டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.500
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''டெல்லியில் 1991-ல் மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும் பணி நடைபெற்றது. ஆசிரியராக இருந்த நானும் அதில் ஈடுபடுட வேண்டியிருந்தது. நான் கணக்கு எடுக்க வேண்டிய பகுதியில்தான் அப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தியின் வீடு. நான் இயல்பாக அவர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, பாதுகாப்புக் கெடுபிடிகள் என்னைப் பதற்றம்கொள்ளவைத்தன. வியர்த்து விறுவிறுக்க நான் ஓர் அறையில் காத்திருக்க, ஓர் ஒளியைப் போல அங்கு பிரசன்னமானர் ராஜீவ் காந்தி. 'ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்? ரிலாக்ஸாக இருங் கள்!' என்று என்னை இயல்பாக்கிவிட்டுச் சிரித்தார். 'ஓ.கே. சார்... சும்மா ஒரு ஃபார்மாலிட்டி சார்!' என்று நான் கிளம்ப எத்தனிக்க, 'அந்த ஃபார்மாலிட்டியை முடிக்காமலே கிளம்புறீங்களே!' என்று கேட்டார். நான் சின்னச் சின்னதாகக் கேள்விகள் கேட்க, அவர் பிறந்த வருடம், அவர் அம்மா பெயர், அப்பா பெயர், மனைவி, குழந்தைகளின் பெயர்களை நிதானமாகச் சொன்னார். எல்லா விவரங்களையும் நான் குறித்துக்கொள்ளவும் என் முதுகில் தட்டி கைகுலுக்கி விடை கொடுத்தார்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமும், அதைத் தாண்டிய துக்கமும் உள்ளுக்குள் பொங்கிப் பெருகும். ஏனென்றால், இந்தப் புகைப்படம் எடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் ராஜீவ் காந்தி பிரசாரத் துக்காக ஸ்ரீபெரும்புதூர் கிளம்பிப் போனார். அதன் பிறகு அவர் டெல்லிக்குத் திரும்பவே இல்லை!''

- பி.ஆர்.கண்ணன், டெல்லி-5.


''ஸ்காட்லேண்ட் யார்டு அதிகாரிகள், லண்டன் போலீஸின் மோப்ப நாய்கள், ஆயுதச் சோதனைக்கான ஆள் தடவல் குழு என்று லண்டன் இந்திய ஒய்.எம்.சிஏ. மாணவர் தங்கும் விடுதி திமிறித் திண்டாடியது.

நிகழ்ச்சி - விடுதியின் வைர விழா. ஆண்டு - 1980. லண்டன் பல்கலைக்கழகத்தில், நான் 'வளரும் நாடுகளில் பொதுச் சுகாதாரம்' பற்றிய முதுகலைப் பட்டப்படிப்பு பயின்ற காலகட்டம். விழாவின் முக்கிய விருந்தினர்- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்! அனைவருக்கும் அடையாள அட்டை. வரிசையில்தான் வர வேண்டும். டை கட்டியிருக்க வேண்டும். கை கட்டக் கூடாது (அட்டென்ஷனில்தான் நிற்க வேண்டும்!) 'அவர்' பேசினால் மட்டுமே பேச வேண்டும். அனுமதிக்கப்பட்ட புகைப்படக்காரர்தான் படம் எடுக்கலாம், இத்யாதி... இத்யாதி!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

அறிமுகப் படலத்தில் என் முறை முடிந்த பின், 'பட்டம் பெற்ற பின் நாடு திரும்புகிறாயா?' என்று கேட்டார். அவர் கேட்ட தொனி என்னை ஏனோ உசுப்பிவிடவே, அன்றைய 'இளைஞனான' நான், 'இங்கு வந்ததே போவதற்குத்தான். என் தொண்டு தாய் நாட்டுக்கு மட்டுமே!' என்று பதில் உரைத்தேன். அந்தப் பதில் அவர் எதிர்பாராதது. அது அவர் முகத்தில் ஏற்படுத்திய சிறிய அதிர்வை இன்று நினைவுகூர்கையிலும் என்னுள் பிரமிப்பு!''

- எம்.பி.எஸ்.ராமன், பெங்களூரு.


''1990-ம் வருடம் எனக்குத் திருமணமான புதுசு. என் நாத்தனாருடன் கொடைக்கானல் சென்றோம். ஊருக்குள் குளிரவே இல்லையே என்று கொஞ்சம் உள்ளடர்ந்த பகுதிக்கு மலையேறிச் சென்றோம். அங்கு சில ஆட்கள் நின்றுகொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன... ஏது என்று புரியாமல் யாரிடமாவது விசாரிக்கலாம் என்று பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தால்... பிரபு, கௌதமி!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

இருவரும் தட்டு நிறைய பலாச் சுளைகளை அடுக்கிவைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அருகில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. (அது 'ராஜா கைய வெச்சா' படத்தின் சூட்டிங்.)

போட்டோ என்றதும், பிரபுவும் கௌதமியும் எங்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 'ஹலோ', 'ஹவ் ஆர் யு?, 'வேர் ஆர் யு கமிங் ஃப்ரம்?' என்று ஆங்கிலத்தில் கௌதமி பேசிவிட்டு, மீண்டும் பலாச்சுளை தட்டுப் பக்கம் அமர்ந்துகொண்டார்.

என் நாத்தனார் பிரான்ஸில் இருந்து வந்திருக்கிறார் என்றதும் பிரபு அவருடன் பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கிவிட்டார். அவர் பெங்களூரில் படிக்கும் போது பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகப் படித்தாராம். நாங்கள் ரொம்ப ரொம்ப ஹேப்பியாக அந்த இடத்தில் இருந்து இறங்கி வந்தோம். ஆனால், சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், சாலையில் சென்றுகொண்டு இருந்தவர்களிடம், 'பிரபு, கௌதமி மேல சூட்டிங்ல இருக்காங்க!' என்று உளறி விட்டோம். அதுவரை அமைதியாக, ரகசியமாக நடந்துகொண்டு இருந்த சூட்டிங் ஸ்பாட் அதன் பிறகு களேபரமாகிவிட்டது!''

- மேரிராஜ், பாண்டிச்சேரி-11

வி.ஐ.பி-க்களுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த புகைப்படத்தையும், அந்த அனுபவத்தையும் செம ஜாலியா எழுதி அனுப்புங்க. பிரசுரமானால், பரிசு ரூ.500.

அனுப்ப வேண்டிய முகவரி:
'வாசகர்களே... வாங்க கலக்கலாம்!',
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை-2. இ- மெயில்: av@vikatan.com

 
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!