலமாக எடுப்பார்கள் என்கிறாள் என் மகள்.)

'சாட்டிலைட்' மூலம் யானையே தெரியாது; பறவை எப்படித் தெரியும்? விசேஷமான 'ஜூம்' லென்ஸ் பொருத்திய கேமராக்கள் மூலம், தேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பிரமாத மாகப் படம் பிடிப்பார்கள். தவிர, மிகச் சிறந்த 'எடிட்டிங்'கை இந்த வகைப் படங்களில் நீங்கள் பார்க்கலாம். ஸ்டுடியோவிலும் (குகைக்குள்ளே இருந்து ராஜநாகம்!) காட்சிகளை 'செட்டப்' பண்ணுவார்கள். இரையை சிங்கங்கள் சாப்பிடுகிற சில காட்சிகளில்கூட செட்டப் செய்கிறார்களோ என்று நான் சந்தேகப்படுவது உண்டு. கொல்லப்பட்ட உடனே மானோ, பன்றியோ எப்படி விறைத்துக்கொள்ளும்?!


சு.மு.சுரேஷ், தகட்டூர்.

கள்ளக் காதலுக்காகத் தன் மகனையே குரூரமாகக் கொலை செய்த தாய் பற்றிப் படித்தீர்களா... ஏன் இப்படி?!

காதலுக்குத் தடையாக இருந்தார்கள் என்பதற்காகத் தன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் ஒரு பெண் கொலை செய்ததைப் பற்றியும் படித்திருப்பீர்கள். உண்மையான காதல் தியாகமயமானது. சோதனைகளையும் சித்ரவதைகளையும் தாங்கக்கூடியது. மகனையோ, குடும்பத்தினரையோ கொல்லச் செய்வது காதல் அல்ல; காமம்!

மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
பொன்விழி, அன்னூர்.

யாராவது மோசமாகப் பாடினால், 'கழுதையைப் போல்...' என்று ஒப்பிடுகிறார்களே, கழுதைக்குப் பாட வருமா?

எல்லா விலங்குகளும் ஒரு சத்தத்தை மட்டும்தான் வெளிப்படுத்தும். கழுதை மட்டும் காற்றை உள்ளுக்கு வாங்கும்போது ஒரு சத்தம், வெளிப்படுத்தும்போது ஒரு சத்தம் - 'ச... ரி...' அல்லது 'ரி... ச...' என்பது போல! அதாவது, பாட முயற்சிக்கிற ஒரே விலங்கினம் கழுதை!


பி.ஜெயபிரகாஷ், சர்கார்பதி.

கசாப்புக் கடை ஆடு, கோயில் பூசாரி கையால் வெட்டப்படும் ஆடு - என்ன வித்தியாசம்?

குங்குமம்தான்!


மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்.

தீவிரமாக இந்து மத ஆசாரத்தைப் பின்பற்றிய சாணக்கியர், பத்ரபாகு என்னும் சமணத் துறவியின் தலைமையில் பத்தாயிரம் துறவிகளுடன் மைசூர் சிரவண பெலகுலாவுக்குச் செல்ல சந்திரகுப்த மௌரியருக்கு எப்படி அனுமதி தந்தார்?

சாணக்கியர் (கௌடில்யர்) சந்திரகுப்த மௌரியரின் மதகுரு இல்லை. பிரதான அமைச்சராகத்தான் இருந்தார். 'அர்த்த சாஸ்திர'த்தில் மிகவும் பிராக்டிகலாக அரசரின் கடமைகளைப் பற்றியும், நிர்வாக வழிமுறைகளைப் பற்றியும்தான் அவர் எழுதினார். மத விஷயங்களில் கருத்துக்கள் சொன்னதாகக்கூடத் தெரியவில்லை. சந்திரகுப்தர் கடைசி காலத்தில்தான் சமண மதத்துக்கு மாறினார். அப்போது மகத நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதில் மன்னர் சோகத்தில் மூழ்க, அப்போது நிகழ்ந்த மாற்றம் அது என்கிறார்கள். பிறகு, நீங்கள் சொன்ன மைசூர் பயணம் நிகழ்ந்தது. ஜைன மகான்களைப் போல மன்னர் தவம் இருந்து, பட்டினி கிடந்து இறந்ததாகத் தகவல் - கி.மு 297-ல்.


அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி-21.

உலகில், எந்த விருது வாங்குவது கடினம் என்று நினைக்கிறீர்கள்?

'சமர்த்து' என்று ஒரு விருது இருக்கிறது. அதை வழங்குபவர் மனைவி எனப்படுபவர். அதுதான்!


இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

அதென்ன சார் 'ஆடித் தள்ளுபடி'?

வியாபாரிகள் சற்று ஆடிப்போய் தள்ளாடாமல் இருப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆடித் தள்ளுபடி!

 
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்
மனிதத் தோல்... ஆப்பிளா ஆரஞ்சா? - ஹாய் மதன்-கேள்வி பதில்