சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஆட்டுத் தொகை

ஆட்டுத் தொகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டுத் தொகை

கவிதை

ச்சிலை வாசமுள்ள

ஆடுகளின் காற்குளம்பை

முகருங்கால்

வானவில்லை உழப்பி வந்த

நிறங்களின் மிச்சம் இருந்தன

குளத்தலையாய்ப் பாய்ந்து

எனை நோக்கி

என் மந்தையாடு வருகையில்

ஊற்றுச் சொட்டுகள்

உடம்பிற் கண்டேன்

கவிதை
கவிதை

காற்றில் ஆய்கின்றன

கட்டமண்ணில் ஆய்கின்றன

வட்டவளையமிடுகின்றன வானில்

வீண்மீனைப் பிணையல் அடிக்கின்றன

மேக வரிசையில் ஊர்கின்றன

என் விசிற் சத்தம் கேட்டு

சப்பாத்திக் கள்ளியை

ஒரே தவ்வாய்த் தவ்வி வருகின்றன

என் உள்ளங்கையை உதறினால்

ஒரு குத்து செம்மறிகள் பிறந்துவிடும்

ஒரு குத்து வெள்ளாடுகள் உதிர்ந்து வரும்

நான் மந்திரவாதியில்லை

ஆட்டு வீச்சமுள்ள ஆளேதான்

எனக்கு இரண்டு பிள்ளைகள்

மகள் ஒரு மயிலம்பாரிக் குட்டி

மகன் ஒரு போர்ப் புருவை

எத்தனை ஆடுகள்

என் மந்தையில் உள்ளனவோ

அத்தனை எழுத்துகள்

என்னிடம் உள்ளன

அத்தனை கவிதைகள்

என்னிடமுள்ளன

அத்தனை பாட்டுகள்

என்னிடமுள்ளன

அத்தனை கதைகள்

என்னிடமுள்ளன

இனி என்னை

வழிமறிக்க முடியாது...

தொரட்டிக்கம்போடு

நான் பட்டி திறக்கிற நேரம் இது.