விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்
மோகன் கவிதைகள்
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்
நான் ஏன் இருக்கிறேன்?
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

ன் வீட்டுக் கண்ணாடிக்குள்
பதுங்கியிருந்து கண்காணிக்கிறான்
என்னைப் போன்ற
பிறிதொருவன்!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

லிக்க வலிக்க
விடாது தாங்கிப் பிடித்திருக்கும்
நியாயத் தராசை
ஓரம் வைத்துவிட்டு
கொஞ்சம் ஓய்வெடுப்போம்
தீர்ப்புகளற்ற
ஒரு சிந்தனையேனும்
வாய்க்கிறதா பார்க்கலாம்!

லைப்பிரதேசக்
கனவுக் குடிலொன்றின்
வெளியில் கிடக்கும்
கட்டில் மீது
அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரியும்
முடித்த பிறகு
உன்னைப் பார்க்காது
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக
ஆதங்கப்படுகிறாய்
நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

தாய்ப் பாலின்
இதமான வெம்மையில்
கலந்து சுரக்கிறது
தொன்ம நீரோடை!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

குதித்துக் குதித்து ஆடுகிறது
பொம்மை
கும்மாளம் போடுகிறது
குழந்தை
மீண்டும் மீண்டும்
ஆட்டம் போட
ஆசைப்படுகிறது பொம்மை
அலுத்துக்கொண்டு போகிறது
ஆசை மாறிய குழந்தை!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

ன் மறைவுக்குப் பின்
நாளின் முதல் நிகழ்வான
காலை விழிப்பு
முன்போல் சகஜமாக இல்லை.
விழிக்கும்போதே
விழித்துக்கொண்டு
இம்சிக்கிறது
நான் இருக்கிறேன்
என்ற எண்ணம்!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

காலையில் முகம் கழுவி
வந்தபோதுதான் பார்த்தேன்
என் படுக்கையின் ஓரத்தில்
சாதுவாய் அமர்ந்திருந்தது
சாம்பல் வண்ணப்
பெருந்தவளை
ஒரு பேப்பரால் தள்ளி
முறத்தில் எடுத்து
கொல்லையில் விட்டேன்
விந்தைக்குக் குறைவற்ற வீடு
விதவிதமாய்க் கூத்தாடுகிறது!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

நீரோட்டத்தில் நீந்தித் திரிந்து
செழித்த மீன்கள்
நீரற்றுக்கொண்டிருக்கும்
கண்மாய் சகதியில்
சிக்கித் திணறுகின்றன!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

ரையில் விழுந்த இலை
சருகானது
குளத்தில் விழுந்த இலை
மீனானது
காற்றில் மிதந்த இலை
பறவையானது!

ன் ரகசியத் தடயங்களை
ஒளித்துவைக்க
பல்லிகள் அறியாத
மறைவிடமேதும்
என் வீட்டில் இல்லை!

ன் வீட்டின்
ஈரடி சிறு வராந்தாவை
அடைத்துக்கொண்டு
அழகு காட்டும்
தொட்டிச் செடிகள்
ஒவ்வொன்றிலும்
ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது
ரத்தம் தோய்ந்த
அல்லது புத்தம் புதிய
ஒரு குத்துவாள்!

நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்

ன்று
அலிபாபாவை
அதிர்ஷ்டக் குகைக்கு
அழைத்துச் சென்ற கழுதை
இன்று
சிறு கடைகளில்
சட்டகத்துக்குள் இருந்துகொண்டு
என்னைப் பார் யோகம் வரும்
என்கிறது!

ன் வீட்டுக் கொல்லையில்
கழிவறைச் சுவரை ஒட்டி
எவ்விதக் கவனிப்புமின்றி
எவ்விதக் கவனமுமின்றி
காட்டுச் செடியென
மண்டிக்கிடக்கின்றன
துளசிச் செடிகள்!

 
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்
நான் ஏன் இருக்கிறேன்? -மோகன் கவிதைகள்