விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!

நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!

நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
விகடன் பொக்கிஷம்
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!

நூற்றுக்கு மேல் என்ன மார்க்?

'பணமா பாசமா' என்ற படத்தில் முதல் நாள், வரலட்சுமி உணர்ச்சிகரமாக நடிக்கவேண்டிய ஓர் இடத்தைப் படமாக்கினேன். எனக்குத் திருப்தியாக இல்லை. அன்று இரவே சாவித்திரியிடம் ஓடிப் போய், அவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கேட்டேன்.

''என்னது! அவருக்கு (ஜெமினிக்கு) மாமியாராகவா? மன்னித்துக் கொள்ளுங்கள். வரலட்சுமியே நன்றாக நடிப்பார், கவலைப்படாதீர்கள்!'' என்று சொல்லி அனுப்பினார். மீண்டும் வரலட்சுமியிடம் போய் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து, பாத்திரத்தை விளக்கினேன். மறுநாள் முதல் பிரமாதமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் வரலட்சுமி. முதல் நாள் பத்து மார்க் கூட கொடுக்க முடியாத நான், மறுநாளே, அவரின் நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கக் கடமைப்பட்டவனாகிவிட்டேன்.

'உயிரா மானமா' படத்திலும் பிய்த்து உதறி, அதற்கு நூற்றுக்கு மேல் என்ன மார்க் கொடுப்பது என்ற பிரச்னைக்கு என்னை ஆளாக்கி விட்டார் வரலட்சுமி.

- இயக்குநர்கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (3-8-69)


'மகாத்மா' என்ற பட்டத்தை காந்திஜிக்கு கொடுத்தது யார்?

ன்னூர் சர்க்கார் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தி.லட்சுமணன் எழுதிய கடிதம் இது:

''இந்தியன் எக்ஸ்பிரஸ் 2-10-68-ம் தேதி இதழில் ஏழாம் பக்கத்தில் வெளியான செய்தி: '27-1-1915 அன்று கொண்டல் சமஸ்தானத்தில், காந்தி அடிகளுக்கு நடைபெற்ற வரவேற்பின்போது ஜீவாரம் காளிதாஸ் சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத அறிஞர் காந்தி அடிகள் மீது தாம் பாடிய கவிதைகளில் அவரை 'மகாத்மா' என்று குறிப்பிட்டாராம். பின்னர். இந்த 'மகாத்மா' என்ற அடைமொழி அவருக்கு நிலைத்து விட்டது!'- இப்படிச் செய்தி வந்துள்ளது.

ஆனால், காந்தி அடிகளை 'மகாத்மா' என்று முதன்முதலில் பாராட்டியவர் ரவீந்திரநாத் தாகூர் என்று எண்ணி வந்துள்ளோம். எனவே இதைப்பற்றி உறுதியான தகவல் தர முடியுமா?''

நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!

சென்னையில் உள்ள காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்திடம் விசாரித்தபோது கிடைத்த பதில்:

''தாகூர்தான் மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்தவர். ஆனால், இது சர்ச்சைக்குரியதாகிவிட்டது. எங்கள் வெளியீடாக வந்துள்ள பதினான்காவது தொகுப்பு 'தலைவர்களுக்குக் காந்திஜியின் கடிதங்கள்' என்பதாகும். இதில் கவிஞர் தாகூருக்குக் காந்திஜி எழுதிய கடிதங்களும் உள்ளன. அதற்கு ஒரு சிறிய குறிப்பாக, தாகூர்தான் காந்திஜிக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தைக் கொடுத்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவிர, 'இருநூறு இந்தியப் பெரியார்கள்' என்ற புத்தகத்திலும் தாகூர்தான் மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் இதற்கு ஆதாரமாகச் சொல்லலாம்.''

(1-12-68)


நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
காந்திஜியும் சாஸ்திரியும்!

காத்மா காந்திக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் பிறப்பிலும் இறப்பிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் பிறந்தது அக்டோபர் 2-ம் தேதி. இருவரும் இறந்தது, பகுள பஞ்சமி தினத்தன்று. அதாவது தியாகப் பிரும்மம் மறைந்த புனித நாள் அது.

இவர்களுடைய மரணத்தில் மற்றொரு ஒற்றுமையையும் காணலாம். காந்திஜி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தார். சாஸ்திரியோ இந்திய-பாகிஸ்தான் ஒற்றுமைக்காக அல்லும் பகலும் உழைத்து உயிர் துறந்தார். துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மண்ணில் சாய்ந்தபோது மகாத்மா கூறிய 'ஹரே ராம்' என்ற வார்த்தைகளையே சாஸ்திரியும் உயிர் பிரியும்போது கூறினார்.

(23-1-66)


ரஞ்சன் என்றொரு மேதை!

வர் ஒரு நடிகர், பாடகர், வயலின் வாசிப்பவர், நாட்டியமாடுபவர், கத்திச் சண்டை போடுபவர், கதாசிரியர், எடிட்டர், சுருக்கெழுத்து தெரிந்த வியாபார நிர்வாக நிபுணர், ஹோட்டல் முதலாளி, அச்சுக்கலை நிபுணர், விமானி, பியானோ வாசிப்பவர், ஓவியர், கலாசார தூதுவர், பல மொழிகள் தெரிந்தவர்.

நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!

இந்தியாவில் சங்கீதத்தில் எம்.லிட் பட்டம் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். இவர் அடிக்கடி அயல் நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். ஒரு சமயம் ஒரு நாட்டில் சுங்க இலாகாவினர் தகராறு செய்தபோது ஒரு நொடியில் அவர்களுக்கு வேடிக்கையாகப் படம் வரைந்து காட்டி நிலைமையைச் சமாளித்து விட்டார்.

வேறொரு நாட்டில், இவரிடம் சல்லிக்காசுகூட இல்லாமல் போயிற்றாம். உடனே,அந்த ஊர் ரேடியோவில் போய்ப் பாடி பணம் சம்பாதித்து விட்டார்.

முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தவர். தமிழ்ப் பட உலகிலிருந்து இந்திப் பட உலகிற்குச் சென்று, பல படங்களில் நடித்த முதல் நடிகர். சினிமாத் துறையில் இவர் நுழைந்து இருபத்தைந்து வருடங்களாகின்றன.

(5-12-64)


நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
இவர் பெயர் பிரமீளா!

பிரமீளாவை 1957-ல் 'முதலாளி' படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு சேலம் போய்விட்டார் எம்.ஏ.வேணு. இரண்டு நாட்கள் கழித்துப் பத்திரிகையில் வந்த 'முதலாளி' பட விளம்பரத்தைப் பார்த்த பிரமீளாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே தயாரிப்பாளருடன் 'ட்ரங்க்' போனில் பேசினார். 'என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு நடிகையின் பெயரை விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, இது என்ன நியாயம்?' என்று கேட்டார்.

தயாரிப்பாளர் சிரித்தார். ''அந்த நடிகையும் நீங்கள்தான் அம்மா! உங்களுக்கு 'தேவிகா' என்று புதுப்பெயர் வைத்திருக்கிறேன். பிரமீளாவைவிட, 'தேவிகா' உச்சரிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்'' என்றார்.

(7-6-64)


நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
 
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!
நூற்றுக்கு மேல் என்ன மார்க்? + காந்திஜியும் சாஸ்திரியும்!