விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
ரீ.சிவக்குமார், ஓவியங்கள்: ஹரன்
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
நேற்று... இன்று... நாளை!
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
ஒரு கோப்பை கல்வி!
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

ரு வீட்டின் மாடி அறையில் 3 குண்டு பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் கீழ்த் தளத்தில் இருக்கிறீர்கள். குண்டு பல்புகளுக்கான சுவிட்சுகள் கீழ்த் தளத்தில்தான் இருக்கின்றன. எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரே ஒரு முறை மாடி அறைக்குச் சென்று வரலாம். இந்த நிபந்தனைகளுடன் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?- இது சென்ற வாரக் கேள்வி.

படித்தவுடனே சுவிட்ச் போட்டது போல உங்கள் மூளையில் பல்பு எரிந்ததா? குட்! கொஞ்சம் டியூப் லைட் கணக்காக சிரமப்படுபவர்களுக்கு இதோ பதில்... கீழ்த் தளத்தில் உள்ள மூன்று சுவிட்ச்களில் ஒன்றை இயக்கி, சில நிமிடங்கள் கழித்து அதை அணைத்துவிடுங்கள். இப்போது வேறொரு சுவிட்சைப் போட்டுவிட்டு, மாடிக்குச் செல்லுங்கள். ஒரு பல்ப் எரிந்துகொண்டு இருக்கும். கீழே நீங்கள்இயக்கி விட்டு வந்த சுவிட்ச்தான் எரிந்துகொண்டு இருக்கும் பல்புக்கான சுவிட்ச். எரியாமல் இருக்கும் இரண்டு பல்புகளையும் தொட்டுப் பாருங்கள். எந்த பல்பு சூடாக இருக்கிறதோ அந்த பல்புக்கான சுவிட்ச்தான் முதலில் நீங்கள் இயக்கியது. ஆக, மூன்றாவதுபல்புக் கான சுவிட்சை இப்போது சுலபமாகக்கண்டுபிடித்து விடலாம்தானே!

இப்படியாக, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல புதிர் சூழல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதுதான் கல்வியின் பணி. நாம் இதுவரை கல்வியின் பல்வேறு பயன்பாடுகள், புதிய சிந்தனைகளை நடைமுறைக் கல்வியில் புகுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அலசி வந்திருக்கிறோம். உண்மையில் கல்வி என்பது வெறுமனே பாடப் புத்தகங்களின் பக்கங்களுக்குள் முடங்கிவிடுவதில்லை. நமது வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் அர்த்தமும் இனிமையும் நிறைந்ததாகவும் மாற்றுவதுதான் கல்வி. ஆனால், அந்த அர்த்தத்தில்தான் இன்றைய நடைமுறைக் கல்வி உள்ளதா? இப்போதுள்ள கல்வி முறை, வேலைக்குத் தேர்வாகும்

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

தகுதியையாவது ஒரு மாணவனிடம் உருவாக்கியுள்ளதா? இந்த ஆதார கேள்விகளுக்குத்தான் இத் தொடர் முழுக்க நாம் விடை தேடி வந்திருக்கிறோம்.

கல்வி கற்பதை ஒரு யுத்தத்தைப் போல கடினமாக்காமல், ஒரு கோப்பைத் தேநீர் அருந்துவது போல இனிமையான அனுபவமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்ற முடியும் என்பதைத்தான் இத்தனை வாரங்களாக எளிய உதாரணங்களுடன் தோழமையாக விவாதித்து வந்திருக்கிறோம். அர்த்தமுள்ள புரிதல்களை உருவாக்குவதற்கான அடிப்படைகள் குறித்து விவாதித்திருக்கிறோம். இந்த காலகட்டத்திலேயே, நமது மத்திய, மாநில அரசுகள் கல்வி குறித்துப் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து யோசனை தெரிவித்திருக் கிறார். நமது தமிழக அரசு முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, 'அடுத்த கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத் தப்படும்!' என்று அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் செயல்வழிக்கற்றல் முறையை ஏற்று, தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்தப் போவதாக ஜார்கண்ட் அரசு அறிவித்திருக்கிறது. 'மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, வாரம் ஒரு நாள் நூலக நேரம் அட்டவணைப்படுத்தப்படும்!' என்று அறிவித்திருக்கிறார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

இவை ஒருபுறமிருக்க... உங்கள் குழந்தைகளிடமும், அவர்களின் ஆசிரியர்களிடமும், உங்களிடமும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் தலையாய நோக்கமாகும். அதற்கு குழந்தைகளின் கற்றல் முறையில் ஏற்படுத்த வேண்டிய சில மாற்றங்களை இப்படிச் சுருக்கமாகப் பட்டியலிடலாம்...

மனப்பாடம் செய்தல் என்பது ஒரு தவிர்க்க முடியாத திறன்தான். ஆனால், அது தகவல்களைச் சேகரித்து நினைவாற்றலை வளர்க்கும் செயலுக்கே பயன்பட வேண்டும். மாறாக, தேர்வில் வெற்றிபெறுவதற்கான குறுக்கு வழி உத்தியாக பயன்படுத்தப்படக் கூடாது.

குழந்தைகளுக்கு எந்தப் பாடத்தில் இயல்பாகவே ஆர்வம் இருக்கிறதோ அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திறன் குறைவாக உள்ளது என்று நம்பும் பாடத் தில் தேர்ச்சி அடைவதற்கான கவனத்தைச் செலுத்தினாலே போதுமானது. கல்வி என்பது வகுப்பறைக்கு வெளியே உள்ள பல்வேறு திறன் வாய்ந்த செயல்களிலும் உள்ளது என்பதைப் பெற்றவர்கள் உணர வேண்டும்.

பள்ளியோ, கல்லூரியோ வருடக் கடைசித் தேர்வுதான் இறுதி இலக்கு என்று நிச்சயித்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், கல்வி என்பது வாழ்வின் இறுதி நொடிவரை நாம் பயிலும் ஒன்று.

தீர்வைக் கண்டறியும் திறன், ஆராயும் திறன், பரஸ்பரத் தகவல் பரிமாறிக்கொள்ளும் திறன் போன்ற பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்வது கல்வியிலும் தேர்விலும் மட்டுமல்லாது, நடைமுறை வாழ்விலும் வெற்றிகளை ஈட்டுவதற்குப் பயன்படும்.

எல்லாவற்றையும் தாண்டி, கற்ற கல்வி நமக்குள் இன்னொவேஷனையும் கிரியேட்டிவிட்டியையும் வளர்க்க உதவுவதில் பெரும்பங்காற்ற வேண்டும். எனவே புதிய சிந்தனைகள், மாற்றுச் சிந்தனைப் படைப்புகள் குறித்து குறைந்தபட்சம் யோசிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.

நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

தொலைக்காட்சி, இன்டர்நெட் பிரவுஸிங் போன்றவை நிச்சயம் படிப்புக்குப் பாதகமானது என்ற மாயையில் இருந்து வெளியே வாருங்கள். அவற்றில் இருக்கும் கல்விக்கான அம்சங் களைத் தேடிக் கண்டடையுங்கள்.

நமது குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பலவும் நமது கல்வி முறையைப் பாதிக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றைக் கடந்து, எப்போதும் எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தையும் தேடல் முனைப்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் பெற்ற கல்வி உங்களைச் சாதனையாளராக மாற்றும்.

வாழ்த்துக்கள்!

 
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!
-(முற்றும்)
நேற்று... இன்று... நாளை! -உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!