பிரச்னை இனி ஏது? ஒன்றும் இல்லாததற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்?'
'ராஜு... ராஜு... ஐ லவ் யூ! ஐ லவ் யூ ஸோ மச்!' என்று பள்ளத்தாக்கைப் பார்த்துக் கத்திவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.
நீங்களும் கிட்டத்தட்ட அந்தப் பெண்ணைப் போலத்தான் கையை உருவிக்கொள்ளப் பார்க்கிறீர் கள். இப்படி, ஆதாயக் கணக்குகளின் அடிப்படை யில் உருவாகும் அன்புக்குப் பெயர் காதலா?
சொல்லுங்கள், நீங்கள் காதலித்தது ஒரு நபரையா? அவர் என்னவாக இருக்கிறார் என்ற அடையாளத் தையா?
ஒன்றைத் தவறு என்று முத்திரை குத்தும்போது, அதைச் செய்பவர் குற்ற உணர்வுடனும், அதைக் கவனிப்பவர் சந்தேகத்துடனும் போராட வேண்டிஇருக்கிறது.
உங்கள் வாழ்க்கையிலிருந்து எது சரி, எது தப்பு என்பதை விலக்கிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
செல்வமோ, பதவியோ, ராஜ்ஜியமோ அடைந்தவர்கள் அனைவரின் பின்னாலும் தந்திரங்களும், ஏமாற்று வேலைகளும் நிறைந்திருக்கின்றன.
தவறு என்று நீங்கள் நினைப்பதை உங்களையும் சேர்த்து, பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கிறீர்களே, அந்த இடம் உங்களுக்கு வசதியாக இருப்பதற்காக எத்தனை உயிர்கள் அங்கிருந்து இடம் பெயர்க்கப்பட்டன? உங்களுக்குப் பூச்சிகள் சிறியனவாகத் தோன்றுவது போலவே, வேறொரு மனிதனுக்கு நீங்கள் சிறியவராக இருக்கிறீர்கள்.
நீங்கள் ஏற்கிறீர்களோ, இல்லையோ... எல்லா ஊழல்களிலும், பொய்களிலும் நீங்களும் பங்கெடுத் துக்கொண்ட ஒரு பகுதியாகத்தான் விளங்குகிறீர்கள் என்பது நிச்சயம்.
|