மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன் - 30

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன் - 30


16-12-09
பெண்ணின் உயரம் ஏன் துயரம்?
சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30
சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30
 
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

ரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. பெண்ணின் அப்பா இலக்கிய ஆர்வலர். அதனால் நிறைய நண்பர்-கள், தெரிந்தவர்கள் என

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

மண்டபம் நிரம்பி இருந்தது. மணமக்களுக்குப் பரிசளித்துப் புகைப்படம் எடுத்துக்-கொள்ள நீண்ட வரிசை இருந்தது. என் முன்னே இருந்த ஒருவர் உரத்த குரலில் சொன்னார், "மாப்-பிள்ளையை-விடப் பொண்ணு ரொம்ப உயரம். எப்படியும் ஆறடி இருப்பா போலி-ருக்கே!" அதைக் கேட்டு உடனிருந்தவர், "அப்போ, ஏணி வெச்சுதான் தாலி கட்ட வேண்டி இருக்கும்!" என்று சொல்லி பலமாகச் சிரித்தார்.

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

அப்போது அந்தப் பெண்ணின் உயரத்தைக் கவனித்தேன். சராசரிப் பெண்களை மீறிய உயரம். ஆனால், அது அவளுக்குத் தனித்த அழகைத் தந்துகொண்டு இருந்தது. அந்த விழாவுக்கு வந்திருந்த பெரும்பான்மையினர், பெண்ணின் உயரத்தைப்பற்றிக் கேலி பேசியபடியே இருந்தது காதில் விழுந்தது. மேடையில் மாப்பிள்ளை-யிடம் அவரது நண்பர்களும், "ஒரு ஸ்டூல் போட்டு நின்னா சரியா இருக்கும்" என்று பரிகாசம் செய்தார்கள். மாப்பிள்ளை சிரிப்பது-போல நடித்துக்கொண்டு இருந்தார். ஆனால், அவருக்கும் பெண்-ணின் உயரத்தில் விருப்பம் இல்லை என்பது அவரது எத்தனிப்பில் தெரிந்தது.

எத்தனையோ திருமண வீடுகளுக்குச் சென்று இருக்கிறேன். பெரும்பாலும், மணமகனைவிடப் பெண் உயரம் குறைவானவளாகவே இருப்பாள். ஒருபோதும் பெண்ணைவிட மாப்பிள்ளை உயரம் என்பதை எவரும் பரிகாசம் செய்ததே இல்லை. காரணம், அப்படி இருப்பது-தான் இயல்பு என்ற பொதுப் புத்தியே பலருக்கும் இருக்-கிறது. உயரம் என்பது அவரவர் உடல்வாகு மற்றும் மரபணு சார்ந்த ஒன்று. இதில் ஆண், பெண் என்ற பேதமும் பரிகாசங்களும் ஏன் வருகின்றன என்று புரியவே இல்லை.

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

தன்னைப்பற்றிய கேலிப் பேச்சுக்களை அந்தப் பெண் உணர்ந்-திருப்பாள். ஆனால், வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை. ஒரு-வேளை, சிறு வயதில் இருந்தே கேட்டுப் பழகி சகித்துப் போயிருப்பாளோ என்று தோன்றி-யது.

நம் ஊரில் மட்டும் இல்லை... உலகம் எங்கும் உயரமான பெண்-கள் காலங்காலமாகப் பரிகாசத்-துக்கு உரியவர்களாகவே இருக்கிறார்-கள். உயரமானவர்களை நோக்கிச் சில கேள்விகள் எப்போதும் கேட்கப்படுகின்றன. நீங்கள் கூடைப் பந்து விளை-யாடுகின்றவரா? உங்கள் வீட்டில் அப்பாவோ, அம்மாவோ உயரமானவரா? ரயில் பெர்த்தில் எப்படிப் படுப்பீர்கள். உங்கள் கால் அளவுக்கு யார் செருப்பு செய்கிறார்கள்? எந்தக் கூட்-டத்தி-லும் நீங்கள் காணாமல் போனால் கண்டு-பிடிப்-பது எளிதில்லையா? ஏதாவது ஹார்-மோன் பிரச்னையா? உருவத்தைவைத்து ஆளை மதிப்பீடு செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சராசரியாக இருப்பது குறித்து ஏன் இத்தனை பெருமிதம்!

திருமண விழாவில் இருந்து விடை-பெறும்-போது மணமகளின் தந்தையிடம் பேசினேன். அவரும் தன் பெண்ணைப்-பற்றிய- அந்தப் பரிகாசங்களைக் கவனித்-திருக்கிறார். வருத்தம் கலந்த குரலில் சொன்னார், "எம்.பி.ஏ. படிச்சிருக்கா. நல்ல திறமையான பெண். வங்கியில் வேலை பார்க்கிறாள். ஆனால், இரண்டு வருஷமாக அவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கிட்டே- இருந்தேன். அவள் உயரத்தைப் பார்த்து எவரும் கட்டிக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எங்க வீட்டிலே இவதான் ரொம்ப உயரம். ஐந்தடி ஒன்பது அங்குலம். உயரமா இருக்கிறதால அவ பட்ட அவமானம் நிறைய சார். பள்ளிக்கூடத்துக்கே போக மாட்டேன்னு அழுதிருக்கா. சமாதானப்படுத்தி அனுப்பிவெச்சேன். வாத்தியார்களே கேலி செய்வாங்க. அவுங்களே இப்படி இருந்தா நான் யாரைக் குறை சொல்றது. லீவு நாள்ல சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூப்பிட்டா வர மாட்டா. காலேஜ் படிச்சி முடிச்சு வேலைக்குப் போயிட்-டாலும் மாறிமாறி இதே பிரச்னை. இந்த மாப்பிள்ளையும் உயரமா இருக்கிற பொண்ணைக் கட்டிக்க மாட்டேன்னு ரொம்ப யோசிச்சாரு. 100 பவுன் நகை. கார், வீடு தர்றேனு பேசி முடிச்சிருக்கேன். இன்னிக்கு அவ கல்யாணம். அதுலகூட தலைகுனிந்து போய் இந்த ஏளனத்தை ஏத்துக்கிட்டுதான் நிக்குறா. உயரமா இருக்கிறது அவ தப்பா? ஜனங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?"

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

வீடு வந்து சேரும் வரை அந்தத் தந்தையின் ஆதங்கக் குரல் என்னை வருத்தியபடியே இருந்தது. இது தனி நபரின் வேதனை இல்லை. சமூகம் காலம் காலமாகவே இந்த பேதத்தை, எள்ளலைக் கூடவே வைத்திருக்கிறது. மாறிவரும் நாகரிக மாற்றங்கள் எதுவும் இந்த மனப்-போக்கை மாற்ற-வில்லை.

புகழ்பெற்ற காதல் ஜோடி-யான சார்லஸ் டயானா திருமணத்தின்போது, சார்லஸை-விட டயானா உயரமானவள் என்ற சர்ச்சை எழுந்தது. இல்லை, சார்லஸ் அவளைவிட ஓர் அங்குலம் உயரமான-வர் என்று இங்கி-லாந்து அரண்மனை பதில் தந்தது. பத்திரிகை-கள் அது பொய், டயானாதான் அவரை-விட உயரம் என்று புகைப்படங்களை வெளியிட்டன.

உடனே அரண்மனை, அது டயானா அணிந்-துள்ள செருப்பின் காரணமாகவே உயரமாகத் தெரிகிறார். சார்லஸ் உயரமான செருப்பை அணி-வது இல்லை. அவருக்குப் பிரத்யேகமாகக் காலணிகள் செய்யப்படு-கின்றன. ஆகவே, சார்லஸே டயானாவைவிட உயரமானவர் என்று அரண்மனை தன் பங்குக்கு புகைப்படங்களை வெளி-யிட்டன. டயானா சார்லஸை-விட உயரமான-வராக இருந்தால் என்ன தவறு. அது ஏன் சர்ச்சைக்கு உள்ளாக வேண்டும். உல-கெங்-குமே பெண் உயரமாக இருப்பதைப் பொதுபுத்தி கொண்டவர்களால் சகித்துக்கொள்ள முடிவது இல்லை போலும்.

பெண்களின் சராசரி உயரம் ஒவ்வொரு தேசத்-துக்கும் வேறுபடுகிறது. அமெரிக்கப் பெண்களின் சராசரி உயரம் 5.4. ஆனால், கனடாவில் 5.3. கௌதமாலாவைச் சேர்ந்த பெண்களின் உயரமோ 4.6. ஆப்பிரிக்கப் பெண்களின் சராசரி உயரம் 5.4-க்கும் மேலே. நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்கள் 5.6. இந்தியப் பெண்களின் சராசரி உயரம் 5.3. அதிலும் வட இந்தியப் பெண்களைவிட தென்னிந்-தியப் பெண்களின் உயரம் இரண்டு அங்குலம் குறைவு என்கிறார்கள். இந்த மாற்றங்கள் மரபணு தொடர்ச்சியாக வரக்கூடியது. மேலும், இது உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்தது. பொருளாதாரக் காரணங்களும் இதற்குள் இருக்கின்றன. இதுதான் விஞ்ஞானரீதியான உண்மை.

உயரமான ஆண்க ளைப் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், உயரமான பெண்களை ஆண்கள் விரும்புவது இல்லை என்பது ஊடகங்-களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். உயரம், குள்ளம் என்பதெல்லாம் வெறும் தோற்றமயக்கம். ஆணோ, பெண்ணோ அவர்-களின் மன இயல்-பும், பரஸ்பர அன்புமே முக்கியமானது. நிறம், உயரம், எடை, அழகு என்று உடல் சார்ந்த பேதங்-களை ஆணைவிடப் பெண்களே அதிகம் எதிர்-கொள்கி-றார்கள். அதனால், உருவாகும் வலிகளோடு போராடுகிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

சீனாவில் பெரிய பாதங்களைக்கொண்ட பெண் துரதிர்ஷ்டம் கொண்டவள். அவளால் குடும்பம் சீரழிந்துவிடும் என்ற மூடநம்பிக்கை ஒன்று இருக்கிறது. இந்த நம்பிக்கையால் பெரிய பாதங்களைக்கொண்ட விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டு இருக்-கிறார்கள் என்கிறது சீன வரலாறு.

சீனாவின் இளம் தலைமுறை இயக்குநர்களில் ஒருவரான யாங்யாசூ இயக்கிய Pretty Big feet என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். இது பல முக்கிய உலக திரைப்பட விழாக்களில் விருதுகளைப்பெற்று இருக்கிறது. அகலமான பாதம்கொண்ட ஒரு பெண்ணின் போராட்டம் மிக்க வாழ்க்கையை இந்தப் படம் விவரிக்கிறது.

ஷாங்மெய்லி பெரிய பாதங்களைக்கொண்டவள். சீனாவின் வறட்சியான பாலைக் கிராமம் ஒன்றில் வசிக்கிறாள். இவளது கணவன் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்து போகிறான். மெய்லியின் பாதங்கள் உருவாக்கிய துரதிர்ஷ்டம் அது என்று ஊரார் சொல்கிறார்கள். மெய்லி தன் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவர்-களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துகிறாள். அவள் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்தவள். அதனால் அவளுக்குத் தெரிந்ததை மட்டுமே கற்றுத் தருகிறாள்.

தன்னுடைய பள்ளிக்குச் சரியான ஒரு ஆசிரியர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவள் முறையிட்டபடியே இருக்கிறாள். படித்த, நகரைச் சேர்ந்த எவரும் இது போன்ற கிராமப் பள்ளிக்குச் சேவை செய்ய முன்வருவதே இல்லை. ஒரு நாள் ஜியா என்ற ஆசிரியை அவர்கள் பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்கிறாள். அவளை மெய்லிக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது.

முறையான வகுப்பறைகள், பெஞ்சுகள் எதுவும் இல்லாமல் நடக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தை ஜியாவுக்குப் பிடிக்கவே இல்லை. நகரத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்த அவளைக் கணவன் விவாகரத்து செய்துவிடுகிறான். அந்த மன வெறுமையில் இருந்து விடுபடவே அவள் தொலைதூரத்தில் உள்ள இந்த கிராமப் பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

எங்கே ஜியா கோபித்துக்கொண்டு போய்விடு-வாளோ என்று பயந்து, மெய்லி அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்-கிறாள். அந்தக் கிராமத்துக் குடிநீர் நன்றாக இல்லை என்று ஜியா குறைபடுகிறாள். உடனே, மெய்லி பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு நடந்தே அருகில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கே பயணிகள் சாப்பிட்டு தூக்கிப் போடும் ஆரஞ்சுப் பழத்தின் தோலைச் சேகரித்து வருகிறாள். அதை உலரவைத்துப் பொடியாக்கி, அந்த ஆரஞ்சுப் பொடியைத் தண்ணீரோடு சேர்த்துக் கொதிக்க வைத்து ஆரஞ்சு மணம் உள்ள சுவைநீரைக் குடிக்கத் தருகிறாள். ஜியாவுக்கு மெய்லியின் மனதும் அக்கறையும் மெள்ள புரியத் துவங்குகிறது.

ஜியா பள்ளியை மேம்படுத்துவதில் துணை நிற்கிறாள். இந்த நிலையில் ஒருநாள் ஜியா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. பிரசவத்-துக்காக நிச்சயம் ஜியா நகரத்துக்குப் போய்விடுவாள். பிறகு, தன் கிராமத்துக்குத் திரும்பி வர மாட்டாள் என்ற வேதனை மெய்லிக்குள் வருகிறது. தன் மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்த ஜியாவின் கணவன் அவளை மறுபடி ஏற்றுக்கொள்கிறான். அவள் நகரம் சென்றுவிடுகிறாள். கிராமப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க நிதி திரட்ட மெய்லி மாணவர் களை அழைத்துக்கொண்டு தலைநகரம் செல்கிறாள். ஜியாவின் உதவியால் கம்ப்யூட்டர் வாங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.

கிராமப் பள்ளிக்கு நவீன கணிப்பொறிகள் வந்து சேர்கின்றன. வகுப்பறை உருமாறுகிறது. புதிய பள்ளி வளாகத் துவக்க விழா நடைபெற உள்ளது. விடிந்தால் பள்ளித் திறப்பு விழா. இரவில் அவள் டிராக்டர் ஓட்டிக்கொண்டு போகும்போது அயர்ந்து உறங்கிவிடுகிறாள். கேட் இல்லாத ரயில்வே தண்ட-வாளத்தில் சிக்கி ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். அந்தத் துக்கம் ஊரைப் பற்றிக்கொள்கிறது. ஜியா தன் குழந்தையுடன் அந்த பள்ளிக்குப் புதிய ஆசிரியையாக வந்து சேர்கிறாள். பாதங்கள் மட்டுமில்லை... மெய்லியின் மனதும் மிகப் பெரியது என்ற உணர்வோடு படம் நிறைவுறுகிறது.

மலைகள், மரங்கள், கட்டடம் என்று உயரத்தை எப்போதும் ஒரு பிரமிப்புடன் பார்த்து வியக்கும் நாம், பெண்களிடம் மட்டுமே பேதம் காட்டுகிறோம் என்பது வெட்கப்பட வேண்டிய குற்ற உணர்ச்சியே ஆகும்!

சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30

பார்வை வெளிச்சம்!

ங்கிலாந்தின் மலைக் கிராமங்களில் ஒன்றான பாட்டன் என்ற குக்கிராமம் (Botton Village) உலகிலேயே மிக அதிசயமானது. இங்கே கற்றல் குறைபாடுகொண்ட மன வளர்ச்சி அற்றவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.300 பேர்களுக்கும் குறைவாக வசிக்கும் இந்த ஊரைத் தன்-னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கி 50ஆண்டு- களுக்கும் மேலாக நிர்வகித்து வருகிறது. மன வளர்ச்சி அற்றவர்கள் இங்கே தங்களால் முடிந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இயற்கையோடு இணைந்து ஒரு குடும்ப-மாக வாழ்கிறார்கள். சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்-கிறார்கள். பண்ணை விவசாயம், மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பயிலகங்கள் இங்கே உள்ளன. இதைக் கடவுளின் கிராமம் என்று அருகிலுள்ள மக்கள் அழைக் கி-றார்கள்!

 
சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - பெண்ணின் உயரம் ஏன் துயரம்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 30