ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்


விகடன் பொக்கிஷம்
பிட்ஸ்
பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்

'''முற்பிறவியில் நாங் கள் யார், எப்படி இருந் தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?' என்று சிலர் கேட்கிறார்கள். போன ஜென்ம வரலாறு இருக் கட்டும்; இந்த ஜென்மத்தில் 'நான் யார்?' என்று தெரிந்து கொண்டாலே போதும். கடவுள் நம் மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம விவரங்களை மறைத்து வைத்திருக்கிறார். முன் ஜென்மத்தில் தான் ஒரு புண்ணியவானாக இருந்தோம் என்று தெரிந்தால், அவன் இப்போது கர்வம் அடைவான். பாவி என்று தெரிந்தால், 'ஐயோ! எப்படிக் கடைத்தேறுவேன்' என்று ஏக்கம் அடைந்து, உயர்வதற்கான முயற்சியை செய்யாமலே இருந்துவிடு வான். ஆகையால், போன ஜென்ம விவரமெல்லாம் தெரி யாமல் இருப்பதே நல்லது!''

- பகவான் ரமணர்

பிட்ஸ்
பிட்ஸ்

விருந்தளிப்பவர் முதலில் உண்டு முடிக்காது, விருந்தினர் சாப்பிட்டு முடிக் கும் வரை தாமும் உண்பது போன்று பாவனை செய்துகொண்டாவது இருப் பதே முறை. அவ்விதம் செய்தால்தான் விருந்தினர் நன்றாக உணவருந்துவர். அதற்கு மாறாக நாம் முதலில் உணவு அருந்திவிட்டுக் கையைக் கழுவிவிட்டால் அதன்பின் சாப்பிட்டுக்கொண்டிருக்க விருந்தினருக்கு நாணமாயிருக்கும். எனவே, விருந்தாளி பசி தீர உண்ணுது, அரைகுறை திருப்தியுடன் எழுந்திருக்கவேண்டி வரும்.

- இமாம் ஷாஃபி

பிட்ஸ்
பிட்ஸ்


யார் அந்த மாணவன்?

ந்த மாணவன் நல்ல திறமைசாலி. அவன் ஒரு நாடகம் எழுதித் தயாரித்தான். அது ஓர் உணர்ச்சிகரமான கதை. சோக முடிவு கொண்ட கதைகளை ரசிக்க மறுத்த அந்தக் காலத்தில், இந்த நாடகம் ஒரு புது முயற்சி! அம் மாணவன் அந்த நாடகத்தின் கதை, வசனகர்த்தா, டைரக்டர் மட்டுமல்ல; கதாநாயகனும்கூட!

கதைப்படி கதாநாயகன் இறக்கிறான். நாடகம் முடிகிறது. மேடையில் கதாநாயகன் இறந்து பல நிமி ஷங்கள் வரை திரை மூடப்படவில்லை. உடன் நடித்த மாணவர்கள் மேக்கப் கலைக்கும் மும்முரத்தில் இருந்தார்கள்.

'இறந்தவன்' இரண்டு மூன்று நிமிஷம் பொறுத்தான். அப்போதும் திரை விழவில்லை. அவனுக்கு ஆத்திரம் வந்தது. சட்டென்று எழுந்து, கீழே திரையை விடும்படி கடிந்து கொண்டான். திரை விழுந்தது. தாமதத்திற்குக் காரணம், திரைக்கயிற்றில் விழுந்த முடிச்சுகள்தான்!

இறந்த கதாநாயகன் உயிர் பெற்ற அதிசயம் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது!

நாடகம் நடந்த வருஷம் 1948. நாடகத்தின் பெயர்: 'உலகம் சிரிக்கிறது'. நடந்த இடம்: செங்கற்பட்டு.

அந்த மூன்றெழுத்து டைரக்டர் யார் என்று இத்தனை நேரம் நீங்கள் கண்டுபிடித்திருக்க வேண்டுமே!

- 'நந்தி'

விடை தெரியாதவர்கள் பார்க்க...

பிட்ஸ்


திருக்குறளில் எம்.ஜி.ஆர்!

பிட்ஸ்

1. லர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

2. மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு

3. காக்பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூஉங் கில்லை யுயிர்க்கு

4. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

5. ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு

6. நகல்வல் ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

7. உழுவார் உலத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து

8. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

- தர்மலிங்கம்

பிட்ஸ்

 

 
பிட்ஸ்
-
பிட்ஸ்