ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு

சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு


விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
 
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு

ட்டகாசமாய் அறிமுகமாகியிருக்கும் ஊர்வசியைப் பாராட்டுவதா அல்லது அவரை அடையாளம் கண்டு, அரிதாரம் பூசி அமர்க்களப் படுத்தியிருக்கும் டைரக்ட ரைப் பாராட்டுவதா என்று தெரியவில்லையே!

குழந்தையும் கையுமாக பஸ்ஸில் வந்து இறங்கும் வாத்தியார் பாக்யராஜை ஊருக்குள் அழைத்துப் போகும்போது குறும்புத் தனம்; வாத்தியார் மீது ஏராளமாய் காதல் கொண்டு ''யோவ்! என்னை நீ கல்யா ணம் கட்டிக்கிறியா?'' என்று கேட்கிற வெகுளித்தனம்; வாத்தியார் மீது அபாண்ட மாகப் பழி சுமத்தி, 'கம்பல்ஸரி கல்யாணம்' செய்து கொள்ளும் போது நினைத்ததை முடித்துக் கொண்டுவிட்ட பெருமிதம்... இப்படிப் படம் நெடுக ஊர் வசியின் டாமினேஷன்தான்! (இன்றைய இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து நடிகைகளே உஷார்! உங்கள் அத்தனையும் பேரையும் ஓவர் டேக் செய்யக்கூடிய திறமை ஊர்வசியிடம் ஒளிந்திருக் கிறது!)

க்ளைமாக்ஸில் நடத்தப் படும் கர்ப்பத்தடை முகாமில் ஆபரேஷன் தியேட்டர் வரை ஊர்வசியை அழைத்துச் சென்றுவிட்டு, கடைசியில் டாக்டர் மூலமாக பிளேட்டையே மாற்றும் சாமர்த்தியம் இந்தக் கோயம்புத்தூர்க்காரருக்கு மட்டுமே சொந்தம்!

முதியோர் கல்வி வகுப்பில் எழுதத் தெரியாதவர்களின் கையைப் பிடித்து தீபா டீச்சர் 'அ' போடச் சொல்ல, உடனே அத்தனை 'மாணவர்'களும் சபலத்தோடு க்யூவில் நிற்கும் காட்சியில் தியேட்டரே கலகலக்கிறதென்றால் அதற்குக் காரணம்

சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு

பாக்யராஜின் ஒரிஜினல் 'டச்'!

ஒரு சின்ன கதையை - அதுவும் 'திருநீலகண்டர்' கதையை - ட்ரீட்மென்ட்டில் எவ்வளவு அழகாகச் சொல்ல முடியும் என்று காட்டுவதில் பாக்யராஜ் வாத்தியார்தான். சந்தேகமில்லை!

''நீ இயக்கிய எல்லா படத்தையும் விட இதுதான்யா எனக்கு ரொம்ப டச்சிங்கா இருக்கு!'' என்று குரு பாரதிராஜாவின் மோதிரக் கை பாக்யராஜின் தோளைத் தட்டியிருக்கிறதென்றால், அப்புறம் அப்பீல் ஏது?

சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு

சித்தி கொடுமையை நினைத்து பாக்யராஜ் இரண்டாம் கல்யாணத்துக்கு மறுக்கிறாரா அல்லது முதல் மனைவியைத் தவிர வேறொருத்திக்கு இடம் தரமாட்டேன் என்று மறுக்கிறாரா என்பதில் ஒரு தெளிவில்லாத தடு மாற்றம் ஏற்படுகிறதே, அது ஏன்?

ரசிகர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில், விநியோ கஸ்தர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இத்தனை அடிதடிகளா?! அதிலும், சத்துணவு சம்பந்தப்பட்ட ஒரு சண்டை எதற்கு என்பது இன்னமும் விளங்கவில்லை!

படத்தில் மிகவும் சூடான அந்த முருங்கைகாய் விவகாரத்தை கணவன்-மனைவி என்கிற அந்தரங்கப் போர்வைக்குள் கில்லாடித் தனமாக நுழைந்துவிட்டபடியால் விரசம் அமுங்கிப் போய்விடுகிறது. காட்சியும் ரசிக்கப்படுகிறது. இருந்தாலும், 'விருந்து' முடிந்துவிட்ட பின் படுக்கையில் கிடக்கும் பாக்யராஜின் ரீயாக்ஷன் ரொம்ப ஓவர்!

பாக்யராஜ் லட்டு மாதிரி கிராமத்து சப்ஜெக்டை எடுத்துக்கொண்டிருப்பதால், அசோக்குமார் காமிராவில் புகுந்து விளையாடுவார் என்று எதிர்பார்த்ததில், அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்!

 
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு
- விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம்: முந்தானை முடிச்சு