அரசியல் எதிரிகளின் கூட்டுச் சதி, தா.கிருட்டிணனை நடுரோட்டில் வெட்டிக் கொன்றது. அந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார் பெரிய கருப்பன். தன்னைத் தேற்றிக்கொண்டு, தா.கிருட்டி ணன் குடும்பத்தாருக்கு நிழலாக நின்றார். அதன் பிறகு பதவி ஆசை, விசுவாசத்தை விலை பேசிய சம்பவங்களும் நடந்தன.
தா.கிருட்டிணன் மறைவுக்குப் பிறகும், தீவிர அழகிரி ஆதரவாளரான திருப்பத்தூர் சிவராமனுக் கும் பெரிய கருப்பனுக்கும் இடையில் முட்டல் மோதல்கள் நடந்துகொண்டேதான் இருந்தன. 2006 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி சிவராமனுக்கா, பெரிய கருப்பனுக்கா என்று சேஸிங் நடந்தபோது, மாவட்டச் செயலாளர் என்ற முறையில், பெரிய கருப்பன் முந்திக்கொண்டார். தா.கிருட்டி ணனே அமைச்சராக வருவதற்கு 30 வருடங்களுக்கு மேல் போராட வேண்டி இருந்தது. ஆனால், எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் எம்.எல்.ஏ-வாகி, எடுத்த எடுப்பிலேயே அமைச்சரவையிலும் இடம் பிடித்தார் பெரிய கருப்பன். இவை அனைத்தும் தா.கிருட்டிணன் இவருக்கு செத்துக் கொடுத்தவை.
தொடக்கத்தில் குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சராக இருந்தார். சில நாட்களிலேயே பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இறந்ததால், அவரிடம் இருந்த அறநிலையத் துறை பெரிய கருப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்குப் பிறகே அழகிரியின் ஆதரவாளராக மாறத் தொடங்கினார்.
இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கோயில் புனரமைப்புப் பணிகள் நடப்பது பெரிய கருப்பனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தாராளமாக நிதிகளை வாரி வழங்குவதும் இதற்கு முக்கியக் காரணம். சுமார் `550 கோடி மதிப்பீட்டில் 6,000 கோயில்கள் இவரது காலத்தில் குடமுழுக்கு கண்டதாக புள்ளிவிவரம் கொடுக்கிறார்கள். குத்தகைதாரர்களிடம் சிக்கிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறைக்கு வருவாய் சேர்த்து இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் குளங்களைச் செப்பனிட்டதும், சுமார் 150 தேர்களை மராமத்து செய்ததும் பெரிய கருப்பனின் சாதனைதான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தென் மாவட்ட மணல் வருமானத்தை முறையாக வரவு - செலவு பார்த்துக் கொடுக்க வேண்டிய பெரிய பொறுப்பும் இவருக்கு. மணலை எண்ணிக் காசு பார்க்கும் பெரும்புள்ளியும் இவரது ஊர்க்காரர்!
துறை சார்ந்த பணிகளில் இவ்வளவு அக்கறை காட்டுபவர், தொகுதி சார்ந்த பணிகளில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார். மற்றவர்களைப்போல கட்சிக்காரர்கள் யாரையும் இவர் அடக்கி ஆள நினைப்பது இல்லை. அதனால், கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், இவரது இந்த அணுகு முறையால் ஊர் ஊருக்கு பலர் மாவட்டச் செயலாளர்களைப்போல் ஆக்ட் கொடுத் துத் திரிவது, கட்சி இவரது பிடிக்குள் இல்லை என்பதையே காட்டுகிறது.
கேன்டீன் நடத்திய காலத்தில், இரவு ஒரு மணிக்குப் படுத்து காலையில் லேட்டாக எழும் பழக்கம் இன்னும் தொட்டுக்கொண்டே வருகிறது. பெரும்பாலான நேரங்களில் |