ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஐயப்பனோடு ஐம்பது நாள்

ஐயப்பனோடு ஐம்பது நாள்


விகடன் பொக்கிஷம்
ஐயப்பனோடு ஐம்பது நாள்
ஐயப்பனோடு ஐம்பது நாள்
 
ஐயப்பனோடு ஐம்பது நாள்
ஐயப்பனோடு ஐம்பது நாள்
ஐயப்பனோடு ஐம்பது நாள்

படி 4: நெய்த் தேங்காய்

''முன்முடி, பின்முடி என்றால், விளங்கவில்லையே?''

''சரி, இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. கொஞ்சம் இருங்கள்'' என்று மறுபடியும் செக்ரெட்டரி எழுந்து உள்ளே போய்விட்டு, நொடியில் அரிசி, பருப்பு எல்லாம் எடுத்து வந்தார்.

''இப்போ நான் ஒரு மாடல் இருமுடியே தயாரித் துக் காட்டிவிடுகிறேன். நெய்த் தேங்காய் மட்டும் இப்போது போடமுடியாது'' என்று சொல்லிக் கொண்டே, இரண்டு சிறிய பைகளில் அரிசியைப் போட்டுக் கட்டினார். ஒன்றில் வெல்லம், மற்றொன் றில் பருப்புப் போட்டுக் கட்டி, ''இதோ பாருங்கள், நெய்த் தேங்காய்க்குப் பதிலாக இந்த வெறுந்தேங்காயை இந்தப் பையில் போடுகிறேன்'' என்று ஐந்தாவது பையில் தேங்காயைத் திணித்தார்.

''நெய்த் தேங்காய் என்றால் என்ன என்று அவர் கேட்டு நீங்கள் பதில் சொல்ல வேண் டாமே! அதையும் நீங்களாகவே சொல்லி விடுங்கள்'' என்று குரு சுவாமி வேடிக்கையாகச் சொல்ல, செக்ரெட்டரி பையில் திணித்த தேங்காயை வெளியில் எடுத்து, என்னிடம் அதன் குடுமி பாகத் தைக் காட்டி, ''இதோ கவனியுங் கள்... இந்தக் கண் வழியாகத் துவாரம் போட்டு, உள்ளேயுள்ள இளநீர் எல்லாவற்றையும் கொட்டி விட்டு, அதன் வழியாக நல்ல சுத்தமான பசு நெய்யை ஊற்றி நிரப்பி, வாயை கார்க் போட்டு மூடி, சீலும் வைத்துவிடவேண்டும். பிறகு, இதில் ஐயப்பனை மந்திர பூர்வமாக அமர்த்தி, விசேஷ பூஜை செய்து, இருமுடிப் பையின் முன் முடியில் வைக்க வேண்டும். தேங்காய்க்குள் நெய் அடைத்து பூஜை செய்துவிட்டால், உடனே சபரிமலை யாத்திரை புறப்பட வேண்டும்'' என்று சொல்லிக்கொண்டே இருமுடியைக் கட்ட ஆரம்பித்தார்.

ஐயப்பனோடு ஐம்பது நாள்

தலையணை உறை போன்று இருந்த பெரிய பையில் அரிசிப் பையையும் பருப்பு, வெல்லப் பை களையும் தேங்காய்ப் பைகளை யும் வைத்து அமுக்கி, அந்தப் பாகத்தை இறுகக் கட்டினார்.

ஐயப்பனோடு ஐம்பது நாள்

''இதுதான் முன்முடி; அதாவது யாத்திரையின்போது தலையில் இதை ஞாபகமாக முன்பக்கம் வைத்து சுமந்து செல்லவேண்டும். இது பகவானுக்குக் காணிக்கை. பதினெட்டாம் படியில் இந்த முடி இல்லாமல் ஏற முடியாது. ஏறவும் கூடாது'' என்றார்.

பிறகு, மற்றொரு அரிசிப் பையையும் இரண்டு தேங்காய்களையும் பெரிய பையின் மற்றொரு பாகத்தில் திணித்து, அதையும் தனியாகக் கட்டிக்கொண்டே, ''இதைத் தவிர இந்தப் பாகத்தில் நமக்கு வேண்டிய மாற்றுத் துணியையும் வைக்க வேண்டும். துணியை இதில் வைப்பதற்கு ஒரே ஒரு காரணம், இது பின் முடி என்று தெரிவதற்காகத்தான். மலைப்பாதையில் செல்லும்போது எங்கேயா வது இளைப்பாறும் இடத்தில் இருமுடியை இறக்க வேண்டி வரும் அல்லவா? அங்கிருந்து புறப்படும்போது அவசரத்தில் முன்பின் மாற்றி வைக்க நேரிடும். அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு. இது மாத்திரமல்ல, மலை அடிவாரத்திற்குப் போனதும், இந்த இருமுடி யோடு ஒரு ஓலைப் பாய் வேறு சேரும். தவிர, நமது அன்றாட உபயோகத்திற்கான சில்லறைச் சாமான்கள் அடங்கிய பை ஒன்றும் தோளில் தொங்கும்'' என்றார்.

படி 5: ஸ்திரீகள் வரலாமா?

ஐயப்பனோடு ஐம்பது நாள்

பூஜை அறை திரை விலக்கப் பட்டது. தீபாராதனை நடந்தது. தகதகவென்று கொழுந்துவிட்டு எரிந்த கற்பூர ஜோதியில் பதி னெட்டாம் படிக்கு அரசனும், பந்தள ராஜகுமாரனும், ஹரிஹர புத்திரனும், தர்ம சாஸ்தாவுமான சபரிமலை

ஐயப்பனோடு ஐம்பது நாள்

ஐயப்பன் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தான்.

குருசுவாமி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார்.

''ஒரு சந்தேகம், சுவாமி! சபரிமலைக்கு ஸ்திரீகள் யாத்திரை போகக்கூடாது என்று சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன். இங்கு பல ஸ்திரீகள் வந்து பக்தியோடு பஜனை செய்தார்களே! இவர் களும்..?'' என்று கேட்டேன்.

ஐயப்பனோடு ஐம்பது நாள்

குருசுவாமி, ''கம்பன் வீட்டுக் கட்டுத் தறி கவி பாடுகிறது: அவ்வ ளவுதான்! இந்த ஸ்திரீ கள் அனைவரும், மலை யாத்திரை செய்யப் போகும் ஐயப்பன்மார் களின் குடும்பத்தினர். குடும்பத் தலைவன் மேற்கொண்டிருக்கும் சங்கற்பம் நன்கு நிறை வேற ஒத்துழைப்ப வர்கள். அவர்களைக் காட்டிலும் ஐயப்பனி டம் விசேஷ பக்தி கொண்டிருப்பவர்கள்; ஐயப்பனைத் தரிசிக் கும் நாளை எதிர் பார்த்துக்கொண்டிருப் பவர்கள்...'' என்றார்.

''அப்படியானால் அவர்கள் இப்போது வரக்கூடாது. பின் னொரு சமயம் வர லாம் என்றுதானே அர்த்தம்?''

''ஐயப்பன் யாத்தி ரையை வயதான ஸ்திரீகள் மேற்கொள்ள லாம். 'வீட்டுக்கு விலக்கு' என்ற நிலை ஸ்திரீகளிடம் அறவே மாற வேண்டும். அத்தகையவர்கள் பலர் சபரிமலைக்கு வருவதை நீங்கள்தான் நேரில் பார்க்கப் போகிறீர்களே!'' என்றார் குருசுவாமி.

படி 6: அகலும் அஞ்ஞானத் திரை!

ஐயப்பனோடு ஐம்பது நாள்

மனிதன் ஆறறிவு படைத்தவனாயிற்றே! அவ்வப்போது தனது மாறுபட்ட நிலையை உணரத்தான் செய்கிறான். 'இறுதியில் இவை கெடுதலை உண்டு பண்ணும். சமயத்தில் காலைவாரி விட்டுவிடும்' என்ற பயம் தலை தூக்கும்போது, அறிவைப் பயன்படுத்தி அதைத் தவிர்க்க முற்படுகிறான. ஆனால் அகந்தை மலையை அவனால் பிளக்க முடிய வில்லை. அப்போது அவன் திக்கு தெரியா மல் தவிக்கிறான். பெரியோர்களை அணுகி ஆலோசிக்கிறான். பலர் பலவித யோசனை சொல்கிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு குறை இருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. 'நமக்குச் சரியான வழி புலப்படக் காணோமே' என்று அவன் ஏங்கும் சமயம், அவனுக்கு எப்போதோ, எங்கோ, யாரோ 'ஜயப்பன் ஆராதனை' மகத்துவம் பற்றிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. உடனே அவன் ஐயப்பன்மார்களை தேடிச் செல்ல, அவன் நாடிய விளக்கம் கிடைக்கிறது. மனச்சாந்தி ஏற்படுகிறது. 'நம்மைப் பிடித்தாட்டும் வியா திக்கு இதுதான் சரியான வைத்தியம்' என்று தீர்மானித்தவனாக அடுத்து வரும் கார்த்திகை முதல் தேதியை பயம் கலந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஐயப்பன் யாத்திரையை முதன்முதலாக முடித்துவிட்டுத் திரும்பி வந்ததும், அவனுடைய உள்ளத்தில் ஓர் ஒளி பிறக்கிறது. அஞ்ஞானத் திரை அகன்றுவிடுகிறது. ஐயப்பன் பெயரால் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கிறான். உடனே திட்டங்கள் உருவா கின்றன. படிப்படியாக அவற்றை நிறைவேற்று வதில் முனைந்து விடுகிறான்.

இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் என் ஐயப்ப நண்பர் ஒருவர்.

 
ஐயப்பனோடு ஐம்பது நாள்
- யாத்திரை தொடரும்
ஐயப்பனோடு ஐம்பது நாள்