<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். </p><p><em><strong>- ஆசிரியர்</strong></em></p>.<p><strong>நம்மாழ்வார் நினைவேந்தல்! </strong></p><p><em><strong>100 கி.மீ வாகனப் பேரணி!</strong></em></p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக டிசம்பர் 30-ம் தேதி, ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 6-ம் ஆண்டு நினைவேந்தல் படத்திறப்பும், 100 கி.மீ வாகனப் பயணமும் நடைபெற உள்ளன. </p><p>பயணம், தாமல் அருகிலுள்ள `வையகம்’ இயற்கைப் பண்ணையில் (கிளையாறு) தொடங்கி கடும்பாடியிலுள்ள தமிழ்நிலம் தமிழ்ப் பண்ணையில் முடிவடைய இருக்கிறது. சிறப்பு விருந்தினராக நடிகர் பொன்வண்ணன், சித்த மருத்துவர் திருதணிகாச்சலம் கலந்துகொள்கின்றனர். </p>.<p>செயற்பாட்டாளர் காஞ்சி அமுதன், முன்னோடி விவசாயிகள் இறையழகன், பேரின்பன், ‘எழில்சோலை’ மாசிலாமணி போன்றவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் இயற்கை உழவர்கள் பண்ணைகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 94452 69610, 94436 38545.</em></p><p><em><strong>பாரம்பர்ய விதைகள்</strong></em></p><p>விழுப்புரம் மாவட்டம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30-ம் தேதி பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் நினைவு தினம், `பாரம்பர்ய விதை தினமா’கக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் 1,000 விவசாயிகளுக்கு பீர்க்கன், கீரை, கத்திரி தக்காளி, பாகல், புடலை ஆகிய பாரம்பர்ய விதைகள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு முக்கியம். </p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 78118 97510, 97903 27890.</em></p><p><strong>இலவசப் பயிற்சி</strong></p><p><em><strong>பாரம்பர்ய திருவிழா</strong></em></p><p>காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன் சார்பில் சென்னை, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் ‘பாரம்பர்ய திருவிழா’ நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பாரம்பர்ய விதைகள், மூலிகைகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன. </p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 90430 21069.</em></p>.<p><strong>கட்டணப் பயிற்சிகள்</strong></p><p><em><strong>பூச்சிவிரட்டி தயாரிப்பு</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’; ஜனவரி 4-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’; 25-ம் தேதி ‘அசோலா தயாரிப்பு மற்றும் சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</em></p><p><strong>மதிப்புக்கூட்டல்</strong></p><p>சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 2-ம் தேதி ‘நிலக்கடலைச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 3-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் கோடைக்கால மேலாண்மை நுட்பங்கள்’, 8-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 10-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>மேலும், ஜனவரி 6-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 7-ம் தேதி ‘நெல்லில் மதிப்புக்கூட்டல்’ 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</em></p><p><strong>மூலிகை முற்றம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது.</p><p>மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.</p><p><em><strong>தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.</strong></em></p>.<p><strong>அறிவிப்பு</strong></p><p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>
<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். </p><p><em><strong>- ஆசிரியர்</strong></em></p>.<p><strong>நம்மாழ்வார் நினைவேந்தல்! </strong></p><p><em><strong>100 கி.மீ வாகனப் பேரணி!</strong></em></p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் நம்மாழ்வார் நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக டிசம்பர் 30-ம் தேதி, ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் 6-ம் ஆண்டு நினைவேந்தல் படத்திறப்பும், 100 கி.மீ வாகனப் பயணமும் நடைபெற உள்ளன. </p><p>பயணம், தாமல் அருகிலுள்ள `வையகம்’ இயற்கைப் பண்ணையில் (கிளையாறு) தொடங்கி கடும்பாடியிலுள்ள தமிழ்நிலம் தமிழ்ப் பண்ணையில் முடிவடைய இருக்கிறது. சிறப்பு விருந்தினராக நடிகர் பொன்வண்ணன், சித்த மருத்துவர் திருதணிகாச்சலம் கலந்துகொள்கின்றனர். </p>.<p>செயற்பாட்டாளர் காஞ்சி அமுதன், முன்னோடி விவசாயிகள் இறையழகன், பேரின்பன், ‘எழில்சோலை’ மாசிலாமணி போன்றவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் இயற்கை உழவர்கள் பண்ணைகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 94452 69610, 94436 38545.</em></p><p><em><strong>பாரம்பர்ய விதைகள்</strong></em></p><p>விழுப்புரம் மாவட்டம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30-ம் தேதி பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பாக ‘இயற்கை விவசாயப் போராளி’ நம்மாழ்வாரின் நினைவு தினம், `பாரம்பர்ய விதை தினமா’கக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் 1,000 விவசாயிகளுக்கு பீர்க்கன், கீரை, கத்திரி தக்காளி, பாகல், புடலை ஆகிய பாரம்பர்ய விதைகள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு முக்கியம். </p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 78118 97510, 97903 27890.</em></p><p><strong>இலவசப் பயிற்சி</strong></p><p><em><strong>பாரம்பர்ய திருவிழா</strong></em></p><p>காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன் சார்பில் சென்னை, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் ‘பாரம்பர்ய திருவிழா’ நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பாரம்பர்ய விதைகள், மூலிகைகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன. </p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 90430 21069.</em></p>.<p><strong>கட்டணப் பயிற்சிகள்</strong></p><p><em><strong>பூச்சிவிரட்டி தயாரிப்பு</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’; ஜனவரி 4-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’; 25-ம் தேதி ‘அசோலா தயாரிப்பு மற்றும் சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</em></p><p><strong>மதிப்புக்கூட்டல்</strong></p><p>சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 2-ம் தேதி ‘நிலக்கடலைச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 3-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் கோடைக்கால மேலாண்மை நுட்பங்கள்’, 8-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 10-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p>.<p>மேலும், ஜனவரி 6-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 7-ம் தேதி ‘நெல்லில் மதிப்புக்கூட்டல்’ 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</em></p><p><strong>மூலிகை முற்றம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது.</p><p>மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.</p><p><em><strong>தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.</strong></em></p>.<p><strong>அறிவிப்பு</strong></p><p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>