<p><strong>ம</strong>த்திய அரசின் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ 4.2.2020 அன்று அறிவித்திருக்கிறது. பெரும்பாலான டெபாசிட்தாரர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது இந்த அறிவிப்பு.</p>.<p><strong>டெபாசிட் இன்ஷூரன்ஸ் கடந்துவந்த பாதை!</strong></p><p>உள்நாட்டுச் சேமிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும் வங்கி டெபாசிட்டுகள் அவசியம் தேவை. மேலும், பொருளாதாரரீதியில் ஒரு நாட்டின் மீதான நம்பிக்கை பெரும்பாலும் அந்த நாட்டிலுள்ள வங்கிகளின் செயல்பாடுகளை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஒரு வங்கி திவாலானால், வங்கித்துறையின் மீதான நம்பிக்கை பெருமளவுக்குச் சரிந்துபோவதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. </p><p>கடந்த 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலுள்ள பல வங்கிகள் திவாலாவது அன்றாட நிகழ்வாகிப்போயிருந்தன. அதனால், டெபாசிட் இன்ஷூரன்ஸுக்கான உடனடித் தேவையை உணர்ந்த அப்போதைய அரசாங்கங்கள் டெபாசிட் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நிறுவத் தொடங்கின. இன்றைய தேதியில் உலகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வங்கி டெபாசிட்டுகளுக்கு காப்பீடு உள்ளது.</p>.<p><strong>முதல் டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்!</strong></p><p>இந்தியாவைப் பொறுத்தவரை முதன்முறையாக டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், வைப்புத் தொகை காப்பீட்டு சட்டத்தின் (1961) அடிப்படையில் 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. `உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு’ என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.</p>.<p>தொடக்கத்தில் வணிக வங்கிகளுக்கு மட்டுமே சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்த நிலையில், 1968-ம் ஆண்டு குறிப்பிட்ட சில கூட்டுறவு வங்கிகளுக்கும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டம் விஸ்தரிக்கப்பட்டது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களுக்கு டெபாசிட் இன்ஷூரன்ஸ் கிடையாது. </p><p>காப்பீட்டுக்கான பிரீமியத்தை வங்கிகள் டெபாசிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். </p>.<p><strong>வங்கி திவாலானால் எவ்வளவு பணம் கிடைக்கும்?</strong></p><p>ஒரு வங்கி திவாலானால், அதன் வாடிக்கையாளருக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம். இது ஒருவரின் வங்கி இருப்பிலுள்ள டெபாசிட், அதற்கான வட்டி ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கான உச்ச வரம்பு. ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், அவற்றில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் வங்கி திவாலாகும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே அவருக்குத் திரும்ப வழங்கப்படும். (பார்க்க அட்டவணை)</p><p>ஒருவர், ஒரே வங்கியின் பல கிளைகளில் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு தனிநபருக்கான காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக மட்டுமே இருக்கும். அதே சமயம், வெவ்வேறு வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் தனித்தனியாக இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.</p>.<p><strong>வெளிநாடுகளில் டெபாசிட் காப்பீடு எவ்வளவு? </strong></p><p>மூத்த குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் அமெரிக்காவில் 2,50,000 டாலர் (சுமார் ரூ.1,82,00,000) அளவுக்கு டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 85,000 பவுண்ட் (சுமார் ரூ.78,00,000). பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் 1,00,000 யூரோ (சுமார் ரூ.78,00,000) அளவுக்கு வழங்கப்படுகிறது. நம் அண்டை நாடான சீனாவில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் அளவு கிட்டத்தட்ட 81,000 டாலர் (5,00,000 சைனீஸ் யுவானின் மதிப்பு சுமார் ரூ.56,00,000). இந்தக் காப்பீடு சீனாவிலுள்ள 99.6% டெபாசிட்தாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகத் தகவல். </p>.<p><strong>எவ்வளவு பேருக்குக் காப்பீடு?</strong></p><p>இந்திய டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், தனது ஆண்டறிக்கையில் (2018-19), எண்ணிக்கை அடிப்படையில் 92% வங்கிக் கணக்குகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதாகவும், தொகை அடிப்படையில் 28% வைப்புத் தொகைக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு பட்ஜெட்டில் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்ட பிறகு, இது எண்ணிக்கை அடிப்படையில் 93 சதவிகிதம் மற்றும் தொகை அடிப்படையில் 34 சதவிகிதமாக உயரும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>.<blockquote>உலகிலேயே வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு!</blockquote>.<p>கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருவாய் ரூ.1,42,719 என ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிதி அமைப்பின் ஆய்வறிக்கை மற்றும் இந்தியாவின் தற்போதைய தனிநபர் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடும்பட்சத்தில், இந்தியாவில் டெபாசிட் காப்பீடு சுமார் ரூ.16 லட்சமாக இருக்க வேண்டும். </p><p>பட்ஜெட்டில் டெபாசிட் காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. என்றாலும், உயர்ந்துவரும் தனிநபர் வருவாய்/பணவீக்கம், மூத்த குடிமக்களுக்கான உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இந்தியாவில் பெருமளவு இல்லாமலிருப்பது, மற்ற உலக நாடுகளின் காப்பீட்டு நடைமுறைகள் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு வைப்புத் தொகை காப்பீட்டை மேலும் பல மடங்கு உயர்த்த வேண்டும்!</p>.<p><strong>எஃப்.ஆர்.டி.ஐ மசோதா... மீண்டும் கிளம்பும் புரளி!</strong></p><p>வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில், `எஃப்.ஆர்.டி.ஐ மசோதா மீண்டும் வரப்போகிறது. எனவே, வங்கியிலிருக்கும் டெபாசிட் பணத்தை எடுத்துவிடுங்கள்’ ன்று சிலர் பீதியைக் கிளப்பிவருகிறார்கள்். அண்மையில், ‘‘எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவில் மாற்றங்களைச் செய்துவருகிறோம். இந்த மாற்றங்கள் எப்போது முடியும், எப்போது மசோதா தாக்கல் ஆகும் என்பதையெல்லாம் சொல்ல முடியாது’’ என நிதியமைச்சர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது இப்படிப் புரளி கிளப்புபவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. </p>.<p>கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதா’ (Financia Resoulution and Deposit Insurance) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தைக் கொண்டே அந்த வங்கியை மீட்டெடுக்க உதவும் ‘பெயில் இன்’ (Bail in) பிரிவு அந்த மசோதாவில் முக்கியமான அம்சமாக இருந்தது. `அந்தப் பிரிவை நீக்க வேண்டும்’ என்று வங்கி டெபாசிட்தாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அதைத் திரும்பப் பெற்றது. </p><p>இப்போது எஃப்.ஆர்.டி.ஐ மசோதா புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டால், அதில் ‘பெயில் இன்’ பிரிவு இருக்குமா இருக்காதா என்பது தெரியவில்லை. தவிர, இன்றைய தேதியில் நம் நாட்டில் திவாலாகும் நிலையில் எந்த வங்கியும் இல்லை. மேலும், நமது பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதியமைச்சரே சொல்லிவரும் நிலையில், வங்கிகளை திவால் நிலைக்குத் தள்ள மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கவிடாது. வங்கிகள் திவாலாகும்பட்சத்தில் அவற்றை மீட்டெடுக்க மக்களின் டெபாசிட் பணத்தைப் பயன்படுத்தினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கோபத்தைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் அரசாங்கத்துக்கு இருக்கும்.</p><p>எனவே, எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவுக்கு பயந்து வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை அவசரப்பட்டு எடுக்கத் தேவையில்லை. வங்கி டெபாசிட்தாரர்கள் இந்த மசோதா தொடர்பாக கவனத்துடன் இருக்கலாமே தவிர, பதற்றத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை!</p>
<p><strong>ம</strong>த்திய அரசின் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ 4.2.2020 அன்று அறிவித்திருக்கிறது. பெரும்பாலான டெபாசிட்தாரர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது இந்த அறிவிப்பு.</p>.<p><strong>டெபாசிட் இன்ஷூரன்ஸ் கடந்துவந்த பாதை!</strong></p><p>உள்நாட்டுச் சேமிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும் வங்கி டெபாசிட்டுகள் அவசியம் தேவை. மேலும், பொருளாதாரரீதியில் ஒரு நாட்டின் மீதான நம்பிக்கை பெரும்பாலும் அந்த நாட்டிலுள்ள வங்கிகளின் செயல்பாடுகளை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஒரு வங்கி திவாலானால், வங்கித்துறையின் மீதான நம்பிக்கை பெருமளவுக்குச் சரிந்துபோவதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. </p><p>கடந்த 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலுள்ள பல வங்கிகள் திவாலாவது அன்றாட நிகழ்வாகிப்போயிருந்தன. அதனால், டெபாசிட் இன்ஷூரன்ஸுக்கான உடனடித் தேவையை உணர்ந்த அப்போதைய அரசாங்கங்கள் டெபாசிட் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நிறுவத் தொடங்கின. இன்றைய தேதியில் உலகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வங்கி டெபாசிட்டுகளுக்கு காப்பீடு உள்ளது.</p>.<p><strong>முதல் டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்!</strong></p><p>இந்தியாவைப் பொறுத்தவரை முதன்முறையாக டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், வைப்புத் தொகை காப்பீட்டு சட்டத்தின் (1961) அடிப்படையில் 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. `உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு’ என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.</p>.<p>தொடக்கத்தில் வணிக வங்கிகளுக்கு மட்டுமே சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்த நிலையில், 1968-ம் ஆண்டு குறிப்பிட்ட சில கூட்டுறவு வங்கிகளுக்கும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டம் விஸ்தரிக்கப்பட்டது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களுக்கு டெபாசிட் இன்ஷூரன்ஸ் கிடையாது. </p><p>காப்பீட்டுக்கான பிரீமியத்தை வங்கிகள் டெபாசிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். </p>.<p><strong>வங்கி திவாலானால் எவ்வளவு பணம் கிடைக்கும்?</strong></p><p>ஒரு வங்கி திவாலானால், அதன் வாடிக்கையாளருக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம். இது ஒருவரின் வங்கி இருப்பிலுள்ள டெபாசிட், அதற்கான வட்டி ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கான உச்ச வரம்பு. ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், அவற்றில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் வங்கி திவாலாகும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே அவருக்குத் திரும்ப வழங்கப்படும். (பார்க்க அட்டவணை)</p><p>ஒருவர், ஒரே வங்கியின் பல கிளைகளில் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு தனிநபருக்கான காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக மட்டுமே இருக்கும். அதே சமயம், வெவ்வேறு வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் தனித்தனியாக இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.</p>.<p><strong>வெளிநாடுகளில் டெபாசிட் காப்பீடு எவ்வளவு? </strong></p><p>மூத்த குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் அமெரிக்காவில் 2,50,000 டாலர் (சுமார் ரூ.1,82,00,000) அளவுக்கு டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 85,000 பவுண்ட் (சுமார் ரூ.78,00,000). பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் 1,00,000 யூரோ (சுமார் ரூ.78,00,000) அளவுக்கு வழங்கப்படுகிறது. நம் அண்டை நாடான சீனாவில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் அளவு கிட்டத்தட்ட 81,000 டாலர் (5,00,000 சைனீஸ் யுவானின் மதிப்பு சுமார் ரூ.56,00,000). இந்தக் காப்பீடு சீனாவிலுள்ள 99.6% டெபாசிட்தாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகத் தகவல். </p>.<p><strong>எவ்வளவு பேருக்குக் காப்பீடு?</strong></p><p>இந்திய டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன், தனது ஆண்டறிக்கையில் (2018-19), எண்ணிக்கை அடிப்படையில் 92% வங்கிக் கணக்குகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதாகவும், தொகை அடிப்படையில் 28% வைப்புத் தொகைக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு பட்ஜெட்டில் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்ட பிறகு, இது எண்ணிக்கை அடிப்படையில் 93 சதவிகிதம் மற்றும் தொகை அடிப்படையில் 34 சதவிகிதமாக உயரும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>.<blockquote>உலகிலேயே வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு!</blockquote>.<p>கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருவாய் ரூ.1,42,719 என ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிதி அமைப்பின் ஆய்வறிக்கை மற்றும் இந்தியாவின் தற்போதைய தனிநபர் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடும்பட்சத்தில், இந்தியாவில் டெபாசிட் காப்பீடு சுமார் ரூ.16 லட்சமாக இருக்க வேண்டும். </p><p>பட்ஜெட்டில் டெபாசிட் காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. என்றாலும், உயர்ந்துவரும் தனிநபர் வருவாய்/பணவீக்கம், மூத்த குடிமக்களுக்கான உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இந்தியாவில் பெருமளவு இல்லாமலிருப்பது, மற்ற உலக நாடுகளின் காப்பீட்டு நடைமுறைகள் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு வைப்புத் தொகை காப்பீட்டை மேலும் பல மடங்கு உயர்த்த வேண்டும்!</p>.<p><strong>எஃப்.ஆர்.டி.ஐ மசோதா... மீண்டும் கிளம்பும் புரளி!</strong></p><p>வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில், `எஃப்.ஆர்.டி.ஐ மசோதா மீண்டும் வரப்போகிறது. எனவே, வங்கியிலிருக்கும் டெபாசிட் பணத்தை எடுத்துவிடுங்கள்’ ன்று சிலர் பீதியைக் கிளப்பிவருகிறார்கள்். அண்மையில், ‘‘எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவில் மாற்றங்களைச் செய்துவருகிறோம். இந்த மாற்றங்கள் எப்போது முடியும், எப்போது மசோதா தாக்கல் ஆகும் என்பதையெல்லாம் சொல்ல முடியாது’’ என நிதியமைச்சர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது இப்படிப் புரளி கிளப்புபவர்களுக்கு வசதியாகப்போய்விட்டது. </p>.<p>கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதா’ (Financia Resoulution and Deposit Insurance) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தைக் கொண்டே அந்த வங்கியை மீட்டெடுக்க உதவும் ‘பெயில் இன்’ (Bail in) பிரிவு அந்த மசோதாவில் முக்கியமான அம்சமாக இருந்தது. `அந்தப் பிரிவை நீக்க வேண்டும்’ என்று வங்கி டெபாசிட்தாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அதைத் திரும்பப் பெற்றது. </p><p>இப்போது எஃப்.ஆர்.டி.ஐ மசோதா புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டால், அதில் ‘பெயில் இன்’ பிரிவு இருக்குமா இருக்காதா என்பது தெரியவில்லை. தவிர, இன்றைய தேதியில் நம் நாட்டில் திவாலாகும் நிலையில் எந்த வங்கியும் இல்லை. மேலும், நமது பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதியமைச்சரே சொல்லிவரும் நிலையில், வங்கிகளை திவால் நிலைக்குத் தள்ள மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கவிடாது. வங்கிகள் திவாலாகும்பட்சத்தில் அவற்றை மீட்டெடுக்க மக்களின் டெபாசிட் பணத்தைப் பயன்படுத்தினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கோபத்தைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் அரசாங்கத்துக்கு இருக்கும்.</p><p>எனவே, எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவுக்கு பயந்து வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை அவசரப்பட்டு எடுக்கத் தேவையில்லை. வங்கி டெபாசிட்தாரர்கள் இந்த மசோதா தொடர்பாக கவனத்துடன் இருக்கலாமே தவிர, பதற்றத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை!</p>