ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''

''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''


விகடன் பொக்கிஷம்
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''
 
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!'' - வால்ட் டிஸ்னி
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''
லகத்திலேயே அதிக அளவில் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் யார் என்று கேட்டால், வால்ட் டிஸ்னியைத்தான் கூற வேண்டும். அது மட்டுமின்றி, உலகில் உள்ள கோடிக் கணக்கான இளஞ் சிறுவர்களைக் கவர்ந்த படத் தயாரிப்பாளரும் டிஸ்னிதான்.

1901-ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்த டிஸ்னி சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகக் கொண்டார். காட்டு மிருகங்களுடன் பழகுவது இவரது மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே, மாலை வேளைகளில் செய்தித் தாள்களை விற்று சுயமாகச் சம்பாதித்தார் டிஸ்னி. ஓவியப் பிரியரான டிஸ்னி, மக்கன்லி உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது வகுப்புப் படித்துக்கொண்டிருக்கையில் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொண்டார். மாலை வேளைகளில், சிகாகோ நுண்கலைப் பள்ளியில் நாடகக் கலையைப் பயின்றார்.

1918-ம் ஆண்டு, டிஸ்னி படிப்பை முடித்துவிட்டு, முதல் உலகப் பெரும் போரில் செஞ்சிலுவைச் சங்கத் தில் சேர்ந்து, மோட்டார் ஓட்டியாகப் பணியாற்றினார். போர் முடிவுற்றதும் அவர் ஒரு விளம்பரக் கம்பெனி யில் இரண்டு ஆண்டு காலம் பணியாற்றினார். கார்ட்டூன் படங்களை வரைந்து விளம்பரம் செய்வதே அப்போது அவர் வேலையாக இருந்தது. திரைப்படக் கொட்டகைகளில் கார்ட்டூன் பட விளம்பரங்கள் திரை யிடப்படுவதை, டிஸ்னி தமது வீட்டின் ஒரு பகுதியை 'ஸ்டூடியோ'வாக மாற்றி சிறு சிறு கார்ட்டூன் படங்களை (Laugh-O-Grams) பெயரில் வெளியிட்டார்.

திரைப்படக் கலையில் அவருக்கு ஆர்வம்மிகுந்தது. தனது சகோதரர் ராய் டிஸ்னியுடன் இணைந்து, 'கார்ட்டூன் உலகத்தில் அலைஸ்' என்ற படத்தை வெளியிட்டார். அவரது சகோதரர் ஹாலிவுட்டில் பணிபுரிபவர். அவரிடமிருந்து ஹாலிவுட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட டிஸ்னி, ஹாலிவுட்டிற்குப் பயணமானார். அங்கே உள்ள 'யூனிவர்ஸல்' என்ற நிறுவனத்திற்காகப் பல சிறிய கார்ட்டூன் படங்களை டிஸ்னி வெளியிட்டார். ஆயினும், அந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கும் டிஸ்னிக்கும் பலமுறை கருத்து வேற்றுமை ஏற்படவே, டிஸ்னி அதை விட்டு விலகிவிட்டார்.

''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்த ஏழை டிஸ்னியை, ஒரு சிறிய எலி கோடீஸ்வரனாக்கியது. ஒருநாள் அவர் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது, மேஜையின் மேல் ஒரு சுண் டெலி உட்கார்ந்து அவரையே பார்த்து வாலை ஆட்டிக்கொண்டு இருந்தது. எலியையே பார்த்துக் கொண்டிருந்த டிஸ்னிக்கு ஓர் எண்ணம் உதயமாயிற்று. அந்த எலியைப் போலவே ஓர் எலியைக் காகிதத்தில் வரைந்தார். பின்னர் தனது சகோதரரிடம் எலியின் விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்ல, அந்த 'எலி லீலைகளே' பின்னர் 'மிக்கி மௌஸ்' என்ற பெயரில் வெளிவந்தது. 'மிக்கி மௌஸ்' என்ற அந்த எலியைக் கொண்டு, 'வில்லி என்ற நீராவிப் படகு' என்ற படத்தை 1928-ம் ஆண்டில் டிஸ்னி தயாரித்து வெளியிட்டார்.

திரைப்பட உலகில் ஒரு பெரும் பரபரப்பை 'மிக்கி மௌஸ்' ஏற்படுத்திவிட்டது. டிஸ்னிக்குப் பெயரையும் புகழையும் பொருளையும் 'மிக்கி மௌஸ்' வாரி வழங்கியது. 1935 ஆண்டு, பிரெஞ்சு அரசாங்கம், திரைப்படக் கலையில் புதுமைகளைப் புகுத்தி உலகத்தை உல்லா சப்படுத்தியதற்காக, டிஸ்னிக்கு ஒரு (Legion of Honour) பட்டத்தை வழங்கியது. 'மிக்கி மௌஸ்', 'டம்போ', 'டொனால்ட் டக்' போன்றவை டிஸ்னியின் படங் களில் பங்கு பெற்றன.

'எலும்பு நடனம்', 'பூக்களும் மரங்களும்', 'மூன்று பன்றிக் குட்டிகள்' என்ற மூன்று கார்ட்டூன் படங்களைத் தயாரித்த டிஸ்னி, அவற்றை வண்ணத்தில் வெளியிட்டார். 1934-ம் ஆண்டில் டிஸ்னி 'ஸ்னோ வொயிட்டும் ஏழு சித்திரக் குள்ளர்களும்' என்ற முழு நீள வண்ணப் படத்தை எடுத்தார். மூன்று ஆண்டுகளாக அதைத் தயாரித்து, 80 லட்ச ரூபாய் செலவில் அதை வெளியிட்டார். அப் படம் அவருக்கு நாலு கோடி ரூபாய் வருமானமாக அளித்தது.

''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''

ரண்டாம் உலகப் பெரும் போர் 1942-ல் துவங்கியது. அமெரிக்க அரசாங்கம் டிஸ்னியின் ஸ்டுடியோக்களை, உணவுப் பொருள்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்திக் கொண்டது. டிஸ்னி போர் முடியட்டும் என்று காத்திருந்தார்.

போர் 1945-ம் ஆண்டில் முடிந்தது. உடனே டிஸ்னி, 'என் கீதம்' என்ற படத்தைத் தயாரித்து 1946-ல் வெளியிட்டார். சிறு குழந்தைகளுக் காக 'தெற்கின் கீதம்', 'இன்ப நேரம்', 'சிண்ட்ரெல்லா' ஆகிய படங்களைத் தயாரித்து அவர்களை இன்பமூட்டினார்.

கார்ட்டூன் படங்களைத் தவிர, மனிதர்கள் நடித்த 'புதையல் தீவு', 'ராபின்ஹுட்' என்று இரு படங்களை 1952-ல் வெளியிட்டார் டிஸ்னி.

1948-ல் டிஸ்னியின் போக்கு மாறியது. வர்ணனைப் படங்கள் அல்லது இயற்கைப் படங்களை அவர் எடுக்க ஆரம்பித்தார். 'ஸூல்தீவு', 'பீவர் பள்ளத்தாக்கு', 'இயற்கையின் அரை ஏக்கர் நிலம்' என்ற மூன்று இயற்கைப் படங்களும் புகழ்பெற்ற ஆஸ்கர் பரிசுகளை அவருக்கு அளித்தன. 1951-ம் ஆண்டு அவை வெனிஸ் திரைப்படத் திருவிழாவிலும், ஆங்கிலத் திரைப்படக் கழகத்தாலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றன.

மிருகங்களின் இயற்கையான ஜீவ மரணப் போராட்டத்தை டிஸ்னியின் 'வாழும் பாலைவன'த்தில் காணும்போது, டிஸ்னி அவற்றை எப்படிப் படமாக்கினார் என்று நாம் வியப்படைகிறோம்.

''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''

''நீங்கள் மட்டுமல்ல, பெரிய திரைப்படத் தயாரிப்பாளர்களே என் னிடம் இவ்வகையான கேள்விகளைப் பலமுறை கேட்டிருக்கிறார்கள். மிருகங்களின் உண்மை வாழ்க்கையைப் படமாக்கும்போது பொறுமையும் ஆர்வமும் முக்கியம். அவை இரண்டும் இல்லாவிடில் படமாக்குவது கடினம். நான் எடுத்த ஒரு படத்தில் கோழி முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதைப் படமாக்க ஆறு வாரங்கள் காத்திருந்தேன். அதே போல் ஒரு பெரிய மீன் இன்னொரு சிறிய மீனை விழுங்கும் காட்சியைப் படமாக்க எனக்கு நாற்பது நாட்கள் பிடித்தன'' என்கிறார் வால்ட் டிஸ்னி.

இதுவரை டிஸ்னி தனது திரைப்படங்களுக்கென்று 30 ஆஸ்கர் பரிசுகளும், 120 தங்கப் பதக்கங்களும் வாங்கியுள்ளார். கலிபோர்னியா, ஏல், ஹார்வர்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

 
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''
''ஒரு எலிதான் என்னை கோடீஸ்வரன் ஆக்கியது..!''