<p><strong>நா</strong>ன் இதுவரை அதிக முறை பார்த்த படம் ‘பாகுபலி 2’. திரையரங்கில் மட்டுமே எட்டு முறை பார்த்தேன். அந்தப் படத்தின் கதையிலிருந்து காஸ்ட்யூம் வரை எல்லாமே எனக்கு ரொம்பவே பிடிக்கும். நடிப்பும் இசையும் தயாரிப்பும் என்னை இன்னோர் உலகத்துக்கே கொண்டு போயிடுதுன்னுகூட சொல்லலாம். </p><p>இப்பவும் யூடியூப் பக்கம் போகும்போது, ‘பாகுபலி 2' படம் சம்பந்தமான வீடியோக்கள் ஏதாவது கண்ல மாட்டுச்சுன்னா, பார்த்துட்டுதான் வெளியே வருவேன்!</p>.<p>எனக்கு டிரஸ் ரொம்ப பிடிக்கும். நான் சென்னைக்கு வந்தபிறகு, ஊர்ல இருந்து என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்,அப்பா என்னை அழைத்துக்கொண்டு போய் நிறைய டிரஸ் வாங்கிக் கொடுப்பார். அப்பா, இப்போ இல்லை... </p><p>கடைசியா என்னை பார்க்க வந்தபோது, எங்கப்பா வாங்கி தந்த இந்தப் புடவைதான் எனக்கு மறக்கவே முடியாத பரிசு... பொக்கிஷமும்கூட!</p>.<p>சிறுவயதிலிருந்தே எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் யோகாவுக் கென்று 20 நிமிடங்கள் ஒதுக்கிவிடுவேன். </p><p>இக்கட்டான சூழ்நிலை களில் தெளிவான முடிவெடுக் கின்ற ஆற்றல், யோகா செய்வதால்தான் எனக்கு கை கூடுகிறது. இதுதவிர்த்து, தினமும் புத்தகங்கள் படிப்பதும் என் பழக்கம்.</p>.<p>அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளரும் பேராசிரியருமாக இருப்பதால் வாசிப்பும் எழுத்தும் தான் என்னுடைய முக்கியமான பணியாக இருக்கிறது. அதனால் எழுதுகிற நேரம்போக ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து மணி நேரம் புத்தகங்கள் வாசிப்பேன். நெடுங்காலமாகவே எனக்கான பொழுதுபோக்கு வாசிப்பு, வாசிப்பு, வாசிப்புதான்!</p>
<p><strong>நா</strong>ன் இதுவரை அதிக முறை பார்த்த படம் ‘பாகுபலி 2’. திரையரங்கில் மட்டுமே எட்டு முறை பார்த்தேன். அந்தப் படத்தின் கதையிலிருந்து காஸ்ட்யூம் வரை எல்லாமே எனக்கு ரொம்பவே பிடிக்கும். நடிப்பும் இசையும் தயாரிப்பும் என்னை இன்னோர் உலகத்துக்கே கொண்டு போயிடுதுன்னுகூட சொல்லலாம். </p><p>இப்பவும் யூடியூப் பக்கம் போகும்போது, ‘பாகுபலி 2' படம் சம்பந்தமான வீடியோக்கள் ஏதாவது கண்ல மாட்டுச்சுன்னா, பார்த்துட்டுதான் வெளியே வருவேன்!</p>.<p>எனக்கு டிரஸ் ரொம்ப பிடிக்கும். நான் சென்னைக்கு வந்தபிறகு, ஊர்ல இருந்து என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்,அப்பா என்னை அழைத்துக்கொண்டு போய் நிறைய டிரஸ் வாங்கிக் கொடுப்பார். அப்பா, இப்போ இல்லை... </p><p>கடைசியா என்னை பார்க்க வந்தபோது, எங்கப்பா வாங்கி தந்த இந்தப் புடவைதான் எனக்கு மறக்கவே முடியாத பரிசு... பொக்கிஷமும்கூட!</p>.<p>சிறுவயதிலிருந்தே எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் யோகாவுக் கென்று 20 நிமிடங்கள் ஒதுக்கிவிடுவேன். </p><p>இக்கட்டான சூழ்நிலை களில் தெளிவான முடிவெடுக் கின்ற ஆற்றல், யோகா செய்வதால்தான் எனக்கு கை கூடுகிறது. இதுதவிர்த்து, தினமும் புத்தகங்கள் படிப்பதும் என் பழக்கம்.</p>.<p>அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளரும் பேராசிரியருமாக இருப்பதால் வாசிப்பும் எழுத்தும் தான் என்னுடைய முக்கியமான பணியாக இருக்கிறது. அதனால் எழுதுகிற நேரம்போக ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து மணி நேரம் புத்தகங்கள் வாசிப்பேன். நெடுங்காலமாகவே எனக்கான பொழுதுபோக்கு வாசிப்பு, வாசிப்பு, வாசிப்புதான்!</p>