Published:Updated:

புது ஒளி வெள்ளம் பாய்ச்சிய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! | My Vikatan

புத்தகத் திருவிழா

புத்தகங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுவும் நிறைவு நாளில் கூட்த்தை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது நல்ல அறிவுசார் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக இருந்தது.

Published:Updated:

புது ஒளி வெள்ளம் பாய்ச்சிய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! | My Vikatan

புத்தகங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுவும் நிறைவு நாளில் கூட்த்தை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது நல்ல அறிவுசார் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக இருந்தது.

புத்தகத் திருவிழா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

புதுக்கோட்டையின் ஐந்தாவது புத்தகத் திருவிழா..! ஜூலை -29 இல் தொடங்கி ஆகஸ்ட்-7வரை பத்து நாள்கள். புதுகை மானிட குலத்தின் சத்தான தினங்கள்..! நேற்றுடன் (ஆகஸ்ட்-7) நெகிழ்வாய் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய அறிவுத் திருவிழா..! மிகப்பெரிய திட்டமிடலும்,சரியான வடிவமைப்பும் செய்யப்பட்ட அறிவுசார் திருவிழா. ஒரு பெருவிழாவை திருவிழாபோல் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு விழா..! புதுக்கோட்டை நகர் மன்றத்தின் புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலை ஒரு கோட்டை வடிவத்தில் அமைத்து அறிவுக்கோட்டைக்கு அழைப்பு விடுத்திருந்தனர். புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பேரணிகளும், பள்ளிகளில் விளக்கக் கூட்டங்களும் நடைபெற்றன.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடக்க நாள் முதல் நிறைவு நாள் மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.

10 நாள்களும் ஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிவரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை, கலைகளை,படைப்புகளை விழா மேடையில் அரங்கேற்றம் செய்து அவர்களாலும் முடியும் என்று நிரூபிக்க வைத்து அவர்களை உற்சாகப்படுத்தியது அருமை. அந்த மாணவச் செல்வங்களின் திறமைகளை எல்லாம் மெருகேற்றி அவர்களுக்கு தக்க பயிற்சியளித்து, அவர்களை கட்டுக்கோப்புடன் அழைத்து வந்து கூட்டிச் சென்ற அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

அதேபோல் பல்வேறு துறைகளின் முன்னணி ஆளுமைகளான ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும்பூநாதன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பன்மொழி திரைக் கலைஞர் ரோகிணி, தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயன் தலைமையிலான விவாத அரங்கம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன் தலைமையிலான கவியரங்கம்,கவிஞர் தங்கம் மூர்த்தில் தலைமையில் சுழலும் கவியரங்கம், வாணியம்பாடி பேராசிரியர் மு.பதுல்காதர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக மெய்யியல் துறைத்தலைவர் நல்லசிவம், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷூக்கு பாராட்டு விழா, நர்த்தகி நட்ராஜ் வழங்கிய நாட்டியம், மாநில திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன், முன்னாள் நீதியரசர் சந்துரு,தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத் ஆகியோரின் அறிவார்ந்த உரைகள் என இப்படி ஒவ்வொரு நாளும் நாளும் சிறப்புச் சொற்பொழிவுக்கும் பஞ்சமில்லை.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

அதேபோல் புதுக்கோட்டையின் சமூக அக்கறை உள்ளவர்களை, கல்வியாளர்களை, மருத்துவர்களை, தொழிலதிபர்களை இப்படி பன்மைத் தன்மை கொண்டவர்களை அழைத்து அவர்களை கவுரவப்படுத்தி, அவர்களை வாழ்த்துரை வழங்க வைத்து சிறப்புச் செய்தும் குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழகத்தின் நூற்றுக்கும் அதிகமான முன்னணி பதிப்பகங்கள் பலவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டன. தேடி வந்த புத்தக விரும்பிகளை பதிப்பாளர்கள் பக்குவமாய் விவரங்கள் கூறி விற்பனை செய்தமை பாராட்டுக்குரியது.

புதுக்கோட்டை மாவட்ட அரசு நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மக்கள் தொடர்பு அலுவலர், திட்ட இயக்குநர் இப்படி ஒரு பெரும்படையே இந்தப் புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு சுழன்று சுழன்று வேலை செய்தனர்.

நர்த்தகி நட்ராஜ்
நர்த்தகி நட்ராஜ்

கலைகளின் ஆர்வலரான புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு அவர்களின் தனிப்பட்ட அக்கறையும், புத்தகங்கள்மீது அவர் வைத்திருக்கும் பிரியமும், நாட்டியத்தின்மீது அவர் வைத்திருக்கும் நாட்டமும், எளிய மனிதர்களுடன் உறவாடும் அவரின் தோழமையும், எத்தனை பேர் வந்து கேட்டாலும் சளைக்காமல் செல்பி எடுக்க அனுமதி கொடுக்கும் அவரின் கனிவும் ,பெரும்பாலும் நேரடியாகவே வருகை புரிந்து குழுவினருக்கு உற்சாகமளித்தும் இப்படி அரசின் பிரதிநிதியாய் மட்டுமில்லாமல் புத்தகத் திருவிழாவின்மீது கொண்ட முழு மனப்பூர்வ ஈடுபாட்டுடன் அசத்தலான பணியைச் செய்தனர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் அவர் தலைமையிலான அரசு அதிகாரிகளும்.

அடுத்து இந்தப் புத்தகத் திருவிழாவை சிறக்க வைத்த ஓய்வில்லா உழைப்பைத் தந்த வெற்றிக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்த்தின் டதமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள்தான். அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முதல் தன்னார்வலர்கள்வரை அவர்கள் உட்காரமால் கடந்த மூன்று மாதங்களாக ஓடியாடி செய்த பணி எதனுடனும் ஒப்பீடு செய்ய முடியாதது. நம்முடைய சொந்த இல்ல விழாக்களை ஒரு நாள் நடத்துவதற்கே நாம் சலித்துப்போகிறோம். ஆனால் பத்து நாள் திருவிழா. அதுவும் பல லட்சக் கணக்கிலான கூட்டம். அதற்கு பல மாத உழைப்பு. இதை எல்லாம் எவ்வித சுய ஆதாயமும் இல்லாமல் வியர்வை சிந்தச் சிந்த உழைத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் வணக்கத்திற்குரியவர்கள்.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு அணி. சரியான திட்டமிடல் வெற்றியைத் தரும் என்பதற்கு சாட்சியாய் இருப்பவர்கள் நம் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர். புத்தகத்திருவிழாவுக்குள் உள்ளே வருபவர்களை வரவேற்க, வாகனங்களை வரிசைப்படுத்த, அரங்குகளுக்கு செல்பவர்களை ஒழுங்குபடுத்த, கலை ஆர்வமுடன் மேடையேற வந்த மாணவச் செல்வங்களை மகிழ்ச்சியுடன் அழைத்து அவர்களை பாராட்டிப் பரிசளிக்க, நிகழ்வின் பார்வையாளர்கள் அமர்வதற்கு இருக்கை ஏற்பாடு செய்ய, விருந்தினர்களை கவுரவித்து, பரிசளிக்க அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகள் அபாரம். சொல்லப்போனால் இந்தப் புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு காரணமானவர்கள் - உழைப்பை சிறிதும் சலிப்பில்லாமல் செய்த நம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்.

இதற்காக உழைத்த அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் காலக்கல்வெட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கும். சிலரின் பெயர்கள் விட்டுப்போகலாம் என்பதால்தான் நான் எவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. இங்கு வாங்கிய புத்தகம் ஒவ்வொன்றையும் புரட்டும்போதும் தமிழக அறிவியல் இயக்கத்தினரின் முகங்கள் நிச்சயம் நிழலாடும். நல்ல அணியை கட்டமைத்து தனது சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உடல் நலம்கூட பேணாமல், ஊர் ஊராக இந்தப் புத்தகத் திருவிழா போஸ்டர்களை அள்ளிக்கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து ஓரு பெரும் மக்கள் திரளை கொண்டுவரக் காரணமான களப்பணி ஆற்றி- புத்தகத் திருவிழா வெற்றிக்கு வித்திட்ட தமிழ்நாடு இயக்கத்தினரை புதுகை மக்களில் ஒருவனாய்-புத்தகங்களின் காதலனாய் எப்போதும் பாராட்டுவோம்.

அதேபோல் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது. தினசரி நாளிதழ்களின் வழக்கமான ‘டெட் லைன்’ நேரம் முடிந்துபோனாலும்கூட நம் புத்தகத் திருவிழாவின் முக்கியப் பேச்சாளர்களின் உரையை அன்றே செய்தியாக்கி மறுநாள் காலையிலேயே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிதீவிர முனைப்புக்காட்டிய நம் புதுக்கோட்டை நாளிதழ் செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா என்ற பெயரில் முகநூல் பக்கம் உருவாக்கி ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனே வீடியோ பதிவேற்றம் செய்தமையும், ஒவ்வொரு நாள் நிகழ்வின் போஸ்டரையும் வாட்ஸப்பில் நிலைத் தகவலாய் வைத்து அதிக எண்ணிக்கை கொண்ட பார்வையாளர்களைப் பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தும், சில முகநூல் பதிவர்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்தும், அந்தந்த நாள் நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்களை நள்ளிரவு கடந்தும் சில புத்தக ஆர்வலர்கள் மறக்காமல் பதிவேற்றம் செய்தும்..இப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைத்த இனிய ஒத்துழைப்பால் புத்தகத்திருவிழா கடந்த 10 நாள்களில் 3 லட்சம் பார்வையாளர்களையும் ரூ.இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தக விற்பனையையும் செய்து வெற்றியைத் தொட்டிருக்கிறது. புத்தகங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுவும் நிறைவு நாளில் கூட்த்தை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது நல்ல அறிவுசார் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக இருந்தது.

இனி அடுத்தாண்டின் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு காத்திருப்போம்..அதுவரை கவிஞர் ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்தைப்போல வாங்கிய புத்தகங்களை அனைவரையும் படிக்க வைக்கும் பெரும் பணியைச் செய்வோம்..!

வாசித்தால் மட்டுமே புத்தகங்கள் ஆயுதம்…! இல்லையேல் அவை வெறும் காகிதம்…!!


-பழ.அசோக்குமார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.