<p><strong> ``போ</strong>ர் எத்தனை மணிக்கு முடியும் பிரபோ..?’’ </p><p>``ஏன் கேட்கிறாய் மகாராணி..?’’ </p><p> ``ஃபேஸ்புக்கில் `RIP' போடத்தான்..’’</p><p>-<em> பர்வீன் யூனுஸ்</em></p>.<p>``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை ஆட்சிக்கு வந்தபிறகு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாகவே வாக்குறுதி கொடுத்து உங்களை பயம்காட்ட விரும்பவில்லை!’’</p><p><em>- அஜித்</em></p>.<p>“இந்த வருஷம் பட்டாசுல எத்தனை வகை புதுசா வந்திருக்குங்க?”</p><p>“எதுக்கு சார் கேட்கறீங்க... பெரிய ஆர்டர் ஏதாவது எங்களுக்குக் கொடுக்கப் போறீங்களா?”</p><p>“ஊஹும். பத்திரிகைக்கு தீபாவளி ஜோக்ஸ் எழுதத்தான் கேட்டேன்!”</p><p><em>- மலர்சூர்யா</em></p>.<p>``எண்பது பேரோட கூட்டு முயற்சின்னு, உங்க டைரக்டர் புதுப்படத்துக்கு விளம்பரம் கொடுத்திருக்காரே... எண்பது தயாரிப்பாளர்களா?’’</p><p>``ஒவ்வொரு படத்திலும் ஒரு சீன்னு எண்பது படத்தில காப்பி அடிச்சதுங்க!’’</p><p><em>- ஜி.ஆர்.ராஜேந்திரன்</em></p>.<p>``மன்னா, நமது வாளுக்கு வேலை வந்துவிட்டது!’’</p><p>``ஐயய்யோ, மறுபடியும் போரா?!’’</p><p>``சாணை பிடிப்பவர் வந்திருக்கிறார். பதறாமல் வாளைக் கொடுங்கள்!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>.<p>``மன்னர் குதிரையை மாற்றுகிறாரே... ஏன்?’’</p><p>``போர் என்றதும் குதிரை பதுங்கு குழிக்குச் செல்லாமல் போர்க்களத்துக்குப் போயிடுச்சாம்!’’</p><p><em>- எஸ்.முகம்மது யூசுப்</em></p>.<p>`` `இந்த மனைப்பிரிவில் 100% மழை நீர் சேகரிப்பு உள்ளது'னு விளம்பரம் செஞ்சிருக்கீங்களே, உண்மையா?!’’</p><p>``பின்னே, மழை நீர் சேரும் இடத்தில்தானே மனைப்பிரிவே இருக்கு!’’</p><p><em>- கி.ரவிக்குமார்</em></p>.<p>தயாரிப்பாளர்: ஓடிடியில் வெளியான நம்ம படத்தை, தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு எந்த மாதிரி புரொமோ ரெடி பண்ணி வெச்சிருக்கீங்க?</p><p>இயக்குநர்: ஓடிடியில்கூட ஓடாத திரைப்படம்னுதான்.</p><p>-<em> பெ.பாலசுப்ரமணி</em></p>.<p>``நான் பினாமிகளின் பேரில் சொத்து சேர்த்து வைத்திருப்பதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!’’</p><p>``தலைவருக்கு என்ன ஆச்சு?’’</p><p>``சில பினாமிங்க ஓவரா லந்து பண்ணுறாங்களாம்!’’</p><p><em>- அஜித்</em></p>.<p>``என்னது, நகர்வலம் போன மன்னரை அடையாளம் தெரியாமல் தாக்கிவிட்டார்களா?!’’</p><p>``அடையாளம் தெரியாததால்தான் தாக்கியதோடு விட்டார்கள்!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>.<p>``தலைவர் வீட்டில் நடந்த ரெய்டில் 50 லட்சம் ரூபாய் சிக்கியதுக்கு தலைவர் நன்றி சொன்னாராமே?’’</p><p>``ஆமாம், எங்கே வெச்சோம்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தாராம்!’’</p><p><em>- கி.ரவிக்குமார்</em></p>.<p>``என்னய்யா, ஆன்லைன் மீட்டிங்ல ஒரு அம்மா குச்சியைக்காட்டி மிரட்டுது?!’’</p><p>``லிங்க்கை மாத்தி உங்க பையனோட ஆன்லைன் கிளாஸ் லிங்க்ல போயிருக்கீங்க தலைவரே!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>
<p><strong> ``போ</strong>ர் எத்தனை மணிக்கு முடியும் பிரபோ..?’’ </p><p>``ஏன் கேட்கிறாய் மகாராணி..?’’ </p><p> ``ஃபேஸ்புக்கில் `RIP' போடத்தான்..’’</p><p>-<em> பர்வீன் யூனுஸ்</em></p>.<p>``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை ஆட்சிக்கு வந்தபிறகு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாகவே வாக்குறுதி கொடுத்து உங்களை பயம்காட்ட விரும்பவில்லை!’’</p><p><em>- அஜித்</em></p>.<p>“இந்த வருஷம் பட்டாசுல எத்தனை வகை புதுசா வந்திருக்குங்க?”</p><p>“எதுக்கு சார் கேட்கறீங்க... பெரிய ஆர்டர் ஏதாவது எங்களுக்குக் கொடுக்கப் போறீங்களா?”</p><p>“ஊஹும். பத்திரிகைக்கு தீபாவளி ஜோக்ஸ் எழுதத்தான் கேட்டேன்!”</p><p><em>- மலர்சூர்யா</em></p>.<p>``எண்பது பேரோட கூட்டு முயற்சின்னு, உங்க டைரக்டர் புதுப்படத்துக்கு விளம்பரம் கொடுத்திருக்காரே... எண்பது தயாரிப்பாளர்களா?’’</p><p>``ஒவ்வொரு படத்திலும் ஒரு சீன்னு எண்பது படத்தில காப்பி அடிச்சதுங்க!’’</p><p><em>- ஜி.ஆர்.ராஜேந்திரன்</em></p>.<p>``மன்னா, நமது வாளுக்கு வேலை வந்துவிட்டது!’’</p><p>``ஐயய்யோ, மறுபடியும் போரா?!’’</p><p>``சாணை பிடிப்பவர் வந்திருக்கிறார். பதறாமல் வாளைக் கொடுங்கள்!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>.<p>``மன்னர் குதிரையை மாற்றுகிறாரே... ஏன்?’’</p><p>``போர் என்றதும் குதிரை பதுங்கு குழிக்குச் செல்லாமல் போர்க்களத்துக்குப் போயிடுச்சாம்!’’</p><p><em>- எஸ்.முகம்மது யூசுப்</em></p>.<p>`` `இந்த மனைப்பிரிவில் 100% மழை நீர் சேகரிப்பு உள்ளது'னு விளம்பரம் செஞ்சிருக்கீங்களே, உண்மையா?!’’</p><p>``பின்னே, மழை நீர் சேரும் இடத்தில்தானே மனைப்பிரிவே இருக்கு!’’</p><p><em>- கி.ரவிக்குமார்</em></p>.<p>தயாரிப்பாளர்: ஓடிடியில் வெளியான நம்ம படத்தை, தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு எந்த மாதிரி புரொமோ ரெடி பண்ணி வெச்சிருக்கீங்க?</p><p>இயக்குநர்: ஓடிடியில்கூட ஓடாத திரைப்படம்னுதான்.</p><p>-<em> பெ.பாலசுப்ரமணி</em></p>.<p>``நான் பினாமிகளின் பேரில் சொத்து சேர்த்து வைத்திருப்பதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!’’</p><p>``தலைவருக்கு என்ன ஆச்சு?’’</p><p>``சில பினாமிங்க ஓவரா லந்து பண்ணுறாங்களாம்!’’</p><p><em>- அஜித்</em></p>.<p>``என்னது, நகர்வலம் போன மன்னரை அடையாளம் தெரியாமல் தாக்கிவிட்டார்களா?!’’</p><p>``அடையாளம் தெரியாததால்தான் தாக்கியதோடு விட்டார்கள்!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>.<p>``தலைவர் வீட்டில் நடந்த ரெய்டில் 50 லட்சம் ரூபாய் சிக்கியதுக்கு தலைவர் நன்றி சொன்னாராமே?’’</p><p>``ஆமாம், எங்கே வெச்சோம்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தாராம்!’’</p><p><em>- கி.ரவிக்குமார்</em></p>.<p>``என்னய்யா, ஆன்லைன் மீட்டிங்ல ஒரு அம்மா குச்சியைக்காட்டி மிரட்டுது?!’’</p><p>``லிங்க்கை மாத்தி உங்க பையனோட ஆன்லைன் கிளாஸ் லிங்க்ல போயிருக்கீங்க தலைவரே!’’</p><p><em>- திருப்பூர் சாரதி</em></p>