குறுகுறுக்க ஆரம்பிச்சு அதுக்கு மேல அங்கே நிக்க முடியாம வந்துட்டேங்க. நினைச்சு நினைச்சு அழுகையா வருதுங்க. கல்மிஷம் இல்லாத அப்பாவிப் பொண்ணு. 'எதுக்கும் பயப்பட வேணாம்னு அக்காட்ட சொல்லு. நான் இருக்கேன்'னு மாதவி தங்கச்சிகிட்ட மட்டும் சொல்லிட்டு வந்தேன். இன்னும் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம்னு மாதவி அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்கணுங்க. அதுதான் இப்ப எனக்கு!''
''இன்ட்ரஸ்டிங்... மாதவி என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டா பால். இந்தக் காலத்துல இப்படியும் பொண்ணுங்க இருங்காங்களா?''
சியாமந்தா குரலை இடைமறிப்பது போல என் செல்போன் சிணுங்கியது. எங்கள் ஊர் கோட் நம்பர்! திடீர் பதற்றத்துடன் போனை காதுக்குக் கொடுத்தேன். மாதவியின் தங்கை அழுகைகளுக்கு இடையில் திக்கித் திக்கிப் பேசினாள்.
''மச்சான்... அக்கா... அக்கா போயிட்டா. திடீர்னு வலிப்பு வந்து இழுத்துகிட்டே இருந்து... உங்க பேரைக் கடைசியா சொல்லிட்டுப் போயிட்டா!'' செல்போன் கையிலிருந்து நழுவ, இதயம் உடலிலிருந்து நழுவுவது போல இருந்தது.
உண்மை உரைக்க ஒரு முழு நிமிடமாயிற்று. 'மாதவி... மாதவி போயிட்டா. என்னை விட்டுட்டுப் போயிட்டா. என் மாதவி இல்லை... அவ இல்லை!' என்று நான் அழுதுகொண்டே அரற்ற, சியாமந்தா விஷயத்தைக் கிரகித்துக்கொண்டாள்.
மெத்தையில் இருந்து வேகமாக எழுந்து வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ''பால்... ரிலாக்ஸ். ஒண்ணுமில்லை. என்னன்னு போய்ப் பார்க்கலாம். நானும் வரேன். எக்ஸைட் ஆகாத!'' என்று சமாதானப்படுத்தினாள்.
''இல்லை... என் மாதவி... நான் பாவி! அவளே போயிட்டா... நான் எதுக்கு இருக்கணும். என் பேர்தான் கடைசியா சொல்லியிருக்கா. நானும் போகணும்... விடு என்னை. அவ ஆவி கிளம்புறதுக்குள்ள நானும் போகணும்!'' என்று வெறி பிடித்தாற் போலக் கத்தினேன்.
என் கண்கள் பிதுங்கி நாக்கை நானே கடித்துக் கொள்வதை என்னாலேயே உணர முடிந்தது. உடலின் அத்தனை ரத்தமும் மூளைக்குள் பாய்ந்ததைப் போல தலை பாரமானது. என்ன நினைத்தாளோ, சட்டென சியாமந்தா என்னை இறுக்கமாகக் கட்டிஅணைத்தாள். அவள் உடல் முழுக்க என் மேல் அழுந்தி மென்மையும் வெம்மையுமான மின்சாரம் ஊடுருவியது. என் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றியெடுத்தவள், இரு கைகளாலும் என் முகத்தைப் பிடித்து கண்ணோடு கண்ணாகப் பார்த்தாள். சியாமந்தாவின் மூச்சுக்காற்று இல்லை. இது இது... இது என் மாதவி. மாதவிதான் எனக்கு முத்தம் கொடுத்தது. அவள் மூச்சுக் காற்றுதான் என் கன்னம் தீண்டுகிறது. எனக்குள் குபீர் ஆவேசம்! மாதவியை நான் படுக்கையில் சாய்த்தேன். என்னைத் தாங்கிக் கொண்டாள். திக்கித் திண்டாடிய எனது வேகம், வெறிக்கு வடிகால் கிடைத்த திசையில் அது வெடித்துப் பாய்ந்தது. இயங்கத் தொடங்கினேன்!
மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை நானும் தினகரனும் பாராக மாற்றிஇருந்தோம். மணலில் சில பீர் பாட்டில்கள் அரைகுறையாகப் புதைந்திருந்தன. நள்ளிரவு கடந்த பொழுதில் 'ஹோ... ஹோ'வெனக் காற்றும் அலையும் மாறி மாறி சுருதி சேர்த்துக்கொண்டு இருந்தன.
''அப்புறம் என்ன ஆச்சு மாப்ள?'' ஆச்சர்யமாக அத்தனை போதைக்குப் பிறகும் அமைதியாகக் கேட்டான் தினகரன். நான்தான் சலம்பித் தளும்பிக் கொண்டு இருந்தேன்.
''அப்பால இன்னா ஆச்சு? ஆங்ங்... காலையில கண்ணு முழிச்சா கால் முட்டிலாம் வலி. மசமசன்னு ஏதேதோ ஞாபகம். என்ன நடந்துச்சுன்னு புரிஞ்ச தும் எனக்கு 'ச்சீ'ன்னு ஆயிருச்சு. சியாமந்தாவைத் தேடினேன். காணலை. 'ஸாரி'ன்னு மட்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். உடனேஅவளே லைனுக்கு வந்தா!''
நிமிர்ந்து உட்கார்ந்தான் தினகரன்.
''எதுவுமே நடக்காதது மாதிரியே பேசுறா. 'பால்... நார்மலாவே நீ அமைதியான ஆளுங்கிறதால, மாதவி இறந்த அதிர்ச்சியை உன்னால தாங்க முடியலை. கொஞ்சம் விட்டிருந்தா நிச்சயம் நீ உடைஞ்சிருப்ப. சூசைட், பைத்தியம்னு எது வேணும்னா நடந் திருக்கலாம். உனக்கு அந்தச் சமயம் சாஞ்சுக்கிட்டு அழ ஒரு மடி தேவைப்பட்டுச்சு. அதான் உன்கவனத் தைத் திசை திருப்ப நான் அப்படி நடந்துக்கிட் டேன். உனக்கு ஒரு ஆறுதல்... எனக்கு ஒரு தேடல் தட்ஸ் ஆல். ஒரு ஃப்ரெண்டா, ஒருபெண்ணா என்னால முடிஞ்ச ஒரு விஷயம். அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை. அதுக்காக நீ என்னைத் தப்பா நினைச்சுராத. எனக்கும் அதுதான் ஃபர்ஸ்ட். ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு தேவை சேட்டிஸ்ஃபைட். எப்பவும் போல இரு. மனசைப் போட்டுக் குழப்பிக்காத'ன்னு இன்னும் என்னென்னவோ இங்கிலீஷ்ல பீட்டர் அடிச்சா. எனக்குத்தான் சியாமந்தா முகம் பார்க்கச் சங்கடமா இருந்ததால, கிளம்பி உன் ரூமுக்கு வந்து இந்த மூணு நாள்ல குடிக்கக் கத்துக்கிட்டேன். நான் எதுவும் தப்புப் பண்ணிட்டேனாடா?''
எனக்குப் பதில் சொல்லாமல் ஏதோ தீர்க்கமான சிந்தனையில் இருந்தான் தினகரன். நான் உளறத் தொடங்கினேன்.
''ஆனா தினகரா... பொண்ணுங்களை நாமதான்டா தப்பாப் புரிஞ்சுவெச்சிருக்கோம். எல்லா பொண்ணுகளும் ஆம்பளைங்க மேல பாசமாத்தான் இருக்காங்க. புடிக்கவே புடிக்காத ஒருத்தனைக்கூட பத்து பெர்சன்ட்டாச்சும் காதலிப்பாங்க. எல்லா பொண்ணுங்களும் வெவ்வேற வடிவத்துல இருக்குற கண்ணாடி கிளாஸ்டா. ஆம்பளைங்கல்லாம்தண்ணி. நல்ல தண்ணி, உப்புத் தண்ணி, சுடு தண்ணி, சர்பத் தண்ணி, டாஸ்மாக் தண்ணி, கஞ்சித் தண்ணின்னு எந்தத் தண்ணியா இருந்தாலும் கண்ணாடி கிளாஸ் புடிச்சுக்கும்ல. அப்படித்தான்... நீ என்ன மாப்ள சொல்ற?'
''உன் பிளாஸ்டிக் கிளாஸ்ல நிறைய பீர் தண்ணி ஊத்திட்டேன்னு சொல்றேன்!''
|