விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
விகடன் பொக்கிஷம்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
24. எதிர்பாராத பேட்டி!

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

யிலாப்பூர் குளத்தருகில் இருந்த தெரு வழியே, பழைய கோட்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, முகத்தை மறைத்தபடி நடந்து சென்று கொண்டிருந் தார் மருதநம்பி. அவர் தேடி வந்த தெரு அதுதான். இருட்டி விட்ட நேரம் அது. ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே சென்றவர், ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு |

முன்பு மணிமொழி வந்து, முதல் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்ற அதே வீடுதான். பொன்மலை என்னும் பெரிய வர் முன்பு அங்கிருந்தார். இப்போதும் அங்கே அவர்தான் இருந்தார்.

மருதநம்பி வாயிற்படியில் ஏறிக் கதவைத் தட்டியதும், பொன்மலை கதவைத் திறந் தார். மருதநம்பியை உற்றுப் பார்த்துவிட்டு, ''யாரது? மருத நம்பியா! உள்ளே வாருங்கள்'' என்றார். மருதநம்பி உள்ளே போனார். அந்த வீட்டில் எவ ருமே இல்லை, அந்தப் பெரியவ ரைத் தவிர!

''நீங்கள் தனியாவா இருக்கி றீர்கள்?'' என்று கேட்டார் மருதநம்பி.

''ஆமாம், உட்காருங்கள். சில நாட்களுக்கு முன் உங்கள் மகள் இங்கே வந்து போனாள். நீங்கள் கொடுத்ததாக ஓர் அட் டைப் பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். உங்களுக்கு இவ்வளவு அழகான பெண் இருக்கிறாள் என்பது அன்று வரையில் எனக்குத் தெரியவே தெரியாது!''

''என்னுடைய குடும்பத்தின் அணையா விளக்கு அவள். என்னுடைய கெட்டகாலம் அவளையும் இழந்துவிட்டேன்! என் உயிரைக் கொடுத்தாவது மணிமொழியை இந்தக் கஷ்டத் திலிருந்து நான் விடுவிக்க வேண்டும்!''

''மணிமொழியா அவள் பெயர்? அவளை ஏன் நம்மு டைய கூட்டத்தில் சேர்த்தீர்கள்? வயதான இந்தக் காலத்தில்தான் நான் தவறுகளை உணர்கிறேன். என் தள்ளாத வயதிலும்கூட என்னால் என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ இயலவில்லை. பெரிய ஐயாவின் பிடியிலிருந்து விடுபடாத வரையில் நான் தனியாகவே வாழ விரும்பு கிறேன். போலீஸாரால் எந்த நிமிடமும் நம் கூட்டத்தாரைப் பிடித்துவிட முடியும்! வயதாகி விட்ட நீங்கள், இந்த நேரத்தில் எப்படித் தவறு செய்தீர்கள்?'' என்று இரக்கத்துடன் கேட்டார் பொன்மலை.

''எனக்கு உடல் நலமில்லாத நேரத்தில், என்னுடைய கறை படிந்த தொழிலைப் புரிந்து கொள்ளாத மணிமொழி, பெட்டிகளை எனக்காக எடுத் துச் சென்றாள். கேசவதாசுக் கும் ஒரு பெட்டி இருந்தது. அவள் கேசவதாஸின் வீட்டை அடைந்தபோது, கேசவதாஸ் செத்துக் கிடந்தார். அதிலிருந்து தான் தொல்லைகள் பல தொடங்கின. சென்னைக்கு மணிமொழியை அனுப்பிவிட்டு, உண்மைகளைக் கண்டு பிடிக் கக் கேசவதாஸ் பங்களாவுக்குச் சென்றேன்.

அங்கிருந்து திரும்பி வந்ததும் தான் அங்கே பல இடங்களில் என் கை ரேகைகளை விட்டு விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. நான் என் தவற்றை உணர்வதற்குள், போலீஸார் என்னைக் கைது செய்து காவ லில் வைத்துவிட்டார்கள்! சிறையிலிருந்த நான், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ விடுதியில் இருந்து குணமாகிக்கொண்டே வந் தேன். பெரிய ஐயா, மருத்துவ விடுதியிலிருந்து தப்ப எனக்கு வழி செய்து கொடுத்தார். நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.' என்றார் மருதநம்பி.

''இப்போது எங்கிருக்கிறாள் மணிமொழி?'' என்று கேட்டார் பொன்மலை.

''அதுதான் தெரியவில்லை! அவளைக் கண்டுபிடிக்கவேண் டும் என்று எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறேன். தங்கதுரையால்தான் என் மகள், தான் தங்கியிருந்த இடத்தைவிட்டு எங்கேயோ ஓடியிருக்கிறாள். தங்கதுரையே அவளைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருப்பானோ என்றுகூட எனக்கு ஐயமாக இருக்கிறது. முன்பொரு தடவை, மணிமொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நான், அவளை எங்கே தேடுவது என்று தெரியாமல் விழித்தேன். பிறகு, எப்படியும் பெட்டிகளைக் கொடுக்கும்போது, தங்கதுரையை அவள் சந்திப்பாள் என்று அவனைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந் தேன்.

நான் எதிர்பார்த்தபடி மணிமொழி தங்கதுரையின் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவன் அவளை அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டான். அப்போது மணிமொழியை நான்தான் விடுவித்தேன். ஆனால், நான் மறைந்திருந்து மணிமொழிக்குச் செய்த உதவி களெல்லாம் அவளுக்குத் தெரி யாது. நான் அவளைப் பார்த்து, சில உண்மைகளை அறியவேண் டும். என்னுடைய முயற்சியில் என் உயிரே போனாலும் குற்றமில்லை!

இப்போது உங்களிடம் வந்த காரணம் என்ன தெரி யுமா? கேசவதாஸ் கொலை வழக்கில் அசைக்கமுடியாத ஓர் உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறேன். அதைப் பற்றி உங்களிடம் சொல்லி, உதவி கேட்கவே வந்தேன். கேசவதாஸ் தற்கொலை செய்துகொண்ட தாகப் பெரிய ஐயா நினைத் திருக்கிறார். அது தவறு! கேசவ தாஸ் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை!'' என்றார் உறுதியான குரலில் மருதநம்பி.

இதைக் கேட்டதும் பொன் மலை நிமிர்ந்து உட்கார்ந்தார்.வியப்புடன் மருதநம்பியைப் பார்த்தார். ''அப்படியானால் கொலையாளி யார்?''

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

மருதநம்பி தனது கோட்டுப் பையில் கையைவிட்டுச் சிறிய கைக்கடிகாரம் ஒன்றை எடுத் தார். மிகச் சிறிய, நுணுக்கமான ஸ்விஸ் கடிகாரம் அது. அந்தக் கடிகாரத்தின் தங்கச் சங்கிலி யில் பல வைரக்கற்கள் பதிக்கப் பட்டிருந்தன.

கடிகாரத்தைப் பொன்மலை யிடம் கொடுத்தார் மருதநம்பி. அந்தக் கடிகாரத்தின் கண் ணாடி உடைந்து நொறுங்கி யிருந்தபோதிலும், ஓட்டைக ளுடன் அந்தக் கண்ணாடி அப்படியே ஒட்டிக் கிடந்தது. கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. தன்னால் இயங்கும் கடிகாரம் அது.

''என்ன இது?'' என்றார் பொன்மலை.

''பின்னால், கடிகாரத்தின் மூடியைத் திறந்து பாருங்கள்!''

பொன்மலை நடுங்கும் கைகளுடன் கடிகாரத்தின் பின்பக்க மூடியைத் திறந்தார். மூடியின் உள்பக்கம் ஒரு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந் தார் பொன்மலை. அவர் உடல் லேசாக நடுங்கியது.

''இந்தக் கடிகாரம் உங்களிடம் எப்படி வந்தது?''

''சொல்கிறேன்! மணிமொழி என்னிடம் வந்து கேசவதாஸ் கொலையுண்டதைப் பற்றிச் சொன்னதும், மணிமொழியைச் சென்னைக்கு விமானத்தில் ஏற்றிவிட்டுக் கேசவதாஸின் வீட்டிற்குச் சென்றேன். நம் முடைய கூட்டத்திலே, பெரிய ஐயாவுக்கு மிகவும் வேண்டிய வர் கேசவதாஸ். வேண்டியவ ரென்ன, பெரிய ஐயாவுக்கு அடுத்தபடியாக அவர்தான்! பெரிய ஐயாவை நாம் பார்த்த தில்லை. பார்க்கவும் முடியாது! கேசவதாஸ்தான் நம்மைக் கூட்டத்தில் சேர்த்தவர். பெரிய ஐயாவிடமிருந்து ஒவ்வொரு வருக்கும், குழந்தைகளுக்கான சட்டைகளின் மூலம் மர்மமான முறைகளில் எழுதப்பட்ட செய்திகள் வரும். அவற்றின்படி ஒவ்வொருவரும் நடப்பார்கள். இந்த நிலையில் கேசவதாஸ் கொலை வழக்கை எப்படிச் சரிக்கட்டுவது, பெரிய ஐயா விடம் எப்படித் தொடர்பு கொள்வது என்று புரியாமல், எப்படியாவது மணிமொழியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் சென் றேன். அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தால் துப்பாக்கி அவர் கையில் இருக்கவேண்டாமா? இல்லை. துப்பாக்கி எங்கே மறைந்து போயிருக்கும்? நான் அவர் உடலைப் புரட்டிப் பார்த்த போது, இந்தக் கைக்கடிகாரத் தின்மீது அவர் விழுந்து கிடந்தது தெரிந்தது. அவரைச் சுட்டுக் கொன்றவள் ஒரு பெண்! அவரைச் சுட்டவள் கைக்கடிகாரத்தை விட்டு விட்டுப் போகமாட்டாள். கேசவதாஸ், தன்னைச் சுடவந்த பெண்ணின் இடது கையைப் பற்றியிருக்க வேண்டும். அப்போது அவள் கட்டியிருந்த இந்தக் கடிகாரம் அறுந்து விழுந்துவிட்டது. வலது கையில் நீட்டியிருந்த துப்பாக்கியால் கேசவதாஸைச் சுட்டுவிட்டு, கடிகாரத்தைப் பற்றிய நினை வில்லாமல் ஓடிவிட்டிருக்கிறாள்'' என்றார் மருதநம்பி.

பொன்மலை, கடிகாரத்தின் பின் பக்க மூடியை மூடினார். அவர் உதடுகள், கடிகாரத்தின் உள்ளே பொறிக்கப்பட்டிருந்த பெயரை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டன.

மருதநம்பி எழுந்துகொண் டார். ''நான் வருகிறேன். மீண்டும் நான் திரும்பி வரா விட்டால் மணிமொழியை மறந்துவிடாதீர்கள். தங்கதுரை யின் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்!'' என்றபடி வெளியேறினார். மருதநம்பி போனதும் கதவைச் சாத்தித் தாழிட்டார் பொன்மலை .

25. சிவகாமி, என்னைச் சோதிக்காதே!

தங்கதுரை காரில் வந்து இறங்கியபோது, சிவகாமி வாசற்புறம் இளங்கோவுடன் விளையாடிக்கொண்டு இருந் தாள். தங்கதுரை வந்தது பிடிக் காதவள்போல், இளங்கோவை வண்டியிலேயே விட்டுவிட்டு சட்டென்று எழுந்து உள்ளே சென்றாள். சிவகாமியின் அப்பா வெளியே சென்றிருந் தார். அம்மா சமையற்கட்டில் வேலையாக இருந்தாள்.

தங்கத்துரை உள்ளே வந்து சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, ''சிவகாமி, மணமாகாத பெண் நீ. இப்போதே குடும்பச் சுமை உன் மீது விழுந்துவிட்டது! பணிப்பெண்ணைப் போல் எப்போது பார்த்தாலும் நீ இளங்கோவை வைத்து விளை யாடிக்கொண்டு இருக்கிறாய்! அரசு கண்களை இழந்தவன். அந்தக் குருடனுக்கு அடிமை யாக இருக்கவே நீ விரும்பு கிறாயா?'' என்றான்.
''நாவை அடக்கிப் பேசுங்கள் தங்கதுரை! என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் உங்க ளிடம் ஆலோசனை கேட்க வில்லை. என் வாழ்வில் நீங்கள் குறுக்கிடாமல் இருந்தால், அது போதும்!'' என்றாள் சிவகாமி.

''சிவகாமி, வீணாக என் னைச் சோதிக்காதே! என் சினம் எவரையும் சும்மா விடாது!'' என்று மிரட்டியபடி எழுந்துபோனான் தங்கதுரை.

சிவகாமி சிந்தனை செய்த படி அப்படியே நின்றுவிட்டாள். நீண்ட நேரம் கழித்துதான் அவளுக்கு இளங்கோவின் நினைவு வந்தது. தங்கதுரை வந்ததும், இளங்கோவை அப்படியே வண்டியில் விட்டு வந்தோமே!

சிவகாமி வெளியே ஓடிவந்து பார்த்தாள். தள்ளுவண்டி இருந்தது. ஆனால், வண்டியில் இளங்கோவைக் காணோம்!

 
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
-தொடரும்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்