<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வ</span></strong>ரலாற்றில் முதல்முறையாக ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ என்னும் சீனத் தொடர், நெட்ஃபிளிக்ஸ் சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 59 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக் கிறார்கள். ஆனால், ஆச்சர்யம் இதுவல்ல... அத்தொடரின் ஒரு காட்சியில் உள்ளூர் நீதிபதிகளில் ஒருவர் காண்பிக்கப்படுகிறார். தன் படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியில் வருகிறார். பின்னால் கட்டிலில் ஒரு பெண் படுத்திருக்கிறார். <br /> <br /> முதல் பார்வையிலேயே அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்பது தெரிந்துவிடுகிறது. ஒரு சீனத் தொழிலதிபரால் பணம் கொடுத்து வரவழைக்கப் பட்ட பெண் அவர் என்பது, அடுத்த காட்சியில் தெரிகிறது. இப்படியோர் அதிர்ச்சியூட்டும் காட்சியை உலகம் மட்டுமல்ல, சீனர்களும்கூட இதுவரை கண்டதில்லை. <br /> <br /> இதை எப்படி சீன அரசு அனுமதித்தது? ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியோ ஐரோப்பிய இணையதளமோ இப்படியொரு காட்சியைத் தயாரித்திருந்தால், அதை ஒரே ஒரு சீனர்கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் சீன அரசு அதிகாரிகள், நீதிபதிகள்கூட சிலர் லஞ்ச, ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்கிற காட்சிகள் கூட இந்தத் தொடரில் வருகின்றன. உலகம் நிஜமாகவே குழம்பிவிட்டது.</p>.<p>ஓர் அரசு அதிகாரியையும் முறைதவறி நடக்கும் ஒரு நீதிபதியையும் பட்டவர்த்தனமாக இப்படிக் காண்பிக்கும் துணிச்சல் எப்படிச் சீனாவுக்கு வந்தது? சீனா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? தணிக்கை முறையை ஒருவழியாகக் கைவிட்டுவிட்டதா? இரும்புத் திரை விலக்கப்பட்டுவிட்டதா? திறந்த புத்தகமாக சீனா மலர்ந்துவிட்டதா? இல்லை. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பரிபூரண ஆசியுடன் எடுக்கப்பட்ட சீரியல் இது. <br /> <br /> தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவும் ஜீ மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது.</p>.<p>`சீனாவில் மேல் மட்டத்தில் ஊழல் பரவியிருப்பதை நானறிவேன்.அதற்கெதிராக நான் தீவிரமாகப் போராடி வருகிறேன்' என்னும் செய்தியை மக்கள் மனதில் பதியவைப்பதே ஜீ அரசின் நோக்கம். <br /> <br /> அரசியல் நோக்கங்களுக்காகத் தொலைக் காட்சியைப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியைச் சென்ற ஆண்டே தொடங்கிவிட்டார் ஜீ. `பிரைம் டைம்' செய்தி ஒளிபரப்பின்போது... திடீரென்று ஓர் அரசு அதிகாரி திரையில் தோன்றுவார்.</p>.<p>`என் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நான் சொத்து சேர்த்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று மன்றாடுவார்; அல்லது, ஆவணப்படங்களில் கைதிகள் காண்பிக்கப்படுவார்கள். முறைகேடு காரண மாகச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் கண்ணீர் மல்கத் தங்கள் தவறுகளைப் பட்டியலிட்டு மன்னிப்புக் கோருவார்கள். இந்த வரிசையில்தான் புதிதாக மேற்படி சீரியலும் அரசு ஆதரவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. <br /> <br /> இதன் பொருள், சீன அரசாங்கத்தில் நடைபெறும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதற்கும் விமர்சிப்பதற்குமான உரிமை, சீன அரசுக்கு மட்டுமே உண்டு என்பதுதான். எதை மாற்றிக் கொள்ள வேண்டுமோ, அதற்கு மட்டுமே... எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே மாற்றம் சீனாவில் அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், சீனா நம் கண்முன்னால் மாறிக்கொண்டிருக்கிறது. அதே சமயம், நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் மாறாமலும் இருக்கிறது.</p>.<p>சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரே வழி, திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். ``ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும்; அந்நாடு குறித்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்'' என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். ‘`சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல் மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. சீனாவில் ஏழைகள் இருப்பது உண்மை.</p>.<p>ஆம், என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம், சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால், பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன்; இணையத்தை உபயோகித்தேன்; மாண்டரின் ஓரளவு கற்றுக்கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் போன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டுவிட்டேன். சீனாவில் சுதந்திரமாக இருக்க முடியாது என்றார்கள்; நான் மூன்று மாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றிவந்தேன். சீனர்கள் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள் என்றார்கள். கம்யூனிஸம் குறித்து சீனர்களுடன் என்னால் விவாதிக்க முடிந்தது. மொத்தத்தில் நான் தெரிந்துகொண்டது ஒன்றுதான். சீனா பற்றிச் சொல்லப்படுவது அனைத்தும் அரை உண்மை அல்லது முழுப் பொய்.'’ சீனாவின் பாய்ச்சல்கள் மறுக்க முடியாதவை. அமெரிக்காவோடு நேருக்குநேர் நின்று போட்டிபோடும் பொருளாதார ஆற்றலைக் கொண்டிருக்கும் ஒரே நாடு சீனா மட்டுமே என்பதை அந்நாட்டை விரும்புபவர்கள் மட்டுமல்ல, வெறுப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு சராசரி சீனரின் சொத்து 2006-ல் இருந்ததைவிட 2016-ல் இருமடங்காகப் பெருகியுள்ளது. சீன அரசின் முனைப்பான செயல்திட்டங்களே இதற்கு முழுமுதல் காரணம்.</p>.<p>போகிறபோக்கில் எந்த வொரு திட்டத்தையும் அங்கே அரசியல்வாதிகள் அறிவிப்பதில்லை. அறிவித்து முடித்த கையோடு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் மறந்து விடுவதும் இல்லை. எத்தனை கடினமானதாக இருந்தாலும் சரி, அறிவித்த திட்டத்தை நிறைவேற்றி முடித்தபிறகே மறுவேலை பார்க்கிறார்கள். ஓர் உதாரணம்... சீனாவின் பொருளாதாரக் கட்டுமானத்தையும் அந்நாட்டின் வருமான புள்ளிவிவரங்களையும் ஆராய்ந்த நிபுணர்கள், சீனாவின் பலம் அதிகரிக்க வேண்டு மானால் உற்பத்தித் துறையிலிருந்து சேவைகள் துறைக்கு நாட்டை நகர்த்திச் சென்றாக வேண்டும் என்றொரு கருத்தைச் சொன்னார்கள். <br /> <br /> சரி... எதிர்காலம் என ஒன்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் உடனே அந்தக் கருத்தை அள்ளியெடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டது சீன அரசு. இன்று சீனா குறிப்பிடத்தக்க அளவுக்குச் சேவைகள் துறை பக்கம் நகர்ந்து வந்துவிட்டது. அது மட்டுமின்றி, அத்துறையில் சாதனையும் படைத்திருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் அல்லாமல், சீனா தன் காதுகளையும் கண்களையும் எப்போதும் திறந்துவைத் திருப்பதால் மட்டுமே இந்தச் சாதனை சாத்திய மாகியிருக்கிறது.<br /> <br /> சீனா என்றதும், சுற்றுச்சூழல் மாசுதான் நம் நினைவுக்கு வரும். முகமூடி அணிந்த பள்ளிக் குழந்தைகள் வீதிகளில் நடந்துசெல்வதை அங்கு சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். எதிரில்வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு மாசுப் புகை சாலைகளில் சூழ்ந்துகிடக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு சராசரி சீனர் 5 டன் கரியமில வாயுவை வெளியேற்றிக்கொண்டிருந்தார். 2013 வாக்கில் இது 7 டன்னாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் சீனர்களின் மின்சாரக் கொள்முதல் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். சிக்கல் என்னவென்றால், மின்சாரமும் வேண்டும், சுற்றுச்சூழல் மாசும் இருக்கக்கூடாது. துரித வளர்ச்சியும் வேண்டும். அதே சமயம், நிலமும் நீரும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சவாலைச் சீனா ஓரளவு நன்றாகவே எதிர்கொண்டிருக்கிறது. 2030-க்குள் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் திட்டத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறது சீனா.<br /> <br /> சமீபகாலகமாக, சீனாவில் எழுதப்பட்டுவரும் அறிவியல் புனைகதைகளை உலகம் ஆர்வத்துடன் வாசிக்கிறது. முழுக்கச் சொந்தத் தயாரிப்பில் ஒரு பெரிய பயணிகள் விமானத்தை (சி919) உருவாக்கிவிட்டது சீனா. மற்றொரு பக்கம், விண்வெளி ஆய்வுகளிலும் செயற்கை அறிவாற்றல் துறையிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. பல்வேறு அறிவியல் துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் சீனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.<br /> <br /> மருத்துவம், சுகாதாரம் இரு துறைகளிலும் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது சீனா. ஐந்து வயதைத் தொடுவதற்குள் இறந்துபோகும் சீனக் குழந்தைகளின் எண்ணிக்கை 2006 வாக்கில் 2.19 சதவிகிதமாக இருந்தது. பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை பாதியாகிவிட்டது. சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்துவந்த சீனர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 34 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், சீனர்களில் கிட்டத்தட்ட சரிபாதியினர் இன்று மொபைல்மூலம் இணையத்தைப் பாவிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு, மூவரில் ஒருவரிடம் மட்டுமே மொபைல் இருந்தது; பத்து பேரில் ஒருவர் மட்டுமே இணையத்தை உபயோகித்து வந்தனர். சென்ற வாரம் வெளிவந்த ஓர் அறிவிப்பு இது. ‘நாம் ஏன் விக்கிப்பீடியாவைச் சார்ந்திருக்க வேண்டும்? நமக்கான விக்கிப்பீடியாவை நாமே உருவாக்கிக்கொள்வோம், வாருங்கள்!’ அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த வேலை முடிந்துவிட்டிருக்கும்.</p>.<p>தங்களால் எதையும் சாதிக்கமுடியும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்; தங்களை வெற்றிபெற்ற ஒரு தேசமாக அவர்கள் கனவு காண்கிறார்கள்; கொடூரமான வறட்சிகளையும் ஏழ்மைகளையும் அந்நிய ஆக்கிரமிப்புகளையும் முறியடித்து, கடும் தியாகங்கள் புரிந்து, ஈட்டிய கடந்தகால வெற்றிகளை அவர்கள் நினைவில் வைத்திருக் கிறார்கள்; எந்த இடர்ப்பாட்டையும் தாண்டிச் செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.<br /> <br /> இருந்தும் சில சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. இன்றைய தேதியில் சீனாவைப் போல் வெற்றிகரமாக முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கும் இன்னொரு கம்யூனிஸ நாடு இல்லை. மாவோவும் மார்க்ஸும் தொழில் முனைவோர்களும் ஒன்றுபோல் அங்கே ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த முரண் பாட்டைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்றால், அங்கே முதலாளித்துவம் இந்த அளவுக்கு பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பில்லை. சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்றால் அங்கே கம்யூனிஸம் என்னும் பேச்சுக்கே இடமிருந்திருக்காது. இரு கத்திகளும் எப்படி ஒரே உறையில் ஒற்றுமையாக அடங்கியிருக்கின்றன? கம்யூனிஸ்ட்களாக இருக்கும் மில்லியனர்களையும் மில்லியனர்களாக இருக்கும் கம்யூனிஸ்ட்களையும் உலகிலேயே இங்கு மட்டும்தான் ஒருவர் காணமுடியும். இது எப்படிச் சாத்தியமானது? எளிமையான பதில், இது ஒரு தந்திரமான ஏற்பாடு என்பதுதான். சித்தாந்தத்தை உதறிவிட்டு, பெயரை மட்டும் அடையாளத்துக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது அந்நாடு. இது ஒரு வகையான அடையாள அரசியல்.</p>.<p>இந்த அடையாள அரசியல் சீன அரசுக்கு வேண்டுமானால் பலன் கொடுக்கலாம். சீனர்களுக்கு? சீனாவில் வளமும் செல்வமும் முன்னேற்றமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் எல்லாவற்றையும்விட ஜனநாயகம் உயர்ந்தது அல்லவா? ஜனநாயகத்தைத் துறந்து வசதிகளைப் பெறும் இந்த ஏற்பாடு சீனர்களுக்கு உண்மை யிலேயே ஏற்புடையதாக இருக்கிறதா? மக்களைவிட அரசு உயர்ந்தது என்று சீனர்கள் நம்புகிறார்களா? மக்களின் பிரத்யேக வாழ்வில் குறுக்கிடும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்களா?</p>.<p>``நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால், இந்தியாவில் பிறக்கவே விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும். அரசு என் வாழ்வில் குறுக்கிடுமா, <br /> என் சொத்துகளை அபகரித்துக்கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என் அனுமதியின்றி என்னிடமிருந்து எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால், ஏழையாக இருக்க வேண்டுமானால், நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன். அங்கே என் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் எதைப் பற்றியும் நான் கவலைப்படவேண்டியதில்லை. ஜனநாயகம் பற்றியெல்லாம் அநாவசியமாகக் கவலைப் படாமல் நிம்மதியாக என் வாழ்வை நடத்தலாம்.’' என்பது சீனாவில் பல காலம் வாழ்ந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவரின் கருத்து.<br /> <br /> உண்மைதானே!</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வ</span></strong>ரலாற்றில் முதல்முறையாக ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ என்னும் சீனத் தொடர், நெட்ஃபிளிக்ஸ் சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 59 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக் கிறார்கள். ஆனால், ஆச்சர்யம் இதுவல்ல... அத்தொடரின் ஒரு காட்சியில் உள்ளூர் நீதிபதிகளில் ஒருவர் காண்பிக்கப்படுகிறார். தன் படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியில் வருகிறார். பின்னால் கட்டிலில் ஒரு பெண் படுத்திருக்கிறார். <br /> <br /> முதல் பார்வையிலேயே அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்பது தெரிந்துவிடுகிறது. ஒரு சீனத் தொழிலதிபரால் பணம் கொடுத்து வரவழைக்கப் பட்ட பெண் அவர் என்பது, அடுத்த காட்சியில் தெரிகிறது. இப்படியோர் அதிர்ச்சியூட்டும் காட்சியை உலகம் மட்டுமல்ல, சீனர்களும்கூட இதுவரை கண்டதில்லை. <br /> <br /> இதை எப்படி சீன அரசு அனுமதித்தது? ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியோ ஐரோப்பிய இணையதளமோ இப்படியொரு காட்சியைத் தயாரித்திருந்தால், அதை ஒரே ஒரு சீனர்கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் சீன அரசு அதிகாரிகள், நீதிபதிகள்கூட சிலர் லஞ்ச, ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்கிற காட்சிகள் கூட இந்தத் தொடரில் வருகின்றன. உலகம் நிஜமாகவே குழம்பிவிட்டது.</p>.<p>ஓர் அரசு அதிகாரியையும் முறைதவறி நடக்கும் ஒரு நீதிபதியையும் பட்டவர்த்தனமாக இப்படிக் காண்பிக்கும் துணிச்சல் எப்படிச் சீனாவுக்கு வந்தது? சீனா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? தணிக்கை முறையை ஒருவழியாகக் கைவிட்டுவிட்டதா? இரும்புத் திரை விலக்கப்பட்டுவிட்டதா? திறந்த புத்தகமாக சீனா மலர்ந்துவிட்டதா? இல்லை. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பரிபூரண ஆசியுடன் எடுக்கப்பட்ட சீரியல் இது. <br /> <br /> தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவும் ஜீ மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது.</p>.<p>`சீனாவில் மேல் மட்டத்தில் ஊழல் பரவியிருப்பதை நானறிவேன்.அதற்கெதிராக நான் தீவிரமாகப் போராடி வருகிறேன்' என்னும் செய்தியை மக்கள் மனதில் பதியவைப்பதே ஜீ அரசின் நோக்கம். <br /> <br /> அரசியல் நோக்கங்களுக்காகத் தொலைக் காட்சியைப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியைச் சென்ற ஆண்டே தொடங்கிவிட்டார் ஜீ. `பிரைம் டைம்' செய்தி ஒளிபரப்பின்போது... திடீரென்று ஓர் அரசு அதிகாரி திரையில் தோன்றுவார்.</p>.<p>`என் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நான் சொத்து சேர்த்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று மன்றாடுவார்; அல்லது, ஆவணப்படங்களில் கைதிகள் காண்பிக்கப்படுவார்கள். முறைகேடு காரண மாகச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் கண்ணீர் மல்கத் தங்கள் தவறுகளைப் பட்டியலிட்டு மன்னிப்புக் கோருவார்கள். இந்த வரிசையில்தான் புதிதாக மேற்படி சீரியலும் அரசு ஆதரவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. <br /> <br /> இதன் பொருள், சீன அரசாங்கத்தில் நடைபெறும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதற்கும் விமர்சிப்பதற்குமான உரிமை, சீன அரசுக்கு மட்டுமே உண்டு என்பதுதான். எதை மாற்றிக் கொள்ள வேண்டுமோ, அதற்கு மட்டுமே... எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே மாற்றம் சீனாவில் அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், சீனா நம் கண்முன்னால் மாறிக்கொண்டிருக்கிறது. அதே சமயம், நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் மாறாமலும் இருக்கிறது.</p>.<p>சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரே வழி, திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். ``ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும்; அந்நாடு குறித்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்'' என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். ‘`சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல் மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. சீனாவில் ஏழைகள் இருப்பது உண்மை.</p>.<p>ஆம், என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம், சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால், பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன்; இணையத்தை உபயோகித்தேன்; மாண்டரின் ஓரளவு கற்றுக்கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் போன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டுவிட்டேன். சீனாவில் சுதந்திரமாக இருக்க முடியாது என்றார்கள்; நான் மூன்று மாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றிவந்தேன். சீனர்கள் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள் என்றார்கள். கம்யூனிஸம் குறித்து சீனர்களுடன் என்னால் விவாதிக்க முடிந்தது. மொத்தத்தில் நான் தெரிந்துகொண்டது ஒன்றுதான். சீனா பற்றிச் சொல்லப்படுவது அனைத்தும் அரை உண்மை அல்லது முழுப் பொய்.'’ சீனாவின் பாய்ச்சல்கள் மறுக்க முடியாதவை. அமெரிக்காவோடு நேருக்குநேர் நின்று போட்டிபோடும் பொருளாதார ஆற்றலைக் கொண்டிருக்கும் ஒரே நாடு சீனா மட்டுமே என்பதை அந்நாட்டை விரும்புபவர்கள் மட்டுமல்ல, வெறுப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு சராசரி சீனரின் சொத்து 2006-ல் இருந்ததைவிட 2016-ல் இருமடங்காகப் பெருகியுள்ளது. சீன அரசின் முனைப்பான செயல்திட்டங்களே இதற்கு முழுமுதல் காரணம்.</p>.<p>போகிறபோக்கில் எந்த வொரு திட்டத்தையும் அங்கே அரசியல்வாதிகள் அறிவிப்பதில்லை. அறிவித்து முடித்த கையோடு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் மறந்து விடுவதும் இல்லை. எத்தனை கடினமானதாக இருந்தாலும் சரி, அறிவித்த திட்டத்தை நிறைவேற்றி முடித்தபிறகே மறுவேலை பார்க்கிறார்கள். ஓர் உதாரணம்... சீனாவின் பொருளாதாரக் கட்டுமானத்தையும் அந்நாட்டின் வருமான புள்ளிவிவரங்களையும் ஆராய்ந்த நிபுணர்கள், சீனாவின் பலம் அதிகரிக்க வேண்டு மானால் உற்பத்தித் துறையிலிருந்து சேவைகள் துறைக்கு நாட்டை நகர்த்திச் சென்றாக வேண்டும் என்றொரு கருத்தைச் சொன்னார்கள். <br /> <br /> சரி... எதிர்காலம் என ஒன்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் உடனே அந்தக் கருத்தை அள்ளியெடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டது சீன அரசு. இன்று சீனா குறிப்பிடத்தக்க அளவுக்குச் சேவைகள் துறை பக்கம் நகர்ந்து வந்துவிட்டது. அது மட்டுமின்றி, அத்துறையில் சாதனையும் படைத்திருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் அல்லாமல், சீனா தன் காதுகளையும் கண்களையும் எப்போதும் திறந்துவைத் திருப்பதால் மட்டுமே இந்தச் சாதனை சாத்திய மாகியிருக்கிறது.<br /> <br /> சீனா என்றதும், சுற்றுச்சூழல் மாசுதான் நம் நினைவுக்கு வரும். முகமூடி அணிந்த பள்ளிக் குழந்தைகள் வீதிகளில் நடந்துசெல்வதை அங்கு சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். எதிரில்வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு மாசுப் புகை சாலைகளில் சூழ்ந்துகிடக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு சராசரி சீனர் 5 டன் கரியமில வாயுவை வெளியேற்றிக்கொண்டிருந்தார். 2013 வாக்கில் இது 7 டன்னாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் சீனர்களின் மின்சாரக் கொள்முதல் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். சிக்கல் என்னவென்றால், மின்சாரமும் வேண்டும், சுற்றுச்சூழல் மாசும் இருக்கக்கூடாது. துரித வளர்ச்சியும் வேண்டும். அதே சமயம், நிலமும் நீரும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சவாலைச் சீனா ஓரளவு நன்றாகவே எதிர்கொண்டிருக்கிறது. 2030-க்குள் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் திட்டத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறது சீனா.<br /> <br /> சமீபகாலகமாக, சீனாவில் எழுதப்பட்டுவரும் அறிவியல் புனைகதைகளை உலகம் ஆர்வத்துடன் வாசிக்கிறது. முழுக்கச் சொந்தத் தயாரிப்பில் ஒரு பெரிய பயணிகள் விமானத்தை (சி919) உருவாக்கிவிட்டது சீனா. மற்றொரு பக்கம், விண்வெளி ஆய்வுகளிலும் செயற்கை அறிவாற்றல் துறையிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. பல்வேறு அறிவியல் துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் சீனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.<br /> <br /> மருத்துவம், சுகாதாரம் இரு துறைகளிலும் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது சீனா. ஐந்து வயதைத் தொடுவதற்குள் இறந்துபோகும் சீனக் குழந்தைகளின் எண்ணிக்கை 2006 வாக்கில் 2.19 சதவிகிதமாக இருந்தது. பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை பாதியாகிவிட்டது. சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்துவந்த சீனர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 34 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், சீனர்களில் கிட்டத்தட்ட சரிபாதியினர் இன்று மொபைல்மூலம் இணையத்தைப் பாவிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு, மூவரில் ஒருவரிடம் மட்டுமே மொபைல் இருந்தது; பத்து பேரில் ஒருவர் மட்டுமே இணையத்தை உபயோகித்து வந்தனர். சென்ற வாரம் வெளிவந்த ஓர் அறிவிப்பு இது. ‘நாம் ஏன் விக்கிப்பீடியாவைச் சார்ந்திருக்க வேண்டும்? நமக்கான விக்கிப்பீடியாவை நாமே உருவாக்கிக்கொள்வோம், வாருங்கள்!’ அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த வேலை முடிந்துவிட்டிருக்கும்.</p>.<p>தங்களால் எதையும் சாதிக்கமுடியும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்; தங்களை வெற்றிபெற்ற ஒரு தேசமாக அவர்கள் கனவு காண்கிறார்கள்; கொடூரமான வறட்சிகளையும் ஏழ்மைகளையும் அந்நிய ஆக்கிரமிப்புகளையும் முறியடித்து, கடும் தியாகங்கள் புரிந்து, ஈட்டிய கடந்தகால வெற்றிகளை அவர்கள் நினைவில் வைத்திருக் கிறார்கள்; எந்த இடர்ப்பாட்டையும் தாண்டிச் செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.<br /> <br /> இருந்தும் சில சிக்கல்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. இன்றைய தேதியில் சீனாவைப் போல் வெற்றிகரமாக முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கும் இன்னொரு கம்யூனிஸ நாடு இல்லை. மாவோவும் மார்க்ஸும் தொழில் முனைவோர்களும் ஒன்றுபோல் அங்கே ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த முரண் பாட்டைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்றால், அங்கே முதலாளித்துவம் இந்த அளவுக்கு பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பில்லை. சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்றால் அங்கே கம்யூனிஸம் என்னும் பேச்சுக்கே இடமிருந்திருக்காது. இரு கத்திகளும் எப்படி ஒரே உறையில் ஒற்றுமையாக அடங்கியிருக்கின்றன? கம்யூனிஸ்ட்களாக இருக்கும் மில்லியனர்களையும் மில்லியனர்களாக இருக்கும் கம்யூனிஸ்ட்களையும் உலகிலேயே இங்கு மட்டும்தான் ஒருவர் காணமுடியும். இது எப்படிச் சாத்தியமானது? எளிமையான பதில், இது ஒரு தந்திரமான ஏற்பாடு என்பதுதான். சித்தாந்தத்தை உதறிவிட்டு, பெயரை மட்டும் அடையாளத்துக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது அந்நாடு. இது ஒரு வகையான அடையாள அரசியல்.</p>.<p>இந்த அடையாள அரசியல் சீன அரசுக்கு வேண்டுமானால் பலன் கொடுக்கலாம். சீனர்களுக்கு? சீனாவில் வளமும் செல்வமும் முன்னேற்றமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் எல்லாவற்றையும்விட ஜனநாயகம் உயர்ந்தது அல்லவா? ஜனநாயகத்தைத் துறந்து வசதிகளைப் பெறும் இந்த ஏற்பாடு சீனர்களுக்கு உண்மை யிலேயே ஏற்புடையதாக இருக்கிறதா? மக்களைவிட அரசு உயர்ந்தது என்று சீனர்கள் நம்புகிறார்களா? மக்களின் பிரத்யேக வாழ்வில் குறுக்கிடும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்களா?</p>.<p>``நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால், இந்தியாவில் பிறக்கவே விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும். அரசு என் வாழ்வில் குறுக்கிடுமா, <br /> என் சொத்துகளை அபகரித்துக்கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என் அனுமதியின்றி என்னிடமிருந்து எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால், ஏழையாக இருக்க வேண்டுமானால், நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன். அங்கே என் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் எதைப் பற்றியும் நான் கவலைப்படவேண்டியதில்லை. ஜனநாயகம் பற்றியெல்லாம் அநாவசியமாகக் கவலைப் படாமல் நிம்மதியாக என் வாழ்வை நடத்தலாம்.’' என்பது சீனாவில் பல காலம் வாழ்ந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவரின் கருத்து.<br /> <br /> உண்மைதானே!</p>