மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 29

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 29

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
நிரம்பி வழியும் பாசாங்குகள்!
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29

லாய் லாமாவின் சொற்பொழிவு ஒன்றினை இணையத்தில் கேட்டேன். அரிய உண்மைகளை எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துவதாக இருந்தது. அந்த உரையில் அவர் வலியுறுத்தும் முக்கிய விஷயம், மனிதர்களின் சுபாவம் இன்று நிறைய மாறியிருக்கிறது என்பதே!

அடுத்தவரை ஏமாற்றுவதைத் தனது திறமை என்று நினைக்கும் மனப்பாங்கு அதிகமாகி வருகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால், எவரும் எவரையும் ஏமாற்றக்கூடியவர்களே. சற்று கவனமாக உங்களைச் சுற்றிப் பாருங்கள். கிருமிகளைப்போல ஏமாற்றும் போலித்தனமும் பரவுகிறது. உங்கள் வரவேற்பறையில், அலுவலகத்தில், பயணங்களில், பொது வெளிகளில் வெறுப்பும், துவேசமும், பாசாங்குகளும் நிரம்பிவழிகின்றன என்கிறார் தலாய் லாமா.

இந்த ஆதங்கம் உலகெங்கும் வெவ்வேறு தளங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அந்தக் குரலுக்குச் செவிசாய்ப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். உலகின் ஐந்து முக்கிய மதங்கள் இந்தியாவில் இருந்து உருவாகியிருக்கின்றன. எவ்வளவோ அறக் கருத்துக்களும், வாழ்க்கை நெறிகளும் கற்பிக்கப்பட்டுஇருக் கின்றன. உலகின் முக்கிய நீதி நூல்களில் பாதி இந்தியாவில் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால், அவை இன்று வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே நம்மிடம் இருக்கின்றன.

புத்தனின் போதனைகள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்தியா அதை மறந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டது. தனி நபர் அறம் அல்லது ஒழுக்கம் என்று ஏதாவது இன்று இருக்கிறதா என்ன? கடந்த தலைமுறை, சொல்லை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது. ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதை உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தது. இன்று சொற்கள் வெறும் அலங்காரப் பொருட்கள். சோப்பு நுரைபோல நிமிடத்தில் அழகுகாட்டி மறைந்துவிடும் மயக்கம் மட்டுமே.

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29

மரியா கோல்மென் என்ற எழுத்தாளரின் உளவியல் முடிவுகள் என்ற ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. மனிதர்களின் இயல்பு மிகவும் சீரழிந்து போயிருக்கிறது என்று நம்பும் ஓர் உளவியல் மருத்துவர், அதைச் சோதித்துப்பார்க்க மேற்கொண்ட சில நேரடியான நிகழ்வுகளை இந்தக் கதையில் விவரிக்கிறார்.

ஒருநாள் உளவியல் மருத்துவர் ஒரு பல்பொருள் அங்காடிக்குப் போகிறார். பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் தருகிறார். மிச்சம் தர வேண்டிய பணத்தை வேண்டும் என்றே மறந்து போனவரைப்போல கேட்காமல் வெளியேறுகிறார். கடையில் இருந்த விற்பனையாளன் தானாக அவரை அழைத்து மீதப் பணத்தைத் தருகிறானா என்று சோதிப்பதுதான் அவரது விருப்பம்.

விற்பனையாளன் அவர் கேட்கவில்லை என்றதும் மிச்சப் பணத்தை உடனே எடுத்து ஒளித்துக்கொள்கிறான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் கடைக்குள் நுழைந்து தனது மிச்சப் பணத்தைக் கேட்கிறார். விற்பனையாளன் அவரிடம் தந்துவிட்டதாகக் குரலை உயர்த்திப் பதில் சொல்கிறான். இருவரும் சண்டை போடுகிறார்கள். விற்பனையாளன் மசியவே இல்லை.

உடனே, அவர் ஒரு போலீஸ்காரரை வரவழைக்கிறார். விசாரணை நடக்கிறது. இப்போது அந்த விற்பனையாளன் மிச்சப் பணத்தைத் தான் மறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு திருப்பித் தருவதோடு, 'நெருக்கடியான வேலைதான் அதற்குக் காரணம்' என்று ஒரு பொய்யையும் சொல்கிறான். இந்தச் சோதனையில் ஏமாற்றும் குணம் இயல்பாகி இருப்பதை உளவியல் மருத்துவர் உறுதி செய்கிறார்.

அதேபோல ஒரு நண்பனை வீட்டுக்கு விருந்து சாப்பிட வரவழைக்கிறார். ருசியான உணவு வகைகளை இருவரும் சாப்பிடுகிறார்கள். உணவின் நடுவில் அவர் தன் நண்பனிடம், அவன் தன்னைப்பற்றி வெளியே எப்படி எல்லாம் அவதூறுகள் சொல்கிறான். எவ்வளவு வதந்திகளைப் பரப்புகிறான். தன்னிடம் இருந்து எதையாவது ஏமாற்றி வாங்க எவ்வளவு முயற்சிக்கிறான் என்பதை முகத்துக்கு நேராக விளக்கிச் சொல்கிறார். உடனே நண்பன் சாப்பாடு போட்டு என்னை அவமானப்படுத்துகிறாயா என்று கத்துகிறான். மருத்துவர் 'பிரச்னை சாப்பாடு இல்லை. நீ ஏன் இரட்டை வேஷம் போடுகிறாய்' என்று கேட்கிறார். அவன் உடனே கோபத்தில் 'உன் நட்பே எனக்குத் தேவை இல்லை' என்று வெளியேறிப் போகிறான். தனது இரட்டை வேஷத்தை எந்த மனிதனும் ஒப்புக்கொள்வதே இல்லை என்ற அடுத்த முடிவையும் மருத்துவர் உறுதியாக்கிக்கொள்கிறார்.

அதுபோலவே தான் காதலிக்கும் பெண்ணின் பிறந்த நாளுக்கு அழகான பரிசு ஒன்றைக் கொண்டுபோகிறார். அந்தப் பரிசு மிகப் பெரியதாக இருக்கிறது. நிச்சயம் விலைமதிப்புமிக்க ஏதோ ஒன்றைக் கொண்டுவந்திருப்பதாகக் காதலி மகிழ்ச்சிகொள்கிறாள். பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்குகிறது. பலரது முன்பாக அந்தப் பரிசைப் பிரித்துப் பார்க்கச் சொல்கிறார். உள்ளே திறந்து பார்த்தால், 10, 15 வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன. அதுதான் பிறந்த நாள் பரிசு.

காதலி மிகவும் கோபப்பட்டு தன்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாகக் கத்துகிறாள். அவர் அந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் மிக அரிதானவை என்று விளக்கிச் சொல்கிறார். அவளோ கோபத்துடன், அவர் பணம் செலவழிக்கத் தயங்கும் கஞ்சன், காதலைப் புரிந்துகொள்ளாத ரசனையற்ற முட்டாள் என்று கத்தி விரட்டுகிறாள். காதலின் பின்னாலும் பணமே ஒளிந்திருக்கிறது. பணம் செலவழிக்காத ஒருவனைக் காதலிக்க எவரும் தயாராக இல்லை என்ற உண்மையை அறிந்துகொள்கிறார். இப்படியாக அவரது எளிய சோதனைகள் மனிதனின் பாசாங்குகளை, போலித்தனத்தை உறுதிசெய்கின்றன என்று முடிகிறது கதை.

எந்தப் பரிசோதனையாலும் மனித சுபாவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதே உண்மை. பச்சோந்திகள் நிறத்தை மட்டுமே மாற்றிக்கொள்கின்றன. மனிதர்கள் நிறத்தை மாற்றிக்கொள்வது இல்லை. மாறாக, பச்சை நிறத்தையே சிவப்பு நிறம் என்று நம்பவைக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள். நம்பவும் செய்கிறார்கள்.

ஒருபக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும் வேளையில், இன்னொரு பக்கம் விளக்கிச் சொல்ல முடியாத அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் உலகில் நடந்தபடியேதான் இருக்கின்றன. ஒரு முறை டெல்லி ரயிலில் சதுரங்கம் விளையாடியபடியே வந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனைச் சந்தித்தேன். அவனும் அவனது அப்பாவும், பகலும் இரவுமாக விளையாடியபடியே வந்தனர்.

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29

தற்செயலாக அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, இது தன்னுடைய பையன் இல்லை என்றும் தன் வேலைக்காரியின் மகன் என்றும் சொன்னார். வியப்பாக இருந்தது. அந்தச் சிறுவனுக்கு அப்பா இல்லை. சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறான். போட்டிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து வெற்றி பெறுகிறான். ஆகவே, அவனைத் தானே போட்டி நடக்கும் ஊர்களுக்கு அழைத்துப் போய்வருவதாகச் சொன்னார்.
உங்களுக்கும் சதுரங்க விளையாட்டில் ஆர்வமா என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே அப்படி எல்லாம் இல்லை. அந்தச் சிறுவனுக்காக நானே இப்போதுதான் கற்றுக்கொண்டேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் எவருக்கும் விளையாட்டில் ஆர்வம் இல்லை. இவன் ஆர்வமான பையன். ஏதோ என்னால் முடிந்தது, இந்தப் பையனுக்குத் துணையாகச் செல்கிறேன். இவனது வெற்றி என்னை உற்சாகப்படுத்துகிறது என்றார். அவரது செயல் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது என்று தோன்றியது.

அடுத்தவர் பொருட்டு அலைந்து திரிவது எளிதானது இல்லை. அதற்கு அக்கறையான மனதும் உண்மையான அன்பும் வேண்டும். அது அந்த எளிய மனிதரிடம் நிறையவே இருக்கிறது. இதுபோன்ற அக்கறையான மனிதர்கள் எங்கோ ஒரு மூலையில் சிறிய அகல் விளக்குபோல ஒளிர்ந்துகொண்டு இருப்பதுதான் உலகின் ஆதார நம்பிக்கைபோலும்.

வில் ஸ்மித் நடித்து 2008-ல் வெளியான Seven Pounds என்ற படம், இது போன்ற ஓர் அரிய மனிதனைப் பற்றியே பேசுகிறது. பென் தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருக் கிறார். இரண்டு வருடங்க ளுக்கு முன்பாக வில் ஸ்மித் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாரா மல் ஒரு விபத்துக்கு உள்ளாகி, அதில் ஏழு பேர் இறந்துவிடுகிறார்கள். அதில் ஒருவர் அவரது காதலி. அந்த விபத்து அவரை மிகுந்த குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. தனது தவறுகளுக்கு அவர் பிராயச் சித்தம் செய்ய விரும்புகிறார்.

அதற்காக, தனக்கு முன்பின் தெரியாத ஏழு நபர்க ளுக்கு உதவிகளைச் செய்வது எனத் தேடுகிறான். சரியான நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, தனது சகோதரன் பெயரில் தான் வரி வசூல் செய்யும் துறையைச் சேர்ந்தவன் என்ற அடையாளத்துடன் களத்தில் இறங்கித் தேடுகிறான்.

இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவாள் என்று தெரியவரும் எமிலி போசா என்ற இதய நோய் சிகிச்சை பெறும் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் எந்த உறவும் இல்லாமல், தனியே ஒரு நாயுடன் வசிக்கிறாள். நோயும் தனிமையும் அவளை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறது. அவளுக்கு உதவி செய்வது என்று முடிவு செய்து மருத்துவமனைக்கே தேடிச் சென்று தேவையான உதவிகள் செய்கிறான். அவள் தன்மீதும் ஒருவர் பரிவு காட்டு கிறார் என்பதில் நெகிழ்ந்துவிடுகிறாள். பென் ஒரு தாயைப்போல அவளைத் தேற்றுகிறான். பராமரிக் கிறான். அவளது உடல்நலத்தில் அக்கறைகொள் கிறான்.

பென் ஏன் இதை எல்லாம் செய்கிறான். தங்களுக்குள் என்ன உறவு இருக்கிறது என்று அழுகையோடு கேட்கிறாள் எமிலி. அதற்கு பென், அவள் மிகவும் நல்ல பெண். வாழ்க்கையில் அவள் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்கவே இல்லை. அதற்காகவே அவளுக்கு உதவி செய்வதாகச் சொல்கிறான்.

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29

எமிலி போசாவுக்கு மாற்று இதயம் கிடைத்தால் அவள் உயிர்பிழைக்கக்கூடும் என்ற சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது போலவே ஓர் இசைக் கலைஞருக் குக் கண்கள் தானமாகத் தேவைப்படுகின்றன. ஒரு விளையாட்டுப் பயிற்சியாளருக்கு எலும்பு மஜ்ஜை தானமாகக் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது. ஒரு ஸ்பானியப் பெண்ணுக்குக் குடியிருக்க வீடு இல்லை என்று தெரியவருகிறது. இன்னொரு பெண்ணுக்கு நுரையீரல் தேவைப்படுகிறது.

பென் தன்னுடைய வீட்டை அந்தப் பெண்ணுக்கு எழுதித் தருகிறான். தன்னால் மற்றவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்று முடிவுசெய்து, ஒருநாள் தற்கொலை செய்துகொண்டு தனது உடல் உறுப்புகளைத் தானம் தருகிறான். அவனது உடலின் கண்கள், இதயம், எலும்பு மஜ்ஜை, நுரையீரல் என ஒவ்வொன்றும் ஒருவருக்குத் தானமாகக் கிடைக்கிறது. இப்படியாக ஏழு பேர்களுக்கு அவன் உதவி செய்கிறான்.

மாற்று இதய சிகிச்சையில் புத்துயிர்ப்புகொள்ளும் எமிலி, தனக்காகவே பென் இறந்து இதயத்தைத் தானம் கொடுத்திருக்கிறான் என்று அறிந்து, வெடித்து அழுகிறாள். அவனது உடல் உறுப்புகளைத் தானம் பெற்றவர்களைத் தேடிச் சந்திக்கிறாள். பார்வையற்ற இசைக் கலைஞன் இப்போது பென்னின் கண்களுடன் புதிய மனிதனாக இசை நிகழ்ச்சி நடத்துகிறான். அங்கே வரும் எமிலி அவனைச் சந்தித்து பென்னின் கண்களையே உற்றுநோக்குகிறாள். அவன் பென்னின் இதயம் பொருத்தப்பட்ட எமிலியை அடையாளம் கண்டுகொள்கிறான். அவர்கள் பென் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்ந்து முடித்துவிட்டதை கண்ணீர் மல்கப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகன் நாடகத்தில், ஷைலாக் என்ற கதாபாத்திரம் தன்னிடம் கடன் பெற்றவர்கள், அதற்கு மாற்றாக உடலில் இருந்து ஒரு ராத்தல் இறைச்சியைத் தர வேண்டும் என்று சொல்வதாக ஒரு வரி வருகிறது. அப்படித் தன் உடலின் ஏழு பகுதிகளைத் தானம் தந்த ஒருவனின் கதைதான் இந்தப் படம். தனது தவறுகளுக்காக வருந்தும் ஒரு மனிதனின் அன்பு தூய்மையானது. அது எந்த விந்தையையும் உருவாக்கக்கூடியது!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29

உடலை வில்லாக வளைப்பது ஒரு கலை. டேனியல் பிரௌனிங் ஸ்மித் என்ற 29 வயது இளைஞர், உலகின் அதிசய ரப்பர் மனிதர் என்று சிறப்புப் பெற்றிருக் கிறார். இவரால் தனது உடலை எந்தப்பக்க மும் வளைக்கவோ, சுருக்கவோ முடியும். கைகால்களை வளைத்து ஒன்று சேர்ந்து, தானே சிறிய பந்துபோலாகிவிடும் ஆற்றலும் அவருக்கு உள்ளது. கின்னஸ் விருது பெற்றுள்ள டேனியல், உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் மனித ஆரோக்கியத்தின் முதல்படி என்கிறார். நடிகர், சாகசக்காரர், கூடைப் பந்தாட்ட வீரர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் என்ற பல முகங்கள்கொண்ட இவர், 'சீனாவும் இந்தியாவுமே உடலைப் புரிந்துவைத்திருப்பதில் முன்னோடி நாடுகள். அங்கேதான் மரபான அரிய உடலியல் சாஸ்திரங்கள் உள்ளன' என்கிறார்!

 
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - நிரம்பி வழியும் பாசாங்குகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 29