<p><span style="color: #ff0000"><strong>''விஜய் கட்சி ஆரம்பித்து, 2016-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்?'' </strong></span></p>.<p> ''விஜயகாந்த் கட்சிக்கு 8 சீட் ஒதுக்குவார் ஜெயலலிதா!''</p>.<p><strong>- பேச்சியப்பன், ராஜபாளையம். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''ஆ.ராசா..?'' </strong></span></p>.<p>''மன்னிக்கவும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்!''</p>.<p><strong>- எஸ்.விவேக், சென்னை-53. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''ஒரு கவிதையில் அரசியல் இருப்பது கவிதையின் அழகைக் கெடுத்துவிடுமா?'' </strong></span></p>.<p>''நிச்சயமாக இல்லை. யவனிகா ஸ்ரீராமின் கீழ்க்கண்ட கவிதை, எண்ணெய்க்காக அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் செய்யும் ஆக்கிரமிப்பு குறித்தும் 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ குறித்தும் பேசுகிறது. இது ஓர் அரசியல் கவிதையாக இருந்தபோதும், கவிதையின் அழகு கெடாமல் இருக்கிறதே!</p>.<p>'பேரீச்சையும் கசடு எண்ணெயும்<br /> விற்கும் வணிகன் ஒருவனை<br /> அவர்கள் நீதிமன்றத்தில் விசாரித்தார்கள்.<br /> மோசமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக<br /> அவன் மீது குற்றச்சாட்டு.<br /> அவனோ தனது கடவுளின் நியாயத் தீர்ப்பிற்கு<br /> உட்பட்டே ஐந்து முறை தொழுது<br /> தனது நிலத்தில் தனது அரிசியைப்<br /> பெற்றுக்கொள்வதாகவும்<br /> பேரீச்சையும் கசடு எண்ணெயும்<br /> ஒரு போதும் ஆயுதமாகாது எனவும்<br /> கண்ணீருடன் முறையிட்டான்.<br /> வாதியோ ஒரு குளிர்பானத் தரகன்.<br /> உலகின் நன்னீர் நிலைகளையெல்லாம்<br /> குளிர்பானமாக்கி சேமித்திருப்பவனும்கூட<br /> மேலுமான குற்றச்சாட்டில் அவன் சொன்னான்<br /> ஒட்டகங்களுக்கும் அதன் முதுகினைப் போன்ற<br /> பள்ளத்தாக்குகளுக்கும் அடியில்<br /> இவன் பிள்ளைகளே ஆயுதமாகப்<br /> பதுங்கியிருக்கிறார்கள் எனவும்<br /> கசடு எண்ணெய், குளிர்பானத்தைவிட<br /> மதிப்பு மிகுந்தது எனவும் ஞாபகமூட்டினான்<br /> ஆழ்ந்த யோசனையிலிருந்து விடுபட்ட நீதிபதி<br /> உலக நலனை முன்னிறுத்தி<br /> கசடு எண்ணெயைத் தரகனுக்கும்<br /> குளிர்பானத்தை வணிகனின் பிள்ளைகளுக்கும்<br /> மாற்றித் தரும்படி உத்தரவிட்டார்.<br /> ஒட்டகங்களுக்கு அடியில் பதுங்கியிருப்பவர்களைக்<br /> கண்டுபிடிப்பவர்களுக்கு பணமுடிப்பு<br /> அறிவிக்கப்பட்டது<br /> அதிலிருந்து<br /> கசடு எண்ணெய் நிரப்பப்பட்ட<br /> அயல்நாட்டு வாகனங்களில் அமர்ந்து<br /> குளிர்பானங்களைக் குடித்துக்கொண்டிருப்பவர்கள்<br /> தவிர<br /> ஏனையோர் ஆயுதங்களுக்கான<br /> சோதனைகளுக்கு<br /> எப்போதும் ஆடை அவிழ்த்து நிற்க உத்தரவாயிற்று!''’</p>.<p><strong>- கா.சாதனா, மதுரை.</strong></p>
<p><span style="color: #ff0000"><strong>''விஜய் கட்சி ஆரம்பித்து, 2016-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்?'' </strong></span></p>.<p> ''விஜயகாந்த் கட்சிக்கு 8 சீட் ஒதுக்குவார் ஜெயலலிதா!''</p>.<p><strong>- பேச்சியப்பன், ராஜபாளையம். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''ஆ.ராசா..?'' </strong></span></p>.<p>''மன்னிக்கவும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்!''</p>.<p><strong>- எஸ்.விவேக், சென்னை-53. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''ஒரு கவிதையில் அரசியல் இருப்பது கவிதையின் அழகைக் கெடுத்துவிடுமா?'' </strong></span></p>.<p>''நிச்சயமாக இல்லை. யவனிகா ஸ்ரீராமின் கீழ்க்கண்ட கவிதை, எண்ணெய்க்காக அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் செய்யும் ஆக்கிரமிப்பு குறித்தும் 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ குறித்தும் பேசுகிறது. இது ஓர் அரசியல் கவிதையாக இருந்தபோதும், கவிதையின் அழகு கெடாமல் இருக்கிறதே!</p>.<p>'பேரீச்சையும் கசடு எண்ணெயும்<br /> விற்கும் வணிகன் ஒருவனை<br /> அவர்கள் நீதிமன்றத்தில் விசாரித்தார்கள்.<br /> மோசமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக<br /> அவன் மீது குற்றச்சாட்டு.<br /> அவனோ தனது கடவுளின் நியாயத் தீர்ப்பிற்கு<br /> உட்பட்டே ஐந்து முறை தொழுது<br /> தனது நிலத்தில் தனது அரிசியைப்<br /> பெற்றுக்கொள்வதாகவும்<br /> பேரீச்சையும் கசடு எண்ணெயும்<br /> ஒரு போதும் ஆயுதமாகாது எனவும்<br /> கண்ணீருடன் முறையிட்டான்.<br /> வாதியோ ஒரு குளிர்பானத் தரகன்.<br /> உலகின் நன்னீர் நிலைகளையெல்லாம்<br /> குளிர்பானமாக்கி சேமித்திருப்பவனும்கூட<br /> மேலுமான குற்றச்சாட்டில் அவன் சொன்னான்<br /> ஒட்டகங்களுக்கும் அதன் முதுகினைப் போன்ற<br /> பள்ளத்தாக்குகளுக்கும் அடியில்<br /> இவன் பிள்ளைகளே ஆயுதமாகப்<br /> பதுங்கியிருக்கிறார்கள் எனவும்<br /> கசடு எண்ணெய், குளிர்பானத்தைவிட<br /> மதிப்பு மிகுந்தது எனவும் ஞாபகமூட்டினான்<br /> ஆழ்ந்த யோசனையிலிருந்து விடுபட்ட நீதிபதி<br /> உலக நலனை முன்னிறுத்தி<br /> கசடு எண்ணெயைத் தரகனுக்கும்<br /> குளிர்பானத்தை வணிகனின் பிள்ளைகளுக்கும்<br /> மாற்றித் தரும்படி உத்தரவிட்டார்.<br /> ஒட்டகங்களுக்கு அடியில் பதுங்கியிருப்பவர்களைக்<br /> கண்டுபிடிப்பவர்களுக்கு பணமுடிப்பு<br /> அறிவிக்கப்பட்டது<br /> அதிலிருந்து<br /> கசடு எண்ணெய் நிரப்பப்பட்ட<br /> அயல்நாட்டு வாகனங்களில் அமர்ந்து<br /> குளிர்பானங்களைக் குடித்துக்கொண்டிருப்பவர்கள்<br /> தவிர<br /> ஏனையோர் ஆயுதங்களுக்கான<br /> சோதனைகளுக்கு<br /> எப்போதும் ஆடை அவிழ்த்து நிற்க உத்தரவாயிற்று!''’</p>.<p><strong>- கா.சாதனா, மதுரை.</strong></p>