ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

வெள்ளம் வந்தது; உள்ளம் நொந்தது!

தலையங்கம்

ண்மையில் பெய்த பேய் மழையின் காரணமாக, சென்னை அடையாறும் கூவமும் கங்கையாகவும் காவிரியாகவும் உருமாறி, குடியிருப்புகளையும் குடிசைகளையும் விழுங்கி, ஆயிரக்கணக்கன மக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்து, கண்ணீர்த் தொடர்கதைக்கு முன்னுரை எழுதி வைத்துள்ளன.

கோட்டூர்புரத்திலும் வியாசர்பாடியிலும் பொன்னேரியிலும் இயற்கை நிகழ்த்தியுள்ள ஊழிக்கூத்து கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது. பகைவர் பட்டாளம் சூறையாடிவிட்டுச் சென்ற பட்டணம் போலன்றோ நகரின் சில பகுதிகள் காட்சியளித்தன!

குடிமக்களுக்குத் துயரம் நேரும்போது உதவி அளிப்பது அரசின் கடமையாவது போன்றே, துன்பங்களைத் தவிர்க்கவும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அரசின் தலையான கடமை ஆகிறது.

சென்னையை அடுத்துள்ள ஏரிகளையும் குளங்களையும் பராமரிக்கச் செய்து, ஆழப்படுத்தி, கரைகளைச் செப்பனிட்டுப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, பூந்தமல்லிக்கும்

தலையங்கம்

பெரும் புதூருக்கும் இடையேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரியைப் பராமரிப் பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியே ஆக வேண்டும். பேய் மழை பெய்யும்போதெல்லாம் சென்னை மக்களுக்கு செம்பரம் பாக்கம் ஏரி சிம்ம சொப்பனமாகிவிடுகிறது. 'அது உடைத்துக் கொண்டு விடுமோ' என்ற கவலைக்கும், 'உடைத்துக்கொண்டு விட்டது' என்ற வதந்திக்கும் இடையே சிக்கித் திணறி மக்கள் கதிகலங்கிப் போகிறார்கள். எத்தனைச் செலவானாலும் அதன் கரைகளைப் பலப்படுத்துவதோடு, மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அதன் உபரி நீரை வெளியேற்றுவதற்கும் வழி செய்ய வேண்டும்.

வெள்ளம் வரும்போது மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியைப் பற்றி நினைப்பதும் பேசுவதும் போதாது. செம்பரம்பாக்கத்தைக் பற்றி இனி சென்னை மக்கள் பீதியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் மாபெரும் பொறுப்பாகும்.

 
தலையங்கம்
-
தலையங்கம்