உண்மைதான்! விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த கிருஷ்ண தேவராயாரின் பல அமைச்சர்களில் ஒருவரான சளுவ நரசிங்க நாயகர் என்பவருக்குக்கூட பிரத்யேகமாக 30 ஆயிரம் காலாட்படை வீரர்களும், 3 ஆயிரம் குதிரை வீரர்களும், 30 யானை களும் கொண்ட ராணுவம் தரப்பட்டது (அமைச்சர்கள் மீது என்ன நம்பிக்கை!) என்றால், சக்ரவர்த்தியின் படை பலம்பற்றி புரிந்துகொள்ளலாம்!
கலிங்கத்துப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக அசோகரின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், அசோகரின் படை எவ்வளவு பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும். இப்போது 'ஆர்மி'யில் உள்ளது போல பண்டைய காலத்திலும் ராணுவத்தில் படைப் பிரிவுகள் - பட்டி, சேனாழகா, வாஹினி, அக்ஷாகினி என்றெல்லாம் உண்டு. 25 ஆயிரம் ரதங்கள், 70 ஆயிரம் குதிரை வீரர்கள், 20 ஆயிரம் யானை வீரர்கள், மற்றும் ஒண்ணே கால் லட்சம் காலாட்படை வீரர்கள் அடங்கியதுதான் ஒரு அக்ஷாகினி!
வட இந்திய மன்னர்களைவிட தமிழக மன்னர்கள் இன்னும் பெரும் படை வைத்திருந்த தாகச் சொல்லப்படுகிறது!
எம்.திலகவதி, சென்னை-28.
|