மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன் - 24

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன் - 24

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன?
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

வ்வொரு மனிதனும் ஒரு பாடப் புத்தகம். அவனிடம் இருந்து என்ன கற்றுக்கொள்வது, எப்படிக் கற்றுக்கொள்வது என்பது ஆராய்ந்து அறிய வேண்டிய சுயமுயற்சி. மிட்ச் ஆல்பம் என்ற பிரபல விளையாட்டு வர்ண னையாளர் எழுதிய மோரியுடனான செவ்வாய்க்கிழமைகள் (Tuesday's with morrie) என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். வழக்கமான சுயநம்பிக்கைப் புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் என்று பல முறை புத்தகக் கடைகளில் இதைக் கடந்து போயிருக்கிறேன்.

ஆனால், இந்த முறை மைசூரில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இதே புத்தகத்தைப் பார்த்தேன். விற்பனைப் பெண் கண்ணில் வியப்பு வழிய... இதைப் படித்தால் நிச்சயம் அழுதுவிடுவீர்கள். பயணத்தில் படிக்க உகந்த புத்தகம் இல்லை. இது ஒரு வாழ்க்கைப் பாடம் என்று புகழாரம் சூட்டியபடியே சிபாரிசு செய்தாள். அப்படிச் சிபாரிசு செய்யப்பட்ட பல புத்தகங்கள் ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. ஆனால், மோரியுடனான செவ்வாய்க்கிழமைகள், அந்தப் பெண் சொன்னதை நிஜமாக்கியது.

மைசூரில் இருந்து ரயிலில் சென்னை வருவ தற்குள் அதைப் படித்து முடித்தபோது நிம்மதி யாக உறங்க முடியவில்லை. மனதில் ஆழ்ந்த வலியும் தவிப்பும் உருவானது. இரண்டு நாட்களில் மூன்று முறை அந்தப் புத்தகத்தைப் படித்தேன். ஒரு புத்தகம் வாசகனின் இருப்பை நிலைகுலையவைப்பது அரிதாகவே நடக்கிறது.இந்தப் புத்தகம் அந்த வகையைச் சேர்ந்தது.

மோரி ஷ்வார்ட்ஸ் எனப்படும் முதிய பேராசிரியரின் இறுதி நாட்களை விவரிக்கும் இந்தப் புத்தகம், அவரது மாணவர்களில் ஒருவரான மிட்சால் எழுதப்பட்டு இருக் கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமூக உளவியல் பேராசிரியராக இருந்தவர் மோரி. 1970-களில் மிட்ச் கல்லூரியில் படித்தபோது, மோரிதான் மிட்சின் ஆதர்சப் பேராசிரியர். படித்து முடித்த பிறகு, பேராசிரியரை மிட்ச் பல வருடங்கள் சந்திக்கவே இல்லை. ஒருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேராசிரியர் பற்றிய செய்தியை அறிகிறார்.

வயதான மோரி, மிகக் கொடிய நரம்பு நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாகச் செயல் இழக்கச் செய்து மரணம் அடையச் செய்துவிடும். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவர் உடைந்துபோகிறார். தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணர்கிறார். மிச்சம் இருக்கும் நாட்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

இதற்காகத் தன்னிடம் படித்த மாணவர்கள், நண்பர்கள் பலரையும் அழைத்து, தான் இதுவரை வகுப்பில் கற்றுத்தராத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நாம் வாரத்தில் ஒருநாள் சந்தித்து வாழ்க்கைபற்றி கற்றுக் கொள்ளலாம். இதில் நான் பேராசிரியர், நீங்கள் மாணவர்கள் என்று இல்லை. பரஸ்பரம் அவரவருக்குத் தெரிந்த அனுபவங்களை, உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்கிறார். அப்படித்தான் அவரது செவ்வாய்க்கிழமைச் சந்திப்புகள் துவங்கின.

இந்தச் சந்திப்புக்கான பல வருஷங்களுக்குப் பிறகு தன் பேராசிரியரைத் தேடி வருகிறார் மிட்ச். 'பள்ளிகள், கல்லூரிகள் பாடங்களை மட்டுமே கற்றுத்தருகின்றன. வாழ்க்கையை அல்ல!' என்று உறுதியாகச் சொல்லும் பேராசிரியர், தன் வகுப்பின் முக்கிய நோக்கம் அவரவர் மனதில் உள்ள கேள்விகளைப் பகிர்ந்துகொள்வதே. நாம் அனைவரும் சேர்ந்து அதற்கான விடையைத் தேடிப் பார்க்கலாம். முடிந்தால் கண்டுபிடிக்கலாம் என்கிறார்.

இந்த வகுப்புகள் மோரியின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை உணவுக்குப் பிறகு ஆரம்பமாகின. இங்கே வாழ்க்கைதான் ஒரே பாடம்.அதைப்பற்றி அவரவர் சந்தேகங்கள், பயங்கள், தோல்விகள், ஏமாற்றங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு மதிப்பெண்கள் எதுவும் இல்லை... புத்தகங்கள் இல்லை. உரையாடல்தான் வகுப்பின் முக்கிய அம்சம்.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

குடும்பம் என்றால் என்ன? மன்னிப்பது சரியா... தவறா? ஏன் மனிதர்கள் அன்பு செலுத்த வேண்டும்? மனிதர்கள் எதை நம்புகிறார்கள்? சமூகத்தின் சரி, தவறுகளுக்குத் தனி நபர்கள் பொறுப்பு எவ்வளவு? பல்வேறு தலைப்புகளில்அவர்கள் கூடிப் பேசினார்கள். இந்தச் சந்திப்புகளை வெறும் தத்துவ விவாதம் போல ஆக்கிவிடாமல், ஒவ்வொரு வகுப்புக்கு வரும்போதும் ஒவ்வோர் ஆளும் தனக் குப் பிடித்த இன்னொருவருக்கு உணவு வாங்கி வந்து தர வேண்டும். சேர்ந்து உணவு உண்ண வேண்டும். ஆடிப் பாடி மகிழ வேண்டும். என்று மனிதர்களுக்குள் நல்லுறவை ஏற்படுத்த முனைந்தார் மோரி.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

ஒவ்வொரு வாரமும் அவரது உடல் நலம் மோசமாகிக்கொண்டே வந்தது. அவர் கால்கள் மரத்துப்போயின. தானே எழுந்து மூத்திரம் போக முடியாமல்சிரமப் பட்டார். நினைவாற்றல் தடுமாறத் துவங் கியது. பார்வை மங்கத் துவங்கியது. ஆனால், வகுப்புகள் நடைபெற்றன.

ஒருநாள் அவர் தன் மரணத்தின் பிறகு நடத்தப்படும் இறுதி நிகழ்ச்சியைத் தன் கண் முன்னே நடத்திப் பார்க்க ஆசைப்பட்டார். 'உயிர் வாழும் இறுதிச்சடங்கு' என்று அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அவர் முன்னால் நண்பர்கள், உறவினர்கள் ஒன்று கூடி அழுதார்கள். அவர் இறப்புக்கான இறுதி அஞ்சலிக் கவிதைகளை வாசித்தார்கள். அவரோடு பழகியதை நினைவுகொண்டார்கள். அவர்களுடன் மோரி சேர்ந்து அழுதார்... சிரித்தார். தன்னை அறிந்துகொள்ள அந்த நிகழ்ச்சி உதவியது என்றார்.

மோரியின் வகுப்பறைபற்றி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அவர் தன் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டார். மோரி திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே விஷயம்... 'மற்றவர்களோடு உறவாடு... அவர்களுக்குப் பயன் உள்ளவனாக உன்னை மாற்றிக்கொள்' என்பதே.

இசையிலும் நடனத்திலும் சிறுபிராயத்தில் இருந்தே விருப்பம்கொண்ட மோரி, தன் வயதை மறந்து வீட்டிலேயே நடனமாடத் துவங்கினார். மரணம் என்பது நடனத்தின் முடிவு மட்டுமே என்று சொல்லி குதூகலமாகச் சிரித்தார்.

வாழ்க்கை அனுபவத்தில் கண்டு உணர்ந்த உண்மைகள்தான் மோரி வகுப்பறையின் முக்கியப்பாடங் களாக இருந்தன. அதை மிட்ச் மிகத் துல்லியமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். அதுதான் இதைப் பல லட்சம் பிரதி கள் விற்ற புத்தகமாக பெரிய வரவேற்பைப் பெறச் செய்து இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

மோரி மட்டுமில்லை... பல ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியே நிறைய கற்றுத்தந்திருக்கிறார்கள். அவை நம்மை மேம்படுத்த உதவிய அக்கறைகள். நம் அக வளர்ச்சியைச் செழுமைப்படுத்திய பலர் ஆசிரியர்களாக வேலை செய்யவில்லை. ஆனால், கற்றுக்கொடுத்தார்கள். அவர்களில் பலரை முன் உதாரணமாகக்கொண்டு இருக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது கொள்ளும் அக்கறையும் அதன் விளைவுகளும் எளிதில் விவரிக்கக்கூடியது இல்லை. தண்ணீர், திராட்சைப் பழமாக உருமாறுவது போல அது ஒரு ரசவாதம்.

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநரான அகிரா குரோசவா மதாதயோ (Madadayo) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் ஓர் ஆசிரிய ரைப்பற்றியதே. இதுதான் குரோசவாவின்

கடைசிப் படம். உசிதா என்ற முதிய பேராசிரியருக்கும் அவரிடம் படித்த மாணவர்களுக்கும் உள்ள உறவைப்பற்றியது இப்படம். தன் ஆசிரியரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று அவரிடம் படித்த மாணவர்கள் முடிவு செய்கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

இதற்காக வேறு வேறு ஊர்களில் வசிக்கும் பலரும் ஆசிரியரைத் தேடி வருகிறார்கள். ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவர்களைச் சந்திக்கிறார். அவர்கள் எப்படி மாறி இருக்கிறார்கள் என்பதைக் கேலி செய்கிறார். பிறந்த நாள் விருந்தில் மாணவர்களோடு போட்டியிட்டுக் குடிக்கிறார். இன்னமும் முதிய பேராசிரியருக்குள் உற்சாகமும் இளமையும் துள்ளிக்கொண்டு இருப்பதை உணர்கிறார்கள்.

பேராசிரியர் இத்தனை வருடங்கள் உழைத்தும் உரிய வீடு இல்லாமல் கஷ்டப்படுவதைக்கண்டு, அவருக்காக ஒரு வீடு கட்டித்தர ஆசைப்படுகிறார்கள். ஆசிரியர் தன் புதிய வீட்டில் திருடர்கள் உள்ளே வந்து திருடிப்போவதற்கு என்று தனியே வழி அமைத்திருக்கிறார். ஏன் அப்படி என்று கேட்டால், தன் வீட்டில் திருடன் கொண்டுபோக எதுவும் இல்லை. தன் அறிவை அவன் திருடிப் போக முடியாது. ஆகவே, ஏமாந்துபோகாமல் இருக்கவே இப்படி உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி என்று அடையாள அட்டைகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

மாணவர்கள் மனதில் ஆசிரியர்களுக்கு வயதாவதே இல்லை என்பதே படத்தின் மையப்பொருள். மதாதயோவின் ஆசிரியரும் மோரியைப் போலவே வாழ்க்கைதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் என்கிறார். எந்த நாடு, எந்த மொழி, யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. வாழ்வின் உண்மைகள் உலகம் முழுவதும் ஒன்று போலவே இருக்கின்றன. அதைத்தான் மோரியும் உசிதாவும் நிரூபணம் செய்கிறார்கள்!

நாம் சின்னச் சின்ன விஷயங்கள்தானே என்று நினைப்பதைப் பலர் தன் செய்கையால் முக்கியமானதாக ஆக்கியிருக்கிறார்கள். ஒரு முறை பெங்களூரில் ஒரு சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்தேன். அருகில் ஒரு பள்ளி இருந்தது. காலை நேரம் மாணவர்கள் ஓடியோடி சாலையைக் கடந்துகொண்டு இருந்தார்கள்.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

60 வயதைக் கடந்த ஒரு மனிதர் ஒவ்வொரு மாணவராக நின்று சாலையைக் கடந்து போவதற்கு உதவி செய்தபடியே இருந்தார். ஒரு மணி நேரம் அவர் இப்படி உதவியிருக்கக்கூடும். அதே பள்ளியில் வேலை செய்த என் நண்பரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, அவர் ஓய்வுபெற்ற ஊழியர் என்றும் தினமும் காலையும் மாலையும் பள்ளியின் முன்பாக உள்ள சாலையில் வந்து நின்று, மாணவர்கள் பத்திரமாகக் கடந்துபோவதற்கு உதவி செய்கிறார். இப்படிச் செய்வதால் தனக்கு மன நிறைவு கிடைப்பதாகச் சொல்கிறார். இவரைப் பள்ளியில் அழைத்துப் பாராட்டலாம் என்று சொன்னால், நிர்வாகம் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது என்றார்.

சாலையைக் கடப்பதற்கு உதவி செய்வது சிறிய செயல்தான். ஆனால், அதை ஒருவர் அக்கறையுடன் ஒரு சேவையாகத் தினமும் செய்வது பாராட்டுக்குரிய விஷயம். ஏன் அந்த அக்கறைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன?

அவரைத் தினமும் ஆயிரமாயிரம் பேர் பார்த்துக் கடந்து போகிறார்கள். ஏன் ஒருவர்கூட அந்த அக்கறையைக் கற்றுக்கொள்ளவே இல்லை. காரணம், அவர் எளிய மனிதர். இதையே மேடையிட்டு நாடறிந்த ஓர் அறிஞர் வாய் வார்த்தையில் சொன்னால், நாடு முழுவதும் அது நல்லெண்ணச் செய்தியாக வெளியாகும். அவர் கொண்டாடப்படுவார். எளிய மனிதர்களின் நேரடிச் செயல்களோ எந்தக் கவனமும் இன்றி புறம் ஒதுக்கப்பட்டுவிடுகின்றன.

கற்றுக்கொள்வது என்பது பள்ளியோடு முடிந்துவிடுகிறது என்ற மனப்பாங்கு பெரும்பான்மை மனிதர்களுக்கு இருக்கிறது. அது பெரும் அபத்தம். கற்றுக்கொள்வதற்கு வயதோ, சூழலோ தடைகளாக இல்லை. நமது விருப்பமின்மைதான் எப்போதும் பெரிய தடையாக இருக்கிறது!

பார்வை வெளிச்சம்

57 வயதான கிம்பெக் பிறவியிலேயே மூளை வளர்ச்சி குறைந்தவர். உடல் நலிந்து, சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டிய கிம்மை அவரது தந்தை தொடர்ந்து கவனித்து உற்சாகப்படுத்தினார். அப்போது தான் கிம்மிடம் 'போட்டோகிராஃபிக் மெமரி' எனப்படும் அதீத நினைவாற்றல் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிம் தான் படித்த புத்தகங்களை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாகத் திரும்பச் சொல்ல முடியும் அளவு நினைவாற்றல் பெற்றிருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கும் திறன் அவருக்கு இருந்தது. அதனால், மடமடவென 12 ஆயிரம் புத்தகங்களைப் படித்துத் தள்ளிய கிம், எதைக் கேட்டாலும் பதில் சொல்லத் துவங்கினார்.

சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24

கம்ப்யூட்டர் போல தான் ஒரு கிம்ப்யூட்டர் என்று அழைத்துக்கொண்ட கிம், எந்தத் துறைபற்றிக் கேட்டாலும் உடனே பதில் சொல்லிவிடும் விற்பன்னர். இதே திறனைப் பயன்படுத்தி, எந்த இசையைக் கேட்டாலும் மறு நிமிடமே அதை வாசித்துக்காட்டும் திறமை உருவானது. இவரது சிறப்புத் திறன்களைக் கேட்டு அறிந்த ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர் பேரிமரோ, அவரைப்போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்தப் படம்தான் டஸ்டின் ஹாப்மென் நடித்த 'ரெயின்மென்'. அது மிகப் பெரிய வெற்றி பெற்றது. கிம் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வி புலங்கள் என்று தொடர்ந்து தன் திறமையால் நோய்மை, வெற்றிக்குத் தடை இல்லை என்று நிரூபித்து வருகிறார்!

 
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24
- இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - செவ்வாய்க்கிழமைகள் சொல்லும் சேதி என்ன? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 24