<blockquote><strong>இ</strong>ந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்குமேல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறைகளை செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளது.</blockquote>.<p>இதற்கு முன்னரே, 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.10,000-க்குமேல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் தங்களது மொபைலுக்கு வரும் ஓ.டி.பி எண்ணையும் பதிவிட்ட பின்னரே பணத்தைப் பெற முடியும். ஆனால், இந்த வசதியானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே இருந்தது. தற்போது இதை மாற்றி 24 மணி நேரமாக உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. இதனால் வாடிக்கையாளர்கள் வாரத்தின் எல்லா நாள்களிலும், எல்லா நேரங்களிலும் ரூ.10,000-க்குமேல் பணம் பெற டெபிட் கார்டு பின்னுடன் (PIN) மொபைலுக்கு வரும் ஓ.டி.பி-யையும் வழங்க வேண்டும்.</p>.<p>இந்த வசதியை இனி நாள் முழுவதும் பயன்படுத்தும்படி மாற்றியிருப்பதால், டெபிட் கார்டு பயனாளர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து தப்பிக்கலாம். மேலும், பயனாளருக்குத் தெரியாமல் பணம் எடுத்தல், போலியான கார்டைத் தயாரித்து பயன்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த விதிமுறையைக் கையாளுவதன் மூலம் தடுக்க முடியும். </p>.<p>`நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச்’ (National Financial Switch) என்பது ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தைப் பிற வங்கி ஏ.டி.ஏம்-களுடன் இணைக்கும் நெட்வொர்க் ஆகும். பிற வங்கிகளின் ஏ.டி.எம்களுக்கு நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச் வசதி இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதால், தற்போதைய நிலையில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது!</p>
<blockquote><strong>இ</strong>ந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்குமேல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறைகளை செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளது.</blockquote>.<p>இதற்கு முன்னரே, 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.10,000-க்குமேல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் தங்களது மொபைலுக்கு வரும் ஓ.டி.பி எண்ணையும் பதிவிட்ட பின்னரே பணத்தைப் பெற முடியும். ஆனால், இந்த வசதியானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே இருந்தது. தற்போது இதை மாற்றி 24 மணி நேரமாக உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. இதனால் வாடிக்கையாளர்கள் வாரத்தின் எல்லா நாள்களிலும், எல்லா நேரங்களிலும் ரூ.10,000-க்குமேல் பணம் பெற டெபிட் கார்டு பின்னுடன் (PIN) மொபைலுக்கு வரும் ஓ.டி.பி-யையும் வழங்க வேண்டும்.</p>.<p>இந்த வசதியை இனி நாள் முழுவதும் பயன்படுத்தும்படி மாற்றியிருப்பதால், டெபிட் கார்டு பயனாளர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து தப்பிக்கலாம். மேலும், பயனாளருக்குத் தெரியாமல் பணம் எடுத்தல், போலியான கார்டைத் தயாரித்து பயன்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த விதிமுறையைக் கையாளுவதன் மூலம் தடுக்க முடியும். </p>.<p>`நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச்’ (National Financial Switch) என்பது ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தைப் பிற வங்கி ஏ.டி.ஏம்-களுடன் இணைக்கும் நெட்வொர்க் ஆகும். பிற வங்கிகளின் ஏ.டி.எம்களுக்கு நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச் வசதி இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதால், தற்போதைய நிலையில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது!</p>