<p><strong>உ</strong>ன் கருணையின்</p><p>துளிச் சொல்லும் விழாத</p><p>வறண்ட அகத்துடன்</p><p>இந்தக் கடும்பாலையை</p><p>கடக்க முடியுமா எனத்</p><p>தெரியவில்லை</p><p>நெகிழ் நிலமாய்</p><p>விளைந்த உன் நெஞ்சை</p><p>கல்லாக்கிய</p><p>எம் உயிர் நேசம்</p><p>எரிந்தெரிந்து எரிக்கட்டும்</p><p>என்னை மட்டும்.</p>.<p>எத்தனைமுறை </p><p>விரட்டித் துரத்திவிட்டாலும்</p><p>போக முடியாமல் மருகி நின்று</p><p>நிரூபிக்க முடியாத</p><p>மெய்யுணர்வாக</p><p>நின்று தவிக்கும்</p><p>எனது ஆன்மாவின்</p><p>பேராவல்</p><p>எப்படியேனும்</p><p>ஒரு பறவையாகி</p><p>உன் வீட்டோர மரக்கிளையில்</p><p>அமர்ந்து</p><p>உன்னைப் பார்த்துப் பார்த்து</p><p>பாடிக்கொண்டே இருக்கவேண்டும்</p><p>என்பதன்றி வேறொன்றுமில்லை.</p>
<p><strong>உ</strong>ன் கருணையின்</p><p>துளிச் சொல்லும் விழாத</p><p>வறண்ட அகத்துடன்</p><p>இந்தக் கடும்பாலையை</p><p>கடக்க முடியுமா எனத்</p><p>தெரியவில்லை</p><p>நெகிழ் நிலமாய்</p><p>விளைந்த உன் நெஞ்சை</p><p>கல்லாக்கிய</p><p>எம் உயிர் நேசம்</p><p>எரிந்தெரிந்து எரிக்கட்டும்</p><p>என்னை மட்டும்.</p>.<p>எத்தனைமுறை </p><p>விரட்டித் துரத்திவிட்டாலும்</p><p>போக முடியாமல் மருகி நின்று</p><p>நிரூபிக்க முடியாத</p><p>மெய்யுணர்வாக</p><p>நின்று தவிக்கும்</p><p>எனது ஆன்மாவின்</p><p>பேராவல்</p><p>எப்படியேனும்</p><p>ஒரு பறவையாகி</p><p>உன் வீட்டோர மரக்கிளையில்</p><p>அமர்ந்து</p><p>உன்னைப் பார்த்துப் பார்த்து</p><p>பாடிக்கொண்டே இருக்கவேண்டும்</p><p>என்பதன்றி வேறொன்றுமில்லை.</p>