<blockquote><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின் பயண ஏற்பாடுகளைச் செய்யவும். - ஆசிரியர்</blockquote>.<div><div class="bigfact-title">கட்டணப் பயிற்சிகள்</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>சமையல் எரிவாயு</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</em></p><p><strong>காளான் வளர்ப்பு</strong></p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</em></p><p><strong>இயற்கை உரம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 78450 70500 / 97888 56276.</em></p>.<p><strong>மீன் வளர்ப்பு</strong></p><p>சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச் 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</em></p><p><strong>மூலிகை முற்றம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.</p><p>மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.</em></p><p><strong>ஒருங்கிணைந்த பண்ணை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் - கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. </p><p>முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.</p><p><em>தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.</em></p>.<div><div class="bigfact-title">இலவசப் பயிற்சிகள்</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>மரம் வளர்ப்போர் விழா!</strong></p><p>கோயம்புத்தூர், ஆர்.எஸ் புரத்தில் உள்ள மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மார்ச், 10, 11 தேதிகளில் ‘மரம் வளர்ப்போர் விழா’ நடைபெற உள்ளது. இந்த விழாவில் மரச்சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன் 94871 69036.</em></p><p><strong>கறவை மாடு வளர்ப்பு</strong></p><p>சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.</em></p>.<div><div class="bigfact-title">அறிவிப்பு</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>
<blockquote><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின் பயண ஏற்பாடுகளைச் செய்யவும். - ஆசிரியர்</blockquote>.<div><div class="bigfact-title">கட்டணப் பயிற்சிகள்</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>சமையல் எரிவாயு</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.</em></p><p><strong>காளான் வளர்ப்பு</strong></p><p>ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.</em></p><p><strong>இயற்கை உரம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 78450 70500 / 97888 56276.</em></p>.<p><strong>மீன் வளர்ப்பு</strong></p><p>சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச் 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.</p><p><em>தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.</em></p><p><strong>மூலிகை முற்றம்</strong></p><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.</p><p>மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.</em></p><p><strong>ஒருங்கிணைந்த பண்ணை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் - கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. </p><p>முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.</p><p><em>தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.</em></p>.<div><div class="bigfact-title">இலவசப் பயிற்சிகள்</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>மரம் வளர்ப்போர் விழா!</strong></p><p>கோயம்புத்தூர், ஆர்.எஸ் புரத்தில் உள்ள மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மார்ச், 10, 11 தேதிகளில் ‘மரம் வளர்ப்போர் விழா’ நடைபெற உள்ளது. இந்த விழாவில் மரச்சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன் 94871 69036.</em></p><p><strong>கறவை மாடு வளர்ப்பு</strong></p><p>சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.</p><p><em>தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.</em></p>.<div><div class="bigfact-title">அறிவிப்பு</div><div class="bigfact-description"></div></div>.<p><strong>‘த</strong>ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.</p>