
டைமிங் சென்ஸ்!
சொல்வனம் பகுதியில் ‘முகவரியின் கதை’ கவிதை அருமையாக இருந்தது. மற்றவையும் நச்.
- மீ.யூசுப் ஜாகிர் வந்தவாசி
‘வைரமுத்து 40’ என்பதை உங்களின் ஆஸ்தான கவிஞரே `இனியவை நாற்பது’ என்று கூறிய பிறகு நாங்கள் வேறு என்ன சொல்ல!
- வெ.லட்சுமி நாராயணன் வடலூர்
தேர்தலில் நடக்கும் `கொடுக்கல் வாங்கல்’களை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது `தாலி மேல சத்தியம்’ கதை!
- டி.அம்புஜவள்ளி Vikatan.com
என்னவொரு டைமிங் சென்ஸு... அப்படிப் போடு அரிவாளை என்பது கணக்காக இருக்கிறது அஞ்சிறைத்தும்பியில் வந்திருக்கும் `அன்புள்ள ரஜினிகணேஷ்’ கதை.
- Vijay Balu VIkatan.com

ஜாஸ்மின் கட்டுரை அருமை. நம் சமூகத்தின் மோசமான தளைகளை உடைத்தெறிந்த ஜாஸ்மினைப் போன்றவர்களை முன்மாதிரியாக எடுத்துகொள்ள வேண்டும்.
- neon Logic Vikatan.com
இறையுதிர் காடு வாரம் வாரம் க்ளைமேக்ஸ் போல் இருக்கிறது. எப்போது முடியும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது.
- கார்த்திகேயன் பழனி.