மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 27

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 27

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மாநபன்
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
ஒட்டகத்தின் கண்ணீர்!
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு வன விடுதியில் தங்கியிருந்தேன். அடர்ந்த காட்டினுள் இருந்த விடுதி அது. வனக் காவலர்கள், அரிதாக வரும் ஒன்றிரண்டு வெளிநாட்டுப் பயணிகள் தவிர்த்து, ஆள் நடமாட்டமே இல்லை. மின்சார வசதி கிடையாது. காற்றில் மரங்கள் அசையும் சத்தமும் பூச்சிகளின் கீச்சொலியும் கேட்டுக்கொண்டே இருந்தன.

ஒருநாள் மதியம் யாரோ அறை ஜன்னலைத் தட்டுவதைப்போலச் சத்தம் கேட்டுத் திறந்தேன். யாருமே இல்லை. காற்று தட்டியிருக்கக் கூடுமோ எனச் சாத்திவைத்தேன். மறுபடி தட்டப்பட்டது. கதவைத் தள்ளித் திறந்தபோது அருகாமை மரத்தில் ஒரு பறவை உட்கார்ந்து இருந்தது. மைனாவினைவிடக் கொஞ்சம் பெரிதாக இருந்தது. படபடக்கும் உடல்வாகு. சாம்பல் நிற இறகுகள்.

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27

நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மரத்தைவிட்டு என் அறை வாசலின் முன்பாகக்கிடந்த சிறிய பாறை ஒன்றின் மீது வந்து உட்கார்ந்தது. நான் அந்தப் பறவையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதுவும் என்னைப் பார்த்தபடியே இருந்தது. யாரும் இல்லாத வன அமைதியில் நாங்கள் இருவரும் மௌனமாக இருந்தோம்.

யார் இவன், எதற்காக வந்திருக்கிறான் என்பதுபோல இருந்தது அதன் பார்வை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், பேசிக்கொள்ள முடியவில்லை. ஒரு பறவையோடு எப்படிப் பேசுவது என்று மனது உள்ளாக யோசித்தபடியே இருந்தது.

சூச்சூ என்று விரட்டுவதற்குத் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், பேசுவதற்கு என்ன வழி? பறவை தன் அலகால் பாறையைக் கொத்தியது. நான் என் கைகளால் தரையில் தட்டினேன். அந்தச் சத்தம் அதைத் திகைப்பூட்டியிருக்க வேண்டும். பறக்க எத்தனிப்பது போல அது மேலெழுந்து அடங்கியது.

அன்று அந்தப் பறவை பாறையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, சட்டெனக் கிளம்பி ஒரு சுழற்றியடித்து காட்டில் மறைந்தது. அது போன பிறகு நான் அந்தப் பாறையைப் பார்த்தபடியே இருந்தேன். இயற்கையில் யாவும் ஒன்றையன்று ஏதோவொரு விதத்தில் தொடர்புகொண்டபடியேதான் இருக்கிறது. அதை அவதானிக்க நமக்குத்தான் நேரம் இல்லை.

அந்தப் பறவை வரக்கூடுமோ என்று மறு நாள் காத்திருந்தேன். சரியாக அதே நேரத்தில், அதே பறவை வந்தது. முதல் நாள் போலவே ஜன்னலைத் தட்டியது. நான் மெல்லிய சிரிப்போடு வெளியே வந்து உட்கார்ந்தேன். அதே பாறையில் உட்கார்ந்துகொண்டது.

இரண்டாம் நாளில் மிகப் பரிச்சயமான இரண்டு பேர்களைப்போல நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பொதுப் பூங்காவில் இப்படி நடப்பதை நானே கண்டிருக்கிறேன். ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளாத ஆனால், அடுத்தடுத்த பெஞ்சில் அமர்ந்திருக்கும் முதியவர்கள் இருக்கிறார்கள். அது போன்ற ஓர் உறவுதானா இது?

அந்தப் பறவைக்குச் சாப்பிட ஏதாவது போடலாம் என்று பிஸ்கட் துண்டுகளை உடைத்துப் போட்டேன். பறவை அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. எனக்கோ, அவமானமாக இருந்தது. அன்றைக்குப் பறவை விருட்டெனப் பறந்து டைவ் அடிப்பதும் மறுபடி பாறையில் வந்து உட்கார்வதுமாக இருந்தது. என்ன விளையாட்டு இது? அதன் தனித்திறமை இதுதானா? இதைக் கவனிக்க யாரும் இல்லை என்று ஆதங்கப்படுகிறதா? நான் அதை ரசிக்கத் துவங்கினேன். அந்தப் பறவையின் ஒவ்வொரு சிறு அசைவையும் நான் ரசித்தேன். இந்தச் சந்திப்பு ஒரு வார காலம் நடந்தது.

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27

ஊர் கிளம்பும் நாளின் காலையில் எனக்கு இருந்த ஒரே வருத்தம், இன்றும் அந்தப் பறவை மதியம் என் அறையைத் தேடி வந்து ஜன்னலைத் தட்டும். ஆனால், நான் அறையில் இருக்க மாட்டேன். ஒருவேளை அது அதே பாறையில் காத்திருக்கவும்கூடும். பிரிவை எப்படிப் பறவையிடம் சொல்வது? காட்டுக்குள்ளாகவே ஜீப் சென்றுகொண்டு இருந்தது. ஒரு சரிவில் இறங்கும்போது மின்னல்வெட்டுப்போல தாழப் பறந்து ஜீப்பைக் கடந்துபோனது அதே பறவை. என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு நிமிடம் அது என்னைப் பார்த்துக் கடந்திருக்கக்கூடும். தற்செயலானதுதானா? என்ன உறவு? என்ன பிரிவு?
இயற்கையை நாம் அவதானிப்பதே இல்லை. அதனிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்வதும் இல்லை. கடற்கரைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்பவர்களில் ஒரு சிலர்கூட நகரை ஒட்டியுள்ள நீர்நிலைகள், வயல்வெளிகளுக்குச் சிறார்களை அழைத்துச் சென்று அங்கு வரும் பறவைகள், செடிகொடிகளின் வகைகள், பூக்களின் நிறங்கள், மண்ணின் வாசம் என இயற்கையை நெருக்கம்கொள்ளவிடுவது இல்லை.

அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரு இதற்காகவே ஒவ்வொரு மனிதனும் ஆண்டில் ஒரு மாதமாவது கட்டாயம் காட்டுக்குள் வசிக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயற்கையைப் புரிந்துகொள்ள முடியும் என்று சொன்னார். தோரு இதைத் தன் வாழ்நாளில் செய்துகாட்டியவர். வால்டன் என்ற காட்டுக்குள் தானே ஒரு குடில் அமைத்துக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார். அவரது 'வால்டன் குளம்' என்ற புத்தகம், ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டியதாகும். தோரு ஒருநாள் காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஏதோ பார்த்துக்கொண்டு இருப்பதைக் காட்டின் வழி கடந்து செல்லும் விவசாயிகள் பார்க்கிறார்கள். அன்று மாலை விவசாயிகள் வேலை முடித்துத் திரும்பும்போதும் அதே இடத்தில் உட்கார்ந்து தோரு ஆர்வமாக அப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

தோரு அப்படி என்ன பார்க்கிறார் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். தோரு ஒரு குழந்தையைப்போல உற்சாகத்துடன் சொன்னார், 'சிவப்பு எறும்புகளுக்குள் சண்டை நடக்கிறது. தற்செயலாகக் காலையில் கவனிக்கத் துவங்கினேன். முடிவு இல்லாத சண்டை. இவ்வளவு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டதே இல்லை. இந்தச் சண்டை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கக்கூடும் என்றே தோன்றுகிறது' என்றார். எறும்புகளை ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து அவதானித்திருக்கிறார். இந்தச் சண்டையைப்பற்றி 10 பக்கங்கள் தனது நாட்குறிப்பில் எழுதிஇருக்கிறார்.

பிரெஞ்சில் Minuscule என்ற அனிமேஷன் குறும்படங்கள் வெளியாகி உள்ளன. இவை ஆறு குறுந்தகடுகள் ஒன்றுசேர்ந்த ஒரே பேக்காகக் கிடைக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், உயிரினங்கள், சிறு புல், செடிகொடி போன்றவற்றின் இயக்கங்களையும் அதில் வெளிப்படும் அற்புதங்களையும் விளக்குவதே இந்த டி.வி.டி. வரிசையின் நோக்கம். உலகம் முழுவதும் பெருவாரியான இயற்கை ஆர்வலர்கள் பாராட்டும் குறும்படங்கள் இவை. ஒரு ஆப்பிளை ஒரு புழு சாப்பிடுகிறது என்ற ஒரு வரியை ஒரு படமாகத் தயாரிக்கிறார்கள். ஆப்பிளை ஒரு புழு சாப்பிடுவதற்கு மேற்கொள்ளும் எத்தனம். அதைச் சாப்பிடும் அழகு என்று மிக உயர்வான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட அற்புதமான படங்கள். இயற்கை எத்தனை நுட்பமானது என்பதை இந்தப் படங்கள் சிறார் களுக்கு அழகாகக் கற்றுத்தருகின்றன.

The Story of the Weeping Camel ஒரு டாக்கு மென்டரி படத்தைப் பார்த்தேன். கடுமையான வெக்கையும் குளிரும்கொண்ட கோபி பாலை வனத்தில் மங்கோலிய நாடோடி இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்துக்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி குளிராடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது. படம் துவங்கும்போது ஒட்டகங்கள் பிரசவிக்கும் காலம் துவங்குகிறது. இதற்காக ஒட்டகங்களை மேய்ச்சலில் இருந்து இருப்பிடத்துக்குக் கொண்டு வருகிறார்கள். பிரசவத்தின்போது ஒட்டகம் எழுப்பும் வலி நிறைந்த சத்தம் பாலைவனம் எங்கும் எதிரொலிக்கிறது.

அப்படிப் பிரசவ நேரம் வந்த ஒட்டகம் ஒன்று குட்டி போடாமல் தவிக்கிறது. ஏன் என்று அந்தக் குடும்பத்துக்குத் தெரியவில்லை. பிரார்த்தனை செய்கிறார்கள். மருத்துவம் பார்க்கிறார்கள். ஒட்டகம் பிரசவிக்கப் போராடுகிறது. குட்டியின் தலை வெளியே வருவதற்குப் பதிலாகக் கால் வெளியே வந்துவிடுகிறது. குடும்பமே ஒன்று சேர்ந்து பண்டுவம் பார்க்கிறார்கள். முடிவில் ஒட்டகம் பிரசவிக்கிறது.

வெள்ளை ரோமங்களுடன் குட்டி ஒட்டகம் உயரமாக இருக்கிறது. தாய் ஒட்டகம் அதை உற்றுப் பார்க்கிறது. குட்டி தன்னைப்போல இல்லாமல் வெள்ளைவெளேரென வேறு நிறத்தில் இருப்பதைக்கண்டு அருகில் சேர்க்காமல் ஒதுக்குகிறது. குட்டி ஆற்றாமையுடன் பால் குடிக்கத் தாவுகிறது. தாய் விடுவதே இல்லை. அது குட்டியைக் காலால் உதைக்கிறது. தள்ளிப்போய் நின்றுகொள்கிறது. ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு குட்டிக்குப் பால் கொடுக்கவைக்கப் பார்க்கிறார்கள். தாய் ஒட்டகம் பால் தர மறுக்கிறது. குட்டியை வெறுக்கிறது. தாய்ப் பாலுக்காகக் குட்டி சுற்றிச் சுற்றி வருகிறது.

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27

ஒரு வார காலம் ஆகிறது. தாய் குட்டியைப் புறக்கணித்து தனியே போய்விடுகிறது. குட்டி தாயின் பின்னாடியே அலைந்து எப்படியாவது அதன் அன்பைப் பெற்றுவிட முடியாதா என்று துடிக்கிறது. தாய் ஒட்டகம் அதைக் கண்டுகொள்வதே இல்லை. பிரசவ வலிதான் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று நினைத்து, அதற்கு மருத்துவம் பார்க்கிறார்கள். ஆனால், தாய் ஒட்டகம் குட்டியைத் தன் அருகில் சேர்க்க மறுக்கிறது.

இப்படியேவிட்டால், குட்டி செத்துப் போய்விடுமே என்று பயந்த மங்கோலியக் குடும்பம் பாரம்பரியமான சடங்கு ஒன்றை நிகழ்த்த முடிவு செய்கிறார்கள். அதன்படியே அவர்கள் குட்டியை நெருங்கவிடாத தாய் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்டால் மனது மாறி குட்டியைத் தன்னோடு சேர்த்துக்கொண்டுவிடும். அதற்காக யாழ் வாசிக்கும் ஒருவரை அழைத்து வாருங்கள் என்கிறாள் அந்த வீட்டின் மூதாட்டி.

அன்று இரவு தாய் ஒட்டகம் கொண்டுவரப்பட்டு ஒரு இடத்தில் கட்டப்படுகிறது. யாழ் இசைப்பவர் அதன் முன்பாக உட்கார்ந்தபடியே தன்னை மறந்து ஒரு பண் இசைக்கத் துவங்குகிறார். மிக அற்புதமான இசை அது. அந்த இசையைக் கேட்டதும் ஒட்டகம் தன்னை அறியாமல் கண்ணீர்விடத் துவங்குகிறது. அதன் முகம் வேதனைகொள்கிறது. இப்போது குட்டி ஒட்டகத்தை அதன் அருகில் விடுகிறார்கள். அது குட்டியைத் தன் நாவால் தடவிக் கொடுக்கிறது. யாழ் இசை தொடர்கிறது. முடிவில் தாய் ஒட்டகம் குட்டியைத் தன்னோடு சேர்த்துக்கொண்டுவிடுகிறது.

மங்கோலியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படம் மிகச் சிறப்பானது. இசை, மன உணர்ச்சிகளைச் சாந்தப்படுத்தக்கூடியது. அதற்கு மனிதர், விலங்கு என்று பேதம் இல்லை என்பதையே இந்தப் படம் நிரூபணம் செய்கிறது!

பார்வை வெளிச்சம்!

ஒரு பட்டுப் புடவையை உருவாக்கப் பல்லாயிரம் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. பட்டுப்புழுவைக் கொல்லாமல் பட்டுப் புடவை உருவாக்க முடியும். அஹிம்சா பட்டு அல்லது வெஜிடேரியன் பட்டு என்று பெயர். இந்த வகைப் பட்டு நெசவு இன்று ஆந்திராவில் பிரபலம். கரீம்நகர் மாவட்டத்தில்

சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27

பட்டுப்புழுக் கூடுகளை வாங்கி, அதில் உள்ள பூச்சிகளைக் கொல்லாமல் அவை உடைத்து வெளியேறும் வரை காத்திருந்த பின்பு, மீதமான கூட்டில் இருந்து நூலைத் தயாரித்து பட்டுப் புடவை, வேட்டி தயாரிக்கிறார்கள். 'இது உயிர்க் கொலை இல்லாத பட்டு' என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆகவே, இதற்கான தனி மார்க்கெட் உலகெங்கும் உருவாகி வருகிறது!

 
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - ஒட்டகத்தின் கண்ணீர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 27