கட்டுரைகள்
Published:Updated:

எண்களால் ஆனவள்... கவிதை

எண்களால் ஆனவள்... கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
எண்களால் ஆனவள்... கவிதை

ஒரு வாகன எண்ணைச் சரிபார்த்தபடி தண்ணீர் குடிக்கிறாள் அவள் உண்ணுவதும்கூட

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்

வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள்

எங்கேயோ பார்த்த நினைவில்

பெயரை விசாரித்தேன்

TN 09 VA 5437 என்று

கண்சுருக்கி

நாக்கைக் கடித்துக்கொள்கிறாள்

கீழே விழுந்த

கைக்குட்டையை எடுத்து உதறுகிறாள்

அதிலிருந்தும் உதிர்கின்றன

சில வாகன எண்கள்

தனக்கு முன்னால் கணினித்திரையில்

ஒரு வாகன எண்ணைச் சரிபார்த்தபடி

தண்ணீர் குடிக்கிறாள்

அவள் உண்ணுவதும்கூட

எண்ணும் எழுத்தும்தான்போல

எண்களால் ஆனவள்... கவிதை
எண்களால் ஆனவள்... கவிதை

மார்பில் பச்சைகுத்தப்பட்ட எண்களை

அழிக்க நினைத்தபோது

ரத்தம் கசிய

கனவுகளிலிருந்து

அவள் திடுக்கிட்டு எழுந்த இரவுகள்

அச்சமூட்டுபவை

நின்று நின்று நகர்வது

அவளா வாகனமா

தெரியாத ஒரு தோற்றப்பிழை

எரியும் சிவப்புவிளக்குக்கும்

பச்சைவிளக்குக்கும் இடையில்

எல்லாமும் தற்செயலாக நடக்கிறது

பணிநேரம் முடிந்து

அவள் கூண்டுக்குள்ளிருந்து

வெளிவருகிறாள்

இன்னும் பதியப்படாத

ஒரு எண் பலகையாக.