ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ராஜாஜி ஜயந்தி

ராஜாஜி ஜயந்தி


விகடன் பொக்கிஷம்
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி
 
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி

க்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் பெயர் இந்திய அரசியலோடும் அவரது வேறு பல லட்சியங் களோடும் சம்பந்தப்படுவதை விடவும் அதிகமாய் அது சரித்திரத்தோடு சம்பந்தப்பட்டுவிட்டது. நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர்.

சாக்ரட்டீஸின், ஏசுநாதரின், மகாத்மா காந்தியின் - இந்த உலகம் இருக்கும்வரை தாங்கள் உயிரோடிருந்தாலும் இந்த உலகத்திற்கு அதனால் லாபமே எனத் தமது குறுகிய வாழ்நாளிலேயே நிரூபித்துவிட்டுப்போன இன்னும் எவ்வளவோ மகான்களின் வீர மரணங்களையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் நாம் வாழ்கிறோம். நாம் இழந்து விட்ட மகான்களுக்கெல்லாம் துக்கம் அனுஷ்டிப்பது என்று ஆரம்பித்தால், நமது நாட்களில் ஒன்றுகூட மங்கள நாளாக எஞ்சியிராது.

அவர்கள் இன்னும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. மகான்கள் நம்மோடு வாழ்தல் நாம் செய்த பேறு; அவர்கள் நம்மை விட்டு நீங்குதல் அவர்கள் செய்த பேறு!

ராஜாஜி ஜயந்தி

சுவாமி விவேகானந்தர் முப்பது வயது வரை நம்மோடு வாழ்ந்துகொண்டே விவேகானந்தராய்த் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார். அல்ல, நம்மிடையே கலந்து திரிந்துகொண்டிருந்தார். பிறகு, தாமே தம்மை வெளிப்படுத்தி விசுவரூபம் காட்டிப் பின்னர் ஒரு மின்னல் மாதிரி மறைந்து போனார். நாம் நமது சுயநலத்தின் பொருட்டு, அந்த மகான்கள் மூப்பும் பிணியும் எய்தி, நமது அவல வாழ்க்கையைக் கண்டு மனம் நொந்து நொந்து நம்மிடையே தீர்க்காயுசாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பாபகரமானது!

ராமனின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும். அதை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவன் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கதைதான் நமக்குத் தெரியுமே தவிர, அதற்கு நாளும் இல்லை; கோளும் இல்லை. அதை நாம் துக்கமாகவோ மகிழ்ச்சியாகவோ கொண்டாடுவதில்லை.

கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும். அதை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவன் ஒரு வேடன் தெரியாமல் எய்த அம்பு பட்டு மாண்டான் என்ற கதைதான் நமக்குத் தெரியும். அந்தத் தேதியும் தினமும் நமக்குத் தெரியாது. அதையும் நாம் அனுஷ்டிப்ப தில்லை. தீபாவளி கூட ஒரு சாப விமோசன சந்தோஷ நாளே தவிர, துக்க நாள் அல்ல!

நமது தேசியத் திருவிழா நாட் கள் அனைத்தும் சுபதினங்கள். பொய்யான சமுதாயப் பண்புகள் இந்தியாவுக்குச் சொந்தமல்லா தன.

ராஜகோபாலாச்சாரியார் மிகச் சிறந்த சுத்தமான இந்தியர்களில் ஒருவர். நேரு மறைந்தபொழுது கூட இவ்விதமே நினைத்தேன்.

மரணங்களல்ல... பிறவியே மனிதர்களோடு அதிகம் சம்பந்தம் உடையது. இந்திய நாட்டு மகான்களின் ஜனன தினத்தைக் கொண்டாடுகிறோம். அது மிகவும் அர்த்தமுள்ளதாய் இருக்கும்.

பரமஹம்சரும் விவேகானந்தரும் காந்தியும் நேருவும் ராஜாஜியும் இன்னும் எண்ணற்ற பெரியோர்களும் நம் இந்திய மண்ணில் பிறந்ததுதான் நமது பெருமை. மரணங்கள் எல்லா மண்ணுக்கும் சகஜம்தான்.

ராஜாஜி சம்பூர்ணமாகிவிட்டார். அவரது ஜயந்தி நாளைக் கொண்டாடுவோம்!

 
ராஜாஜி ஜயந்தி
ராஜாஜி ஜயந்தி