''கருணாநிதியின் பார்வையில் ஜெயலலிதா மாறி இருக்கிறாரா?''
''நிச்சயமாக. முன்பு கருணாநிதி, ஜெயலலிதாவை அழைக்கும் பெயர் 'பால்கனிப் பாவை'. இப்போதோ 'சிறுதாவூர் சீமாட்டி!'
- என்.சீதாலெட்சுமி, சென்னை-40.
''தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சில டிப்ஸ்கள் கொடுக்க முடியுமா?''
''தாராளமாக!
1.கலைந்த தலையோடு, ஷேவிங் செய்யாமல், சட் டைப் பட்டனைத் திறந்தபடி, கண்களில் கொலை வெறியோடு, கைகளில் அரிவாள் ஏந்தியபடி, நாக்கைத் துருத்தியபடி போஸ்டரில் நான்கைந்து இளைஞர் களைப் பார்த்தால், 'மவனே தியேட்டர் பக்கம் வந்தே, கத்தியில்லாம சர்ஜரிதாண்டி!'
2. படம் ரிலீஸ§க்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் 'தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி' என்று தெரிவித்திருந்தால், ஆப்பு கன்ஃபார்ம்.
3.படத்தின் இசை வெளியீட்டு விழா சின்னத்திரை யில் ஆடம்பரமாக நடந்தால், செய்வினை வைக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை!
4. காதலை வேறு ஒரு கோணத்தில் இயக்குநர் சொல்ல முயற்சித்திருந்தால், மனநோய் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டுப் போவது நல்லது!
5. 'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...' என்ற குரல் கேட்டால், கேபிளைப் பிடுங்கிவிடுவது குடும்ப ஆரோக்கியம்!''
- பாலநாயகர், திருப்பூர்.
''ஏழை சொல் அம்பலம் ஏறாதா?''
''இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கும் மாணவி, ஜாஸ்மின். இவரது தந்தை சேக் தாவூதின். தொழில் தெருத் தெருவாகச் சென்று துணி விற்பது. சென்ற ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த மாணவன், ஜோஸ் ரிஜான். இவரது தந்தை பயஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் தெருத் தெருவாக மீன் விற்கும் வியாபாரி. இதைப் பார்க்கும்போதுதான் நீங்கள் சொல்கிற பழமொழி பொய்த்துப்போகும் எனஎதிர்காலம் மீது நம்பிக்கை வருகிறது!''
- எஸ்.அமுதா, திருவாரூர்.
''சமீபத்தில் நீங்கள் கண்டு வியந்த அதிசய மனிதர்?''
|